Saturday 20 December 2014

இ.தே.ஏ.12 பதுங்குக்குழியில் குண்டடி

          
                     

                                          
       இ.தே.ஏ.12                     பதுங்குக்குழியில் குண்டடி
சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு வழங்கிய ஏராளமான படைக்கலங்களுடன் உருவானப் படைப்பிரிவு அது. ஆகையினால் 1965-ல் இந்திய-பாகிஸ்தானிய போரில் மிக முக்கிய பங்கு வகித்தது அந்த படைப்பிரிவு போர் மேகங்கள் 1965 ஆகஸ்ட் மாதத்திலேயே சூழ ஆரம்பித்து விட்டதால் அந்த படைப்பிரிவு வடகிழக்குப் பகுதியிலிருந்து பஞ்சாப் வந்துவிட்டனர். போர் ஆரம்பித்த நாலைந்து நாட்களுக்குள் எந்த பகுதியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதோ அங்கு அந்த படைப்பிரிவு போரிட முனைந்தது. எதிரியின் தாக்குதலும் அங்கு மிகவும் உக்கிரமமாக இருந்தது. பாகிஸ்தானிய வான் படையினர் பத்தான்கோட் ஜம்மு பகுதியில் மீண்டும் மீண்டும் குண்டு வீசினர். Straffng என்று சொல்லப்படுகின்ற முறையில் அதாவது விமானத்தில் கீழ்நோக்கி மீடியம் வகை மெஷின் கன் பொருத்தி இயக்கவும், விமானம் நமது ஆக்கிரமிப்புப் பகுதியில் சுற்றிச் சுற்றி இரண்டு மூன்று முறை வந்து போவதுமாக இருந்தது. இதனால் தரைமட்டத்தில் இல்லாமல் பதுங்குக்குழியில் இருப்பவர்களும் கொல்லப்படலாம். அப்படிப்பட்ட போர்ச் சூழலில் கணேசன் காலில் குண்டடிபட்டு போர்க் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நண்பர்கள் இருவரும் சில ரகசியக் குறியீடுகள் முறையில் தங்களது போர்க்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இப்படி 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. இருவருமே நாட்டின் அவசர நிலை காரணமாக இராணுவத்தில் சேர்ந்தவர்களாதலால் அந்த நிலை நீக்கப்பட்ட உடன் இராணுவத் தலைமையகம் அவர்களுக்குக் கடிதம் அனுப்பினர். அதாவது அவர்கள் தொடர்ந்து இராணுவத்தில் இருக்க விருப்பப்படுகிறார்களா அல்லது அவர்களது பொதுப் பணித்துறை வேலைக்குத் திரும்பி விடுகிறார்களா என்று கேட்டிருந்தனர். திருநாவுக்கரசு தான் இன்னும் இரண்டு வருடம் மட்டுமே பணியாற்றி விட்டுப் பொதுப் பணி துறைக்குப் போய் விடுவதாகத் தெரிவித்து இருந்தார். கணேசன் பட்டயப்படிப்பு மட்டுமே படித்தவர். பொதுப்பணித் துறையில் அவ்வளவு சிறந்த எதிர்காலம் இருக்காது. அதற்குப் பதிலாக அவர் இராணுவத்தில் தொடர்ந்தால் அவர் உடனடியாக பட்டப் படிப்புக்காகப் பொறியியற் கல்லூரி அனுப்பப்படுவார். மேலும் மிகவும் சுறுசுறுப்பாகவும் வீரதீர விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதால் இராணுவமே சிறந்தது. ஆனால், அவர் இராணுவத்தில் தொடர விருப்பப்பட்டால் மீண்டும் இராணுவத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். இது பற்றி திருநாவுக்கரசு விடமும் கணேசன் கலந்தாலோசித்தார். கணேசன் மீண்டும் இராணுவத் தேர்வுக்குச் செல்வது என்றும் அப்படித் தேர்வாகாவிட்டால் பொதுப்பணி துறைக்கு வந்து விடுவது என்றும் முடிவெடுத்தார்கள்.

இறைவனது கருணை கணேசன் பக்கமிருந்தது. பலவிதமான இயற்கை இடையூறுகளுக்கிடையில் மேகலாயா மாநிலத்திலிருந்து அலாகபாத்தில் உள்ள இராணுவத் தேர்வு மையத்திற்குச் சென்று நான்கு நாட்கள் நடைபெறும் அந்த தேர்வில் கலந்து கொண்டார். முடிவு அவருக்கு சாதகமாக இருந்தது. கணேசன் இந்திய இராணுவத்தில் ஒரு நிரந்தர அதிகாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அதனால் 1970-ம் ஆண்டு அவர் மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் உள்ள இராணுவப் பொறியியற் கல்லூரிக்கு மூன்றாண்டு கால பட்டப்படிப்புக்கு அனுப்பப்பட்டார். அதிர்ஷ்ட வசமாக நண்பர் திருநாவுக்கரசு பணிமாற்றம் பெற்று பதவி உயர்வில் @மஜர்  என்ற தகுதிபெற்று பூனேவுக்கு கேரிஸன் என்ஜினியர்  ஆக வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இராணுவப் பொறியியற் கல்லூரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருநாவுக்கரசு பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி இருந்தார். கணேசன் மிகவும் பிரசித்திப் பெற்ற ராயல் என்பீல்ட்  மோட்டார் சைக்கிள் அதுவும் மிகவும் கனமான 3.5 புல்லட் வாங்கி இருந்தார். கல்லூரியிலிருந்து எத்தனையோ நாட்கள் திருநாவுக்கரசு வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விடுவார்.5-6 ஆண்டு கால இடைவெளி அவர்களது தனி வாழ்விலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.
            உயிரோடு இருக்கும் போது உணர முடியாத தாயின் பங்கு
கணேசனின் தாய் 1970-ம் ஆண்டு இறந்து போனார். ஒரு குடும்பத்தில் தாயின் பங்குமகத்தானது என்பதை அவர் உயிரோடு இருக்கும் போது உணரப்படுவதில்லை. ஏழு குழந்தைகள் பெற்றெடுத்த அவர் அந்த ஏழுபேரையும் எப்படிக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்பது அவர் இறந்த பிறகுதான் தெரிய வந்தது. திருமணமானவர்கள் தங்கள் தங்களது குடும்பமே பெரிதென வாழ்ந்தனர். திருமண மாகாதவர்கள் கயிறறுந்த காற்றாடி என உலகச் சூழலில் சிக்கி பரிதவித்தனர். இதில் திருமணமாகாத கணேசனின் நிலை என்னவென்று சொல்லத் தேவை இல்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரது தம்பிக்கு அன்னை மறைந்த சில நாட்களுக்குள் திருமணம் செய்ய நேர்ந்தது. அது கணேசனின் நிலையை மேலும் சங்கடமாக்கியது. கணேசனுக்குத் திருமண ஏற்பாட்டின் போதெல்லாம் அண்ணன் இருக்கையில் தம்பிக்கு ஏன் திருமணம் செய்வித்தார்கள் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப பதில் தேடிக் கொண்டனர். தமிழ்நாட்டில் இராணுவத்தினர்க்கு மணவினை அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. இதுபோன்ற காரணங்களினால் கணேசன் எதிர்பார்த்த கால இடைவெளியில் திருமணம் புரிய முடியவில்லை.

இரண்டு தங்கைகளுடன் பிறந்து வளர்ந்திருந்த திருநாவுக்கரசு திடீரென்று ஒரு தங்கையை இழந்தார். போதிய மருத்துவ வசதி இல்லாமலேயேதான் பெண் இறந்தாள் என்று நினைத்த அவரது பெற்றோர் எக்காரணத்øத் கொண்டும் அவர் இராணுவத்தில் நிரந்தரமாக இருக்கக் கூடாது என்று நிர்பந்தப்படுத்தினர். இதனால் திருநாவுக்கரசு ஏழு ஆண்டுகால இராணுவ வாழ்க்கைக்குப் பிறகு பொதுப் பணித்துறைக்குத் திரும்பினார். எத்தனையோ நாட்கள் அவர்களது வீட்டில் கணேசன் தங்கி இருந்திருக்கிறார். பாலைவனம் போன்ற தனது வாழ்வில் திருநாவுக்கரசின் வீடு ஒரு பசுஞ்சோலை என்று ஆறுதல் பெற்றிருக்கிறார். ஆனாலும், அவர்களது வழி தனித்தனி என்றாகி விட்டது. 1971ம் ஆண்டு திருநாவுக்கரசு இராணுவத்தை விட்டு விலகிவிட்டார். கணேசன் தனது பொறியியற் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.

