Monday 13 October 2014

விடுதல் அறியா முறையீடு

        விடுதல் அறியா முறையீடு 
கவிதாயினி ஜி.ஜே .தமிழ்ச்செல்வி 
                     
உன் எண்ணங்களால்
ஏன் என்னை வந்து தீண்டுகிறாய்
நீ யாரோவென
ஆனபிறகு

தூயதான அன்பைத் 
திருப்பினாய்
வேண்டாம் போவென
அழிச்சாட்டியமாக

என் கண்ணீரும் தவிப்பும்
கூக்குரலும் அழுகையும்
உன் ஜீவனைத்
தீண்டவில்லை

அதன் மெய்ம்மையைத் 
துடிக்கத் துடிக்கச் சோதித்து
வலிகளால் பதியனிட்டாய்
நாட்களை

                                             


உனக்கானதொரு இடமென்று
கிழிசலை முன் எறிந்தாய்
அது எனக்கானதாகக்
கொள்வதெப்படி?

மீண்டும் வந்து நில்
நட்பினால் சிருங்காரிப்பேன்
என்பாயோ - அது
காதலில் கரைந்த பிறகு?

பட்டுப் போன வேருக்கு
நீருற்ற வந்தாயோ
இயல்புணராமல்

உன் மனோ ராஜ்யத்தின் படி
போ உன் பாதையின் வழி அங்கே
பாதை மாறாது செல் 
திரும்பிப் பார்ப்பானேன்
நாம் ஒன்றாய் பயணித்த
அந்த நாட்களை!

No comments:

Post a Comment