                                   இந்திய-பாகிஸ்தான் போர்
இந்நிலையில் எதிர்பாராத நேரத்தில் இந்திய-பாகிஸ்தானின் போர் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமானது. கிழக்கு பாகிஸ்தானின் கலவரம் காரணமாக ஏற்பட்ட போர் அது. கிழக்கு வங்காளம் என்ற அந்தப்பகுதி ஒரு பெரிய சமவெளி. கங்கையின் ஆற்றுப்படுகையே கிழக்கு வங்கம். ஏராளமான நதிகள் குறுக்கும் நெடுக்கும் பாய்கின்றன. இந்திய இராணுவம் அங்கு போரிட நேர்ந்தால் ஏராளமானப் பொறியாளர் படைப் பிரிவினர் தேவைப்படும். ஆனால், சுமார் 400 - 500 பொறியாளர் அதிகாரிகள் இராணுவப் பொறியியற் கல்லூரியில் பலவிதமான பயிற்சியில் / உயர் படிப்பில் இருந்தனர். இதனால் பொறியியற் கல்லூரி உடனடியாக மூடப்பட்டு அதிகாரிகள் படைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டனர். கணேசன் தனது சாமான்களை எல்லாம் ஒரு நண்பரின் வீட்டில் போட்டார். விபரங்களடங்கிய ஒரு கடிதமெழுதித் தான் உயிரோடு திரும்பாவிட்டால் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்துஅதன்படி நடவடிக்கை எடுக்கும்படி சொல்லிவிட்டு அவர் படைப்பிரிவு சென்று விட்டார். பொதுப்பணி துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்த திருநாவுக்கரசு தனது நண்பரின் போர்க்கால சூழ்நிலை அறிந்து மிகவும் ஆறுதலாக அவருக்குக் கடிதமெழுதினார்.

உலக வரலாற்றில் ஒரு புதுவிதமான போர் அணுகுமுறையாக கிழக்குப் பாகிஸ்தானிய போர் முடிந்து “பங்களாதேஷ்” என்ற புதிய நாடு உதயமானது. அப்படிப்பட்ட புரட்சிகரமானப் போரில் கலந்து கொண்ட கணேசன் கொமிலா, மைனாமட்டி, டாக்கா போன்ற நகரங்களின் வீழ்ச்சியையும் 93,000 பாகிஸ்தானிய இராணுவத்தினர் 16 டிசம்பர் 1971 அன்று மாலை 41/2 மணியளவில் டாக்கா குதிரைப் பந்தய மைதானத்தில் இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்ததையும் கண்டுகளித்து விட்டு எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் மீண்டும் இராணுவப் பொறியியற் கல்லூரி திரும்பினார். போரின் அழிவுகளை நேரில் கண்டு திரும்பிய கணேசனுக்கு திருமண ஏற்பாட்டில் அதே போர் காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அதைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் 1973-ம் ஆண்டு 28 மே மாதம் அவர் பொறியியற் கல்லூரியில் சிவில் என்ஜூனியரிங் பிரிவில் முதல் மாணவனாகப் பட்டம் பெற்றார்.
                                                     பெண் பார்க்கும் படலம்
பட்டப் படிப்பு முடிந்தவுடன் கணேசன் பணிமாற்றம் பெற்று பங்களூர் வந்தார். ஊருக்கு அருகில் இருக்கும் அந்த காலகட்டமே அவர் திருமணம் செய்து கொள்ள சிறந்தது என்று பலவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அவரது சின்ன அண்ணன் ஒரு மாதம் போல் விடுமுறை போட்டுவிட்டுப் பல இடங்களிலும் பெண் பார்த்தனர். குடியாத்தம் அருகில் ஒரு B.Sc., M.B.B.S, படித்த அரசாங்க பெண் மருத்துவரின் குடும்பத்தினர் கணேசனின் திருமணத்தில் விருப்பம் காட்டினர். பெண், மாப்பிள்ளை பார்த்து முடிவெடுக்கும் நிலையில் கணேசன் தனது நண்பர் திருநாவுக்கரசை சந்தித்து அவரும் அவரது துணைவியும் குடியாத்தம் சென்று அந்தப் பெண்ணை பார்த்து வரும்படிக் கேட்டுக் கொண்டார். தனது நண்பருக்கு செய்யக் கூடிய மற்றொரு முக்கிய உதவி என்று நினைத்து அவர்கள் இருவரும் குடியாத்தம் சென்று அந்தப் பெண்ணையும் அவர்கள் குடும்பத்தினரையும் பார்த்து வந்தனர்.

 சுமார் 7 ஆண்டுகள் திருமணமானவராக இராணுவத்திலிருந்த நண்பர் திருநவுக்கரசு அந்தப் பெண் கணேசனுக்கு ஏற்றவராக இருக்க மாட்டார் என்று கருத்து தெரிவித்தார். திருமணத்திற்காகப் பெண் - மாப்பிள்ளை பார்க்கும் போது எந்த காரணத்திற்காக ஒரு வரன் ஏற்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை இரு வீட்டாருமே தனித்தனியாக விவாதிப்பது மிகவும் நல்லது. திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணும் பையனும் வெளிப்புற தோற்றம், குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில் முடிவெடுத்தாலும் வயது முதிர்ந்தவர்கள் மற்ற காரணங்களில் கவனம் செலுத்தி அதன் நன்மை தீமைகளை மணமக்களாகப் போகுபவர்களுக்குத் தெரிவிப்பது என்பது நல்ல முடிவு. கணேசன் தனது நண்பரின் முடிவை ஏற்றுக் கொண்டார். இதனால் திருநாவுக்கரசு அதன்பிறகு கணேசனின் திருமணத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். கணேசனுக்குப் பார்த்த பெண்களின் விபரங்களை எல்லாம் கேட்டு அவரும் கணேசனின் சின்ன அண்ணனும் மீண்டும் ஒருமுறை அந்த விபரங்களையும் பார்த்தனர். அதன் அடிப்படையில் சென்னைதேனாம்பேட்டையில் உள்ள பி அண்ட் டி காலனியில் பார்த்திருந்த பெண்ணின் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துப் பேசினர். இன்னும் சில இடங்களிலும் பெண் பார்த்தனர்.

                     உடுக்கை இழந்தவன் கைபோல உதவிய நட்பு

1973-ம் ஆண்டு தீபாவளி சமயம் திருநாவுக்கரசு தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கச் சென்றிருக்கிறார். அங்கு ஏதோ சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண் அவர் கவனத்தைக் கவர்ந்து கணேசனுக்கு இவளைப் போன்ற பெண் மனைவியாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே படி இறங்க எத்தனிக்கையில் அவர்கள் சில நாட்களுக்கு முன் க-கூ காலனியில் சந்தித்த அம்மையார் அமர்ந்திருக்கக் கண்டு வணக்கம் சொல்லி அவர்கள் பெண்ணுக்குத் திருமணமாகி விட்டதா என்று விசாரித்திருக்கிறார். இன்னும் இல்லை என்றும் அதோ நின்று கொண்டிருக்கிறாளே அவள்தான் தனது பெண் என்றும் அந்த அம்மையார் சற்று முன்பு திருநாவுக்கரசு பார்த்திருந்த அதே பெண்ணை சுட்டிக் காட்டியிருக்கிறார். அப்படியா! மகிழ்ச்சி கணேசனுக்கும் இன்னும் திருமணம் நிச்சயமாகவில்லை என்று சொல்லி விட்டு வந்துவிட்டார். அன்று இரவே பெங்களூருக்கு டெலிபோன் செய்து கணேசனை உடனடியாக சென்னை வரச்சொன்னர். நண்பர்கள் இருவரும் கணேசனது சின்ன அண்ணனுடன் கலந்து ஆலோசித்தனர். கணேசனும் அவரது குடும்பத்தினரும் சுமார் 6 மாதங்ளு முன் அந்தப் பெண்ணைப் பார்த்திருந்தாலும் அந்த வரன் வேண்டாம் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. திருநாவுகரசு கணேசனின் சின்ன அண்ணனிடம் இராணுவ வாழ்வில் கணேசனின் தீவிர ஆர்வம், அதற்குத் துணை நிற்கக்கூடிய அந்தப் பெண்ணின் குடும்பப் பாங்கு, அவளது பெற்றோர் உறவினர் போன்ற காரணங்களை எடுத்துச் சொல்லி கணேசனுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதாவது விருப்பு வெறுப்பு உண்டா? என்று கேட்டார். தனக்கு அப்படி ஏதுமில்லை என்றார் கணேசன். 1974ம் ஆண்டு பிப்ரவரி 6ம் நாள் தை பூசப் புதன்கிழமை கணேசனது திருமணம் நடந்தது.

நட்புக்கு இலக்கணமாக எவ்வளவோ உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நண்பனுக்கு “உடுக்கை இழந்தவன் கைபோல” உதவுவதே நட்பு என்கிறார் திருவள்ளுவர். சுமார் 10 ஆண்டுகள் மிக நெருங்கிப் பழகாவிட்டாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழகிவந்த நண்பர்களின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் .

தமிழ் மன்னர்களின் வரலாற்றில் நட்புக்குப் பெயர் பெற்றது கோப்பெருஞ்சோழன் - புலவர் பிசிராந்தையர் நட்பு. பாண்டிய நாட்டுப் புலவரான பிசிராந்தையார் அரசாட்சி செய்வதில் மட்டுமல்லாது அறநெறியிலும் தமிழ் மொழியிலும் வல்லமை பெற்று விளங்கிய கோப்பெருஞ் சோழனை அவனை சந்திக்காமலேயே பெருமதிப்புடன் நேசிக்கிறார். கோப்பெருஞ்சோழனின் மக்களே அவனுக்குப் பகையாகிய பொழுது வடக்கிருந்து உயிர் விட முனைந்தான் சோழன். இதையறிந்த பிசிராந்தையார் தம் உள்ளத்துள் வைத்துப் பூஜித்த நண்பனைத் தனியே வழியனுப்ப விரும்பவில்லை. வடக்கிருக்க முனைந்த மன்னனும் தமது நண்பருக்காக ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள் என்றே சொல்லி அமர்றான். ஓடோடி வந்த பிசிராந்தையார் நண்பனுக்கருகிலமர்ந்து வடக்கிருந்து தானும் உயிர் விடுகிறார். முன்னர் சந்திக்காமலேயே ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பிசிராந்தையார் வருவார் என்று கோப்பெருஞ்சோழன் சொல்லிய விதமே அவர் ஓடிவர அøத் கண்ட பொத்தியார் என்ற புலவர் பாடுகிறார்.

நினைக்குங்காலை மருட்டைத்தே
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக
இனையதோர் லை ஈங் வருதல்
“வருவன்” என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே! (புற-217)

மாட்சிமை பொருந்திய மன்னன் தன்மக்களே தனக்குப் பகையானதறிந்து வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணியது மிகப்பெரும் வியப்பு. பிறநாட்டிலே வாழும் ஒரு புலவன் நட்பின் காரணமாக ஓடோடி வந்து அவனுடன் சேர்ந்தே உயிர் விடுவது அதனினும் வியப்பு. தன் ஆட்சி செல்லாத நாட்டிலும் சான்றோர்களின் நெஞ்சில் இடம் பெற்ற கோப்பெருஞ்சோழன் எத்தனை உயர்ந்த வேந்தன் என்கிறார்.

கால ஓட்டத்திலே கணேசன் - திருநாவுக்கரசு ஆகியவர்களின் நட்பு வீண் போகவில்லை. பொதுப்பணி துறையில் தலைமைப் பொறியாளராகத் திருநாவுக்கரசு ஓய்வு பெற்றார். இராணுவப் பணியிலிருக்கையில் இந்தியாவின் தென்துருவ ஆய்வு தளத்திற்கு தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்டார்டிகாவில் 11/2 வருடம் பணியாற்றி நாட்டிற்கும் தனக்கும் புகழைச் சேர்த்து இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது பெற்று கர்னல் என்ற பதவி உயர்வில் சென்னையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றார் கணேசன் அவர்களது குழந்தைகள் வளர்ந்து பல உயர் நிலைகளிலிருக்கிறார்கள். திருநாவுக்கரசின் அனுமானம் பொய்க்காமல் திருமதி கணேசன் சிறந்த குடும்பத் தலைவியாக வளர்ந்து இரு ஆண்மக்களுக்குத் தாயானார். மூத்த மகன் இராணுவ அதிகாரியாகவும் இளைய மகன் பொறியாளர் மற்றும் மேலாண்மை வல்லுனர் ஆகவும் பணியாற்றுகிறார்கள்.[வளரும்]

Thursday 18 December 2014

வையவன் 75 விழா சென்னை மாநிலக்கல்லூரி மைய ஆலோசகர்  முனைவர் வி. ஆனந்தமூர்த்தி அவர்கள் தலைமையில்  பிரபல கல்வியாளர் எம்.ஜே ரஞ்சன் தாஸ் முன்னிலையில் நடந்தது 
வளவ துரையன் எழுதிய 
ஸ்ரீ வைஷ்ண ஆசார்ய வைபவம் என்ற நூலை பிரபல நாவலாசிரியர் திரு. கௌதம நீலாம்பரன் அவர்கள் வெளியிட திருப்பத்தூர் தாமரைக் கண்ணன் பெற்றுக்கொண்டார்.  
வையவன் வாழ்க்கை குறித்து கும்பகோணம் டாக்டர் க.மீனாக்ஷி அவர்கள் எழுதிய இலக்கிய வாழ்க்கை என்ற நூலை சாஹித்ய அகாடெமி உறுப்பினர் பேராசிரியர். டாக்டர் 

jiyik
Kidth; tp. Mde;j%h;j;jp
MNyhrfh;> khepyf; fUT+y ikak;> nrd;id.

Kd;dpiy
jpU. vk;. N[. uQ;rd;jh];
fy;tpahsh;> Nkdhs; SRC ,af;Feh;

tst Jiuad; vOjpa E}y;
‘= it\;zt Mrhh;a itgtk;” - E}y; ntspaPL
khz;GkpF [fj;ul;rfd;
epWtdh;> Mo;thh;fs; Ma;T ikak;> nrd;id.

‘,yf;fpa tho;f;if” - E}y; ntspaPL
Nguhrphpah; ,uhk FUehjd;
rhfpj;a mfhjkp cWg;gpdh;

‘fhw;Wk; ntspr;rKk;” - E}y; ntspaPL
jpU. ghujpghyd;
Nguhrphpah; ,af;Feh;> jkpopay; kw;Wk; gz;ghl;Lg; Gyk;>
jkpo;ehL jpwe;jepiyg; gy;fiyf;fofk;.


‘Njjp Fwpf;fg;gl;l tdk;” - E}y; ntspaPL
jpU. Njtghujp
vOj;jhsh; jpiuf;fijahrphpah;

itatd; vOjpa ‘`hk;nyl;” - Mq;fpy E}y;ntspaPL &
Inaugurating Adyar English Club
jpUkjp. [hdfp fpU\;zd;
Jizj;jiyth;> u\;a el;GwTf; fofk;> jkpo;ehL fpis.

‘milahh; fiy ,yf;fpar;rq;fk;” njhlq;fp itg;gth;
Kidth; mfpyh rptrq;fh;
jkpo;j;Jiwj; jiyth;> ghl;hPrd; fiy kw;Wk; mwptpay; fy;Y}hp> nrd;id.

Vw;Giu
jpU. itatd; mth;fs;

ed;wpAiu
ftpQh; tre;juh[d;
tof;FiuQh;> cah;ePjpkd;wk;> nrd;id.


Tuesday 16 December 2014

இ.தே.ஏ 11வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே


இ.தே.ஏ 11
6.வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே
மனித வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது. குறைகள் ஏதுமற்ற நிலையில் எண்ணற்ற மனிதர்கள் பிறந்தாலும், அவர்களது வாழ்க்கை ஒரே மாதிரி அமைவதில்லை. எண்ணங்கள் மாறுபடுவதால் செயலாக்கமும் அதன் காரணமாக வாழ்க்கை நிலையும் மாறுபடுகின்றன. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்று பெற்றோர்களுக்காக சில கடமைகள் இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது நண்பர்களின் பங்கும் மகத்தானது. நல்ல நண்பர்கள் ஒருவனை நல்வழிப்படுத்தும். தீய நண்பர்கள் அவனைத் தீங்கில் வீழ்ந்து மானம், மரியாதை இழக்கச் செய்து விடுவர். நண்பர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை யார் முடிவு செய்வது? தனிமனிதர்கள் தாம் பொறுப்பேற்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றாலும் உடனிருந்தே உயிர்கொல்லும் நோய் போல நண்பர்கள் சவகாசம் ஒருவனது வாழ்க்கையை மாற்றி அமைக்க வல்லது என்பதில் ஐயமில்லை.

கணேசனது வாழ்க்கையில் அப்படிப்பட்ட நட்புக்கும் இடமிருந்தது. 1962-ம் வருடம் பொதுப் பணிதுறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசன் ஆவுடையார் கோவில் என்ற இடத்திலிருந்து தஞ்சை மாவட்டம் பேரளம் என்ற ஊருக்கு பணிமாற்றம் பெற்று வந்தார். நன்னிலம் தாலுக்காவில் உள்ள பேரளம் ஒரு சிற்றூர். காவிரியின் கிளை நதிகளான நூலார், மஞ்சளார், நண்டலார், வீரசோழன் போன்ற ஆறுகள் அருகாமையில் ஓடுகின்றன. பொதுப் பணிதுறையில் நிரந்தரமானப் பணிகளைக் கவனிக்க காவிரி, வெண்ணாறு போன்ற கோட்டங்கள் இருந்தாலும் பருவ காலங்களில் ஏற்படும் சில வெள்ளப் பெருக்குகள் போன்றவற்றைக் கவனிக்கத் தற்காலிகக் கோட்டங்கள் அவ்வப்பொழுது தோன்றி மறைவதுண்டு. பேரளத்தில் அப்பொழுது, நிரந்தரப் பிரிவு, வெள்ளப் பெருக்குப் பிரிவு மற்றும் சீரமைப்புப் பிரிவு என மூன்று விதமான அலுவலகங்கள் இருந்தன. இதில் கணேசன் வெள்ளப்பெருக்கு பிரிவில் பிரிவு அலுவலராக பணிமாற்றம் பெற்றிருந்தார். அப்பொழுது சீரமைப்புப் பிரிவில் பிரிவு அலுவலராக இருந்தவர் திருநாவுக்கரசு என்பவர். பணியின் காரணமாக இவர்கள் சந்திப்பதுண்டு.

              மாறுபட்ட குணங்கள்  ஒன்று சேர்த்த நட்பு.
திருநாவுக்கரசு விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள பெண்ணாடம் என்ற ஊரைச்சேர்ந்தவர். சாதாரணக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர். உடன்பிறந்த இரண்டு தங்கைகள் பள்ளிப் பருவத்தில் படித்துக் கொண்டிருந்தனர். பேரளத்தில் தனியாக வீடு பார்த்து அங்கு தங்கைகள் மற்றும் எல்லாருக்கும் துணையாகப் பாட்டி என்று குடும்பம் இருந்தது. திருநாவுக்கரசின் தாய் மாமன் சிதம்பரத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெண்ணாடத்தைவிட சிதம்பரம் பெரிய ஊர் என்பதால் திருநாவுக்கரசு தனது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தவர். பள்ளிப்படிப்பு முடிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தார். பலரும் பாராட்டும் விதமாக B.E., (Honours) பாஸ் செய்து பொதுப்பணி துறையில் ஜூனியர் என்ஜினியர் ஆகப் பணித்தேர்வு பெற்று பேரளம் வந்திருந்தார். ஓரினத்துப் பறவைகள் ஒன்றாகச் சேருவது போல் ஒரே மாதிரியானக் குடும்பப் பின்னணியில் இருந்த கணேசனும் திருநாவுக்கரசும் நண்பர்களானது வியப்பில்லை. 

இந்த நட்பில் திருநாவுக்கரசை விட கணேசனே மிகவும் பெருமிதம் கொண்டார். ஏனெனில், கணேசன் பட்டயப் படிப்பு மட்டுமே (Diploma) படித்திருந்தார். “மேலாளர்” (Supervisor) என்ற நிலையில் அவர் பணி இருந்தது. வயதிலும் படிப்பிலும் உயர்ந்தவரான திருநாவுக்கரசு எந்தவிதமானப் பாரபட்சமும் காட்டாமல் மிகவும் அன்பாகவும் அன்னியோன்யமாகவும் கணேசனுடன் பழகுவதும், அவருக்கு அலுவலக உதவிகள், அறிவுரைகள் கூறி ஊக்கப்படுத்துவதும் கணேசனை மிகவும் கவர்ந்தது. ஆனால், திருநாவுக்கரசைவிட கணேசன் இளமையும் சுறுசுறுப்பும் நிறைந்தவர். மேலும், விளையாட்டில் அதிக ஆர்வமில்லாதவர் திருநவுக்கரசு கணேசனோ, மிக மிக ஆர்வமுடன் விளையாடுபவர். இதுபோன்ற சில மாறுபட்ட குணங்கள் அவர்களை ஒன்று சேர்த்திருந்தன.

     சீன ஆக்கிரமிப்பு வழங்கிய இராணுவப் பணி

1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில் இந்திய எல்லைப் புறங்களில் போர் மேகம் சூழ்ந்தது. சீனாவின் இந்திய எல்லைப்புற ஆக்கிரமிப்பினால் இந்திய இராணுவம் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. சுதந்திரத்திற்கு பின் கூட்டு சேராக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்ததாலும் சமாதான அணுகுமுறையினாலும் நாட்டின் பாதுகாப்பிற்குக் கொள்கைகளேப் போதும், இராணுவச் சீரமைப்புத் தேவை இல்லை என்றும் நினைத்த பிரதமர் நேருவுக்கு சீன ஆக்கிரமிப்பு ஒரு பேரிடியாகத் தலையில் இறங்கியது. போதுமான குளிர் பாதுகாப்பு உடைகள் கூட இல்லாமல் இராணுவத்தினர் எதிரிகளுக்கு இயற்கைக் கொடுமைகளுக்கும் இரையாகி ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவம் விரிவுபடுத்தப்பட்டது. 

ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்தனர். நாடு முழுவதுமுள்ள மாநில அரசு ஊழியர்களில் கல்வியறிவும் வயது வரம்புக்குள்ளும் உள்ளவர்கள் இராணுவப் பணிக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கணேசனும் திருநாவுக்கரசும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். இதற்கிடையில் கணேசன் தஞ்சாவூருக்கருகில் மெலட்டூர் என்ற ஊரில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள நீர்தேக்கும் அணைக்கு பொறுப்பேற்க மெலட்டூர் வந்துவிட்டார். இராணுவப் பணியினால் மாநில அரசில் தங்களது வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று திருநாவுக்கரசு நினைத்தார். கட்டுமானப் பணியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாநில அரசில் கணேசன் பணியாற்ற விரும்பவில்லை. ஆகையினால் இருவருமே இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தனர்.

பட்டம் பெற்றிருந்த பொறியாளர்கள் நேரடியாக பங்களூரில் உள்ள இராணுவத் தேர்வு மையத்திற்கு வரவழைக்கப்பட்டு, தேர்வில் பங்கு கொண்டனர். இதனால் திருநாவுக்கரசு உடனடியாக பங்களூர் சென்று தேர்வில் பங்கு கொண்டு வெற்றியும் பெற்றார். கணேசன் சென்னையில் உள்ள முதல் கட்ட தேர்வு மையத்திற்குச் சென்றார். அதிர்ஷ்டவசமாக கணேசனும் தேர்வில் வெற்றி பெற்றார். அது 1963-ம் ஆண்டின் ஆரம்பம். வடமாநிலத்தில் “டேராடூன்” என்ற இடத்தில் மட்டுமே இராணுவ அதிகாரிகளுக்கானப் பயிற்சிக் கல்லூரி இருந்தது. ஆனால், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஏராளமானோர் இராணுவத்தில் சேர ஆரம்பித்த பிறகு சென்னையிலும், மகாராஷ்டிரத்தில் உள்ள “பூனே” என்ற இடத்திலும் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி ஆரம்பித்தார்கள். அவசரநிலை என்றாலும் அதிகாரிகளுக்கானப் பயிற்சி முறையில் இரண்டாண்டு பயிற்சியை சுமார் 10 மாதமாகக் குறைத்திருந்தாலும் இராணுவப் பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது. பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்களின் வயது வித்தியாசம் சுமார் 21 வயதிலிருந்து 30 வயது வரை இருந்தது. படிப்பு வித்தியாசமும் சாதாரண B.A., - B.Sc முதல் M.Tech, போன்ற உயர்படிப்பு வரை இருந்தது. ஆனால், பயிற்சி எல்லாருக்கும் ஒரே மாதிரியே இருந்தது. 

இதனால் உயர் வயது வரம்பில் இருந்தவர்கள் பயிற்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாநில அரசு வேலைக்குத் திரும்பி விட்டார்கள். டேராடூனில் ஆரம்பித்த ஒரு பயிற்சிப் பிரிவில் அதுபோல் அதிகம் பேர் பயிற்சி செய்யாமல் திரும்பி விட்டதால் காலி இடங்களை நிரப்ப உடனடியாக சிலர் டேராடூன் அழைக்கப்பட்டனர். திருநாவுக்கரசு அப்படி அழைக்கப்பட்டு அவர் உடனே டேராடூன் புறப்பட்டுப் போய் விட்டார். அதன்பிறகு அடுத்த பயிற்சி பூனாவில் ஆரம்பிக்கப்பட்டது. கணேசன் பூனாவில் பயிற்சியில் சேர்ந்தார்.

இளமை முதலே மிகவும் சுறுசுறுப்பாக இருந்த கணேசனுக்குப் பயிற்சிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வகுப்பறையில் படிப்பது ஒரு பங்கு என்றால் வெளியில் செய்முறைப் பயிற்சிகள் மூன்று பங்குபோல் இருந்தது. எல்லாவற்றிலும் கணேசன் சிறப்பாகச் செய்தார். 14 கி.மீ. ஓட்டப்பந்தயம், மற்றும் அதுபோன்ற ஒரு தடைகளப் போட்டி(அடுத்தடுத்து தடைகளை ஏற்படுத்தி நடத்தப்படும் @பாட்டி) போன்றவற்றில் கணேசன் பரிசுகள் வென்றார். இதனால் சுமார் 600 பேர்களடங்கிய அவரது பயிற்சி அணியில் அவர் 47-வதாக வந்து பயிற்சி முடித்தார். டேராடூனில் பயிற்சியை முடித்த திருநாவுக்கரசு இராணுவப் பொறியியற் கல்லூரிக்கு மற்ற பயிற்சிக்காக வந்து சேர்ந்தார். கணேசனும் தனது பயிற்சி முடிந்து அதே இராணுவக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். வகுப்புகள் தனித்தனி என்றாலும் விளையாட்டு நேரங்களிலும், மாலை வேளைகளிலும் நண்பர்கள் சந்தித்து உரையாடுவார்கள்.

பொறியாளர் பட்டதாரியான திருநாவுக்கரசின் இராணுவப் பணி ஷார்ட் சர்வீஸ் கமிஷன்  என்று மாற்றப்பட்டு அவர் பயிற்சி முடிந்து ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு சென்று விட்டார். கணேசன் நெருக்கடிநிலைக் கால கமிஷன்  என்ற நிலையில் அதிகாரியானார். பொறியியல் பட்டதாரியான திருநாவுக்கரசுக்கு இரண்டு வருட பணிமூப்பு கிடைத்து அவர் 1962-ம் ஆண்டு அதிகாரியானது போல் உயர்த்தப்பட்டார். பொறியியற் கல்லூரியில் பயிற்சி முடித்த கணேசன் வடகிழக்கு எல்லைப்புறம் பணிமாற்றம் பெற்று சென்று விட்டார் வெவ்வேறு இடங்களுக்குப் போய் விட்டாலும் நண்பர்களிடையேக் கடிதப் போக்குவரத்துத் தொடர்ந்தது. அதிகாரிகளான ஒரு வருடத்திற்குள் இந்திய-பாகிஸ்தானிய போர் செப்டம்பர் முதல் நாள் 1965-ம் ஆண்டு ஆரம்பித்தது. கடுமையானப் போர் நடந்த காஷ்மீர் பகுதியில் திருநாவுக்கரசு பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியாளர் பட்டப்படிப்பில் மிகவும் சிறப்பாகப் படித்திருந்த அவர் சில நாட்களுக்குள்ளாகவே எல்லைப்புற சாலையமைப்புப் பணிக்கு மாற்றப்பட்டு விட்டதால் படைப்பிரிவுடன் இருந்து போர்க்களம் காணும் அனுபவம் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், கடுமையானப் போர்க்களப் பகுதியில் சாலைப் பணியிலிருந்தார். கணேசன் வடகிழக்கு எல்லைப்புறத்தில் இந்திய-சீன போருக்குப்பின் அமெரிக்க அரசின் உதவியுடன் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த படைப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றார்.[வளரும்]

Monday 15 December 2014

இ.தே.ஏ.10 :ஓர் ஆறு குறுக்கிடுகிறது

                                                                                                


                   ஓர் ஆறு குறுக்கிடுகிறது


இ.தே.ஏ.10 மனம் ஒரு நிலைப்பட வேண்டும் என்று பார்த்தோம். மனதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் மனிதன் உடலைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறக் கூடாது. ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கும் போது வழியில் ஓர் ஆறு குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆற்றின் கரையில் ஒரு ஓடமும் துடுப்பும் இருக்கிறது. நாம் என்ன செய்யலாம். கவலைப்படாமல் ஓடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு துடுப்பின் உதவிகளுடன் அக்கரை சேரலாம்.
அதன் பின்?

பலவிதமான விருப்பத் தேர்வுகள் நம்முன் உள்ளன. 

(1) ஓடத்தை அக்கரையில் விட்டு விட்டு நம் பயணத்தைத் தொடரலாம்
.
(2) ஓடத்தை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டுமே என்று அக்கரையிலேயே உட்கார்ந்திருக்கலாம்.

(3) வழிப்பயணத்தில் இன்னொரு ஆறு குறுக்கிட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஓடத்தையும் துடுப்பையும் தூக்கிக் கொண்டே நடந்து போகலாம்.

(4) ஆற்றைக் கடக்காமலேயே நமது பயண வழியை மாற்றிக் கொள்ளலாம்.

(5) நமது இலக்கையே மாற்றிக் கொண்டு தெற்கு நோக்கி புறப்பட்ட நாம் கிழக்கு நோக்கி நமது திசையை - இலக்கை மாற்றிக் கொள்ளலாம்.

இன்னும் யோசித்தால் பல வழிகள் தோன்றும். புத்திசாலியான மனிதன் என்ன செய்ய வேண்டும்? முதல் விருப்பத் தேர்வுதான் சிறந்தது என்று முடிவெடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் இலக்கை நிர்ணயிக்கிறார்கள். உதாரணமாக ஒரு நல்ல வேலை. ஒரு சொந்த வீடு, நல்ல மனைவி, கணவன், நல்ல குழந்தைகள் இப்படி எல்லாருக்கும் இலக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பாதையில் இடர்படும் குறுக்கீடுகளினால் நமது இலக்கு திசைமாறிப் போய் வாழ்க்கை சீரழிகிறது. இதுதான் உண்மை.

இந்த துன்பத்திலிருந்த எப்படிக் காப்பாற்றிக் கொள்வது? வைராக்கியம் வேண்டும். இலக்கு மாறாத வைராக்கியம். படிப்பதற்காகப் பள்ளிக்கோ - கல்லூரிக்கோ போகிறோம். நமது இலக்கு என்ன? புதிய நண்பர்களை சந்திப்பதா அல்லது நன்றாகப் படிப்பதா? புதிய நண்பர்கள் வழிப்பயணத்தில் குறுக்கிடும் ஆறு போல - அல்லது ஓடம் போல என்றும் கொள்ளலாம். ஏனெனில் சில நண்பர்கள் ஆறுபோல் ஒரு இடையூறாக  அமையலாம். சில நண்பர்கள் ஓடம் போல ஆற்றைக் கடந்து செல்ல உதவலாம். ஆனால், அதன் பிறகு நாம் எடுக்கும் முடிவுதான் முக்கியம். 

ஓடத்தை முதுகில் சுமந்து கொண்டு பயணம் போவது போல் நண்பர்களையும் நமது வாழ்க்கைக்குள் நுழைத்துக் கொள்ள முடியுமா? 

நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

அதுபோல் மனம் இருக்கும் இந்த உடல் நலமாக, நோய் நொடி இன்றி இருக்க வேண்டும். உடல் நன்றாக இருக்கும் போது மனம் நன்றாக இருக்க முயற்சிப்பது. ஆற்றில் நீரோட்ட திசையில் படகு ஓட்டுவது போன்றது. ஆற்றின் வேகம் படகின் வேகத்திற்குத் துணையாக இருக்கிறது. ஆனால் நோயினால் பாதிக்கப்பட்ட உடலுடன் மனதைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது நீரோட்டத்தை எதிர்த்துப் படகு ஓட்டுவது போல் போராட வேண்டும். வெற்றி பெற முடியாது என்றில்லை. ஆனால் மிகவும் கஷ்டப்பட வேண்டும்.

ஆகவே, மனம் இலக்கைத் தேடும் ஏவுகணை போல் செயல்பட்டாலும் அதை அவ்வப்பொழுது திருத்தி அமைத்துக் கொள்வது கட்டாயமாகிறது. உடலில் ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் அந்தக்கரணங்களும் இன்னும் சொல்லப் போனால் உடம்பு என்ற கோவிலின் 96 தத்துவ தாத்துவீகங்களும் நமக்கு உதவி செய்யத்தான் இயங்குகின்றன. ஆனால் இந்த இயக்கத்தை நடத்துபவர்கள் தான் அவ்வப்பொழுது மாறுபடுகிறார்கள். அந்தக் கரணமாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நால்வரும் ஒருவராகச் செயல்படும் போது நாம் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம். இந்த நால்வரும் நான்கு திசைகளிலும் நம்மை இழுத்தடிக்கும் போது நாம் தடுமாறுகிறோம். இந்த ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்குதான் வைராக்கியம் தேவைப்படுகிறது.

                                            இலக்கு என்பது எது?

“இலக்கு” என்பதற்கு “வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லலாம். நமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். அதற்கு ஏற்ற அறிவும் அனுபவமும் எப்பொழுது நமக்கு ஏற்படுகிறது. பெரியோர்கள் வாழ்க்கை நியதியை பிரம்மசாரியம் - கிரகஸ்தம் - வானப்பிரஸ்தம் - சந்நியாசம் என்ற நான்கு நிலைகளாகச் சொல்லுகிறார்கள். இதில் பிரம்மசாரியம் என்ற பருவம் கல்வி கேள்விகளுக்காக ஏற்பட்டது. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களும் கற்றுணர்ந்த பெரியோர்களும் காட்டும் வழியில் நடக்க முற்பட்டாலும் தானே சிந்திக்கும் திறமை பெறும் பொழுது தானே தனது வழியைத் தீர்மானிக்கிறான் ஒருவன். அந்த சமயத்தில் தான் அவன் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும்.

இலக்கு என்பது மாற்ற முடியாதது என்பதில்லை. ஒவ்வொரு நிலையிலும் ஒரு இலக்கு வேண்டும். நமது வாழ்க்கை நிறைவு பெற்றதாக எப்பொழுது சொல்லுகிறோம். பதினாறு செல்வங்களும் பெறும் பொழுது வாழ்வு நிறைவுற்றதாகச் சொல்லலாம். அபிராமி பட்டர் என்ன சொல்லுகிறார். கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், குன்றாத வளமையும், கன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும் (கணவனும்) தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் கொண்டு துய்ய நின் பாதத்தின் அன்பும் வேண்டும் என்று வேண்டுகிறார்.

இந்த செல்வங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒருவருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும். வாழ்க்கை இனிக்காது -அந்தந்த பருவத்தில் அது அது கிடைக்க வேண்டும். இளமையில் கல்வியும், வாலிப வயதில் நல்ல வாழ்க்கைத் துணையும், நன் மக்களும், வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்வும், நிறைவான வாழ்நாட்களும், தேவையான அளவு செல்வமும் வேண்டும். இதற்கு ஏற்றாற் போல் தாம் நாம் “இலக்கைத்” தீர்மானிக்க வேண்டும்.

இன்றைய உங்கள் நிலையை மனதில் கொண்டு அதாவது உங்களது கல்வி, உடல்நிலை, பொருளாதாரம் போன்றவற்றை மனதில் கொண்டு ஒரு இலக்கை நிர்ணயுங்கள். அது எத்தனை ஆண்டுகுள் அடையக்கூடியது- அதை அடையக்கூடிய வழிமுறைகள் - உங்களால் மட்டுமே முடியக்கூடியதா - இல்லை - பிறர் துணை தேவையா போன்றவற்றை மனதில் கொண்டு இலக்கைத் தேடும் ஏவுகணை போல் செயல்படுங்கள். ஆனால் இது நெறிப்படுத்தப்படும் ஏவுகணை போல் இருக்க வேண்டும்.

“வெற்றி பெற்ற வாழ்க்கைக்கு” நீங்கள் உதாரண புருஷராக இருப்பீர்கள் என்பதற்குச் சந்தேகமே இல்லை.                                             [வளரும்[



Saturday 13 December 2014

இ.தே.ஏ தொடர்கிறது[9] தற்கொலை செய்துகொண்ட நீர்மூழ்கிக் கப்பல்




இ.தே.ஏ தொடர்கிறது[9] 

                            சாக்கடையில் வீழ்ந்து நாசமான ஒரு கர்னல்

இப்படி சாக்கடையில் வீழ்ந்து நாசமாக்கிக் கொள்பவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றில்லை. நன்கு படித்து நல்ல குடும்ப வாழ்வில் உள்ள அதிகாரிகளும் கூட இப்படி தவறிப்போகிறார்கள். 1984-ம் ஆண்டு கர்னல் கணேசன் ஒரு படைப்பிரிவு தலைவராக அருணாசலப் பிரதேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது இராணுவத்தின் மற்றொரு பிரிவானப் பீரங்கிப் படையின் தளபதியாக அதே கர்னல் என்ற பதவியில் ராஜசேகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பணியாற்றி கொண்டிருந்தார். சுமார் 20க்கும் மேற்பட்ட படைத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்றாலும் உயர் இராணுவ அதிகாரிகள் கர்னல் ராஜசேகரனின் திறமையான நிர்வாகம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசுவார்கள். சுமார் ஓராண்டு அங்கு பணியாற்றிய பிறகு கர்னல் கணேசன் ஹிமாசல் பிரதேசத்திற்கும் கர்னல் ராஜசேகரன் திருவனந்தபுரத்திற்கும் இடம் மாறினார்கள். இராணுவப் பணியில் சுமார் 7-8 ஆண்டுகள் ஓடிமறைந்தன.

கர்னல் கணேசன் தென்துருவ இந்திய விஞ்ஞான ஆய்வு தள தலைவராகப் பணியாற்றிவிட்டு 1990ம் ஆண்டு சமயத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பயிற்சி தளத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். அப்பொழுது கோயமுத்தூரில் யாரோ ஒரு கர்னல் அந்தஸ்தில் உள்ள இராணுவ அதிகாரியின் மேல் சில குற்றங்கள் சாற்றப்பட்டு அவற்றைப் பற்றி விசாரிக்க ஒரு உயர்மட்ட இராணுவக் குழு அமைக்கப்பட்டது. கர்னல் கணேசன் அதில் ஒரு உறுப்பினர். சில நாட்களில் அந்த உயர்மட்டக் குழு கோயமுத்தூரில் கூடியது. அங்கு குற்றம் சாற்றப்பட்டிருந்த கர்னலைக் கண்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார். அவர் வேறு யாருமல்ல! கர்னல் ராஜசேகரன்தான். என்ன ஆயிற்று? இந்த 7-8 ஆண்டுகளில் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது. குடிப்பழக்கம்தான்.

இராணுவத்தில் படைப்பிரிவு தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு தாங்கள் மட்டும் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தங்களுடைய படைப்பிரிவு அதிகாரிகள் - அதிகாரிகளல்லாதோர் எல்லாரையும் கௌரவமாகவும் மரியாதையுடனும் வழி நடத்த வேண்டும். கர்னல் ராஜசேகரன் சிறப்பான கௌரவத்துடன் தான் அருணாசலப் பிரதேசத்திலிருந்து திருவனந்தபுரம் பணிமாற்றம் பெற்று சென்றார். திருவனந்தபுரத்தில் அவரது பணி பொதுவாழ்வில் உள்ள அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தது. அவர்கள் இராணுவ அதிகாரிகளுக்கு உரிய சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான மது வகைகளை ராஜசேகரனின் படைப்பிரிவிலிருந்து வாங்க ஆரம்பித்தனர். அடிக்கடி விருந்தும் நடக்க ஆரம்பித்தது. செலவு அதிகமாக அதிகமாக ராஜசேகரன் இராணுவத்திற்காக வந்த மதுப்பாட்டில்களை வெளிச் சந்தையில் விற்க ஆரம்பித்தார். கூடவே குடிப்பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆக்ரமிக்க ஆரம்பித்தது. ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு என்று அடுக்கடுக்காக தவறுகள் செய்ய, ஒரு காலகட்டத்தில் அவரிடம் பணியாற்றிய அதிகாரிகளே அவரைக் காட்டிக் கொடுத்தனர். அதிகார போதை மற்றும் சாராய போதை இரண்டுமே தலைக்கு ஏறிய கர்னல் ராஜசேகரன் தப்பிக்க வழியின்றி பலவிதங்களிலும் எழுத்து சாட்சியங்களுடன் மாட்டிக் கொண்டார். பழைய நட்பின் காரணமாக ஒருமுறை கர்னல் கணேசனிடம் வந்துதான் தப்பிக்க ஏதும் வழியுண்டா என்று கேட்டுப் பார்த்தார். கர்னல்  கணேசன் அவர் மீது வருத்தப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை. அவரிடம் பணியாற்றியவர்கள் இரண்டு மூன்று வருட ஒழுங்கீனங்களை எல்லாம் எழுத்துமூலமாக நிரூபித்தனர். சுமார் 25 வருடப் பணி அனுபவம் இருந்தும் கர்னல் ராஜசேகரன் ஒரு பைசா கூடப் பெற முடியாமல் இராணுவத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். வெளியேறிய சில நாட்களுக்குள் அவர் இறந்துவிட்டார் என்பது வருத்தப்படத்தக்க செய்தியே.
                           சட்ட திட்டங்கள் ஒருவரைத் திருத்திவிட முடியாது
ஆனால், இவைகளை மட்டுமே மனதில் கொண்டு இராணுவத்தினர்களின் பழக்க வழக்கங்களை முடிவு கட்டிவிட முடியாது. மற்ற துறைகளைப் போலவே இராணுவமும் தனிமனிதர்களின் குணநலன்களை அடிப்படையாகக் கொண்டது. சட்ட திட்டங்கøள் கொண்டும் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டும் ஒருவனைத் திருத்திவிட முடியாது. நல்ல பழக்கங்கள் மனதில் உருவக வேண்டும். இராணுவத்தில் 30-40 வருடங்கள் பணியாற்றிய அதிகாரிகள், அதிகாரிகளல்லாதோரில் மது அருந்தாதவர்கள் எண்ணற்றோர் உண்டு. இராணுவத்தில் சில உயர் அதிகாரிகள் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் இராணுவத்தினர்கள் மீது கட்டாயமாகத் திணிப்பதுண்டு. இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இராணுவ சட்ட திட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் மதித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர் லெப்டினெண்ட் ஜெனரல் ஹனூட் சிங்.  திருமணம் செய்து கொள்ளாதவர். மேலும், எந்த இராணுவ விருந்தாக இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் இரவு சுமார் 91/2 - 10 மணி சமயத்தில் முடித்துக் கொள்ளவும், விருப்பப்படுவோர் தொடரவும் அனுமதி அளித்துவிட்டு அவர் சென்றுவிடுவார். இராணுவத்தை விட்டு ஓய்வு பெற்றபின் ஆன்மீக குரு பாலயோகியின் டேராடூன் கிளை மடத்தில் ஒரு யோகியாக அவர் இருப்பது இராணுவத்தினர் பற்றிய மக்களின் கணிப்பிற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
                                               குளிரும் மதுவும்
உறைபனி இடங்களில் பணியாற்றுவோர் குளிரின் தாக்கத்தை சமாளிக்க மது அருந்துவார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விவாதமே. சியாசென் மலைப் பகுதிகளில் பணியாற்றும் இராணுவத்தினரில் பலர் மது அருந்துவதில்லை. இந்த நூலாசிரியருடன் தென்துருவ பனிக் கண்டத்தில் 11/2 வருடங்கள் பணியாற்றியவர்களில் ஓரிருவர் மது அருந்தாதவர்கள். உறைபனி கண்டத்தின் குளிர் அதிகபட்சமா - 89.60 டிகிரி   பதிவாகியுள்ளது. சாதாரணமாகவே குளிர் - 30 டிகிரி  அல்லது 40டிகிரி  இருக்கும். அப்படி இருந்தும் அங்கு கூட தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் மது அருந்தாமலும் சைவ உணவு அருந்துபவர்களும் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
                                       இலக்கைத் தேடும் ஏவுகணைகள்

“எண்ணம் போல் வாழ்வு” என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எழுதி வைத்தவர்கள் தமிழர்கள் தாம் ‘எண்ணங்களே மனிதனின் ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கின்றன’ என்பது இன்றைய மனோதத்துவ மேதைகள் உலகுக்குச் சொல்லும் விஞ்ஞான பூர்வமான உண்மை. இதுதான் உண்மை என்றால் நல்லவாழ்க்கை பற்றி எண்ணிக் கொண்டிருந்துவிட்டு அவற்றை அடைந்து வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதானே! பின்னர் ஏன் மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஏழை - பணக்காரன், பலசாலி - கோழை, அறிவாளி-அறிவற்றவன் போன்ற எண்ணற்ற பாகுபாடுகளும் வித்தியாசங்களும் ஏன்?

அங்குதான் சூக்ஷமம் இருக்கிறது. எண்ணங்கள் உருவாவது மனதில். ஆனால், எல்லா பெரியோர்களும் சொல்லிய மற்றொரு உண்மை என்னவென்றால் அது “மனம் ஒரு குரங்கு” என்பதாகும். குரங்கு ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருக்கும். இப்படித் தாவிக் கொண்டிருக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவது என்பது முற்றும் துறந்த முனிவர்களுக்கும் முடியாத ஒன்று. அப்படி இருக்க மனதை ஒரு நிலைப்படுத்தி - பிறகு அதில் தனக்குத் தேவையான எண்ணங்களை விதைத்து - அதை அடைந்து நல்வாழ்வு வாழ்வது எப்படி?

ஏவுகணைகளில் நெறிபடுத்தப்படும் ஏவுகணைகள் என்றும் விடுபட்டவுடன் தானே இலக்கைத் தேடிக் கொள்ளும் ஏவுகணைகள் என்றும் இருவகைப்படும். இரண்டு வகைகளிலுமே நன்மை தீமைகள் உண்டு. மனித மனம் எப்படி இருக்க வேண்டும்? இலக்கைத் தேடும் ஏவுகணைகள் போன்று தான் இருக்க வேண்டும். ஆனால் அதை நெறிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது.

                              தற்கொலை செய்துகொண்ட நீர்மூழ்கிக் கப்பல்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் வெடித்துச் சிதறி மூழ்கடிக்கப்பட்டது. அது ஒரு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பல். யார் அதை மூழ்கடித்தார்கள்? - ஏன் மூழ்கடித்தார்கள்? போன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மிகத் தீவிரமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் ஒரு திடுக்கிடும் உண்மை புலனானது. அந்த நீர்மூழ்கிக்கப்பல் தற்கொலை செய்து கொண்டது. அதாவது தன்னுடைய ஏவுகணையினாலேயே தாக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டது. ஏன்?

அந்த நீர்மூழ்கிக்கப்பல் இலக்கைத் தேடும் ஏவுகணை தாங்கியது. ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத ஒரு விபத்தாக ஏவுகணை வீசப்பட்டு விட்டது. இலக்கைத் தேடும் ஏவுகணைகள் வீசப்பட்டவுடன் முன்பே நிர்ணயிக்கப்பட்ட விசைகளின்படி எதிரி நீர்மூழ்கிக் கப்பலைத் தேட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு கோணத்திலும் தனது மின் அலைகளைச் செலுத்தி மிக நுணுக்கமான ஆய்வுப் பணியில் சுற்றி வந்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்த ஆழ்கடல் பிராந்தியத்தில் எந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இல்லை.

இப்படி ஒவ்வொரு கோணத்திலும் ஆராய்ந்து சுற்றி வந்து கொண்டிருந்த ஏவுகணை கிட்டத்தட்ட 360 டிகிரியையும் ஆராய்ந்து முடியும் தருவாயில் தான் எங்கிருந்து ஏவப்பட்டதோ அந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டது. ஏவுகணைகளின் வடிவமைப்பிலும் ஆய்வு விசைப் பகுதிகளிலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை அடையாளம் காணக்கூடிய மின்னணு சாதனங்கள் தாம் இருக்குமே ஒழிய, அந்த நீர்மூழ்கிக்கப்பல் தங்கள் நாட்டினுடையதா அல்லது எதிரி நாட்டினுடையதா என்ற பாகுபாடு கண்டறிவதற்கான வாய்ப்பு அப்பொழுது நடைமுறையில் இல்லை. ஆகையினால், நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டவுடன் அந்த ஏவுகணை விரைந்து சென்று அந்தக் கப்பலைத் தாக்கிச் சிதறடித்து விட்டது.

இலக்கை மட்டுமே தேடும் ஏவுகணையால் வந்த விபத்து இது. இன்றைய மனிதர்களும் அப்படித்தான் இலக்கை மட்டுமே தேடிச் சீரழிகிறார்கள். இயந்திரங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கும் போது அங்கு வேறுவிதமான குறுக்கீடுகள் இருப்பதில்லை. ஆனால், மனிதன் ஒரு இலக்கை நிர்ணயித்துச் செயலாக்க முற்படும் போது எண்ணற்ற குறுக்கீடுகள் வருகின்றன.[வளரும்]

Wednesday 10 December 2014

இ.தே.எ 7 கொலையுண்டுகோணிப்பையில் கட்டி எறியப்பட்ட அதிகாரி

                                                    


             5.நாளை முதல் குடிக்க மாட்டேன் “சத்தியமடி” தங்கம்
இ.தே.எ 7

இராணுவத்தினர் பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம் அவர்கள் குடிகாரர்கள், முரட்டு மனிதர்கள் என்பதுதான் பொது மக்களிடையே சாதாரணமாக நிலவிவரும் அபிப்பிராயம். ஆனால் இது உண்மையல்ல. இராணுவம் என்ற அமைப்பும் நம்மைப் போன்ற மனிதர்களைக் கொண்டது தான். சமூகத்தில் நாம் அன்றாடம் சந்திக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, அடிதடி, குடிகாரர்களின் வெறியாட்டம் போன்ற சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த இளைஞர்களிலிருந்து தானே இராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்படுகிறது. பின், அதுபோன்ற குணநலன்கள் அங்@க அடி@யாடு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? நாட்டில் உள்ள மற்ற எல்லா அமைப்புகளை விட இராணுவம் ஒரு ஒழுக்கமுள்ள, கட்டுப்பாடான, நாட்டுப்பற்றுள்ள அமைப்பு. அந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக மேலே சொல்லிய குற்றம் குறைகள் இராணுவத்தில் குறைவு. அவ்வளவு தான். ஆனால், அவர்களைக்குடிகாரர்கள் அல்லது முரடர்கள் என்று ஒதுக்கி விட முடியாது.
இராணுவத்தில் மது அதாவது “சாராயம்” வழங்கப்படுவது உண்மைதான். ஒரு படைப்பிரிவு மிக அதிகக் குளிரானப் பகுதியில் பணியாற்றும் பொழுது சீதோஷ்ண நிலையைப் பொறுத்து தளபதி படைப்பிரிவினர்க்கு இலவசமது வழங்க உத்தரவிடுவார். இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் கூட்டத்துடன் பேசி மகிழும் போது மது அருந்தாத ஒருவனை கிண்டல் செய்வதுண்டு. அதற்குப் பயந்து கொண்டே எல்லாரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். ஆனால், ஒரு நல்ல படைப்பிரிவு இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆழ்ந்து கவனித்து மது வழங்கினாலும் அது ஓரளவு கட்டுப்பாட்டுடன் அளவுடன் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எத்தனையோ இராணுவத்தினர் குடிப்பதில்லை. சிகரெட் பிடிப்பதில்லை. அசைவ உணவு உண்பதில்லை. ஆனால் இதை வெளி உலகில் பலர் கூர்ந்து கவனிப்பதில்லை. உளவியலில் ஒரு வெள்ளைத் தாளில் கருப்புப் புள்ளி வைத்து பார்வையாளர்களிடம் காட்டி என்ன பார்க்கிறீர்கள் என்று காண்பித்தால் முக்கால் வாசிப்பேர் ஒரு கருப்புப்புள்ளி என்பார்கள். ஆனால், ஓரிருவர் ஒரு வெள்ளைத்தாளில் கருப்புப்புள்ளி என்பார்கள். மனித மனம் பெரும்பகுதி வெள்ளையான தாளைப் பற்றி கவனம் கொள்ளாமல் ஒரு சிறு புள்ளியாக இருக்கும் கருப்பு நிறத்தில் தான் கவனம் கொள்கிறார்கள். அதுபோல் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் சிறப்புடன் பணியாற்ற ஓரிரு இராணுவத்தினர் குடித்துவிட்டு வந்தால் “இராணுவத்தினர் எல்லோருமே குடிகாரர்கள்” என்று பட்டம் சூட்டப்பட்டு விடுகிறது.
இராணுவத்தினர்க்கு வழங்கப்படும் பல சலுகைகளில் காண்டீன்  சலுகையும் உண்டு. அங்கே தனி மனிதர்க்கும் வீட்டிற்கும் தேவையான ஏராளமான பொருட்கள் வெளிச் சந்தையில் கிடைப்பதை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. கார், தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவைகளும் கிடைக்கின்றன. இவைகள் இராணுவத்தினர்களின் உபயோகத்திற்கு மட்டுமே வழங்கப்படுபவை. ஆனால் இராணுவத்தில் சேர விருப்பமில்லாமலும், இராணுவ வாழ்க்கை பற்றி உயர்வான எண்ணங்கள் இல்லாதவர்களும் கூட அதுபோன்ற பொருட்கள் தேவைப்படும் பொழுது யாராவது இராணுவத்தினர் மூலமாக குறைந்த விலையில் வாங்கலாமா என்று தேடி வருவார்கள்.
கர்னல் அவர்களின் மூத்த மகன் தேசீய இராணுவக் கல்லூரி மூலமாகப் பயின்று
அதிகாரியானவர். பொறியாளர் பிரிவு அதிகாரி என்பதால் முதலில் தேசீயப் பாதுகாப்புக் கல்லூரியில் பி.எஸ்ஸி  பட்டமும் பின்னர் இராணுவப் பொறி இயற்கல்லூரியில் பி.டெக்  பட்டமும் பெற்றவர். கணிப்பொறி கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றவர். அவருக்குத் திருமணம் செய்விக்க பலவிதமான முறையிலும் கர்னல் முயன்றார். செய்தித்தாள், விளம்பரம், தரகர் மூலமாக, திருமணத் தகவல் மையங்கள் போன்றவற்றின், மூலமாகவும் முயற்சித்தார். பையன் இராணுவ அதிகாரி என்று கேள்விப்படுபவர்களின் முதல் சந்தேகம். எவ்வளவுமது @காட்டா’ என்பதுதான். அதிகாரிகளுக்கும் அதிகாரிகளல்லா தோருக்கும் இராணுவத்தில் வழங்கப்படும் சலுகைகள் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதே. அந்த விதத்தில் வீட்டு சாமான்கள் மாதம் சுமார் ரூ.5000/- வரையும் மதுவகைகள் சுமார் 12 லிட்டர் வரையிலும் என்று கணக்கு உண்டு. வெளிச்சந்தையில் கிடைக்காத அல்லது விலை அதிகமான பொருட்களை யாராவது இராணுவத்தினர் வாங்கித் தருவார்களா என்று அலைபவர்களில் கல்யாண தரகர் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? ஒரு கல்யாணம் முடித்து வைத்தால் இவ்வளவு கமிஷன் என்று வியாபார ரீதியில் தானே எல்லாம் நடக்கிறது.
குடிப்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்றோ, சாராயம் குடிப்பது ஒரு கெட்ட பழக்கம் என்றோ கொள்ள முடியாது. நாள் முழுவதுமான உடல் உழைப்பிற்கு பின் கொஞ்சம் மது அருந்தி, நல்ல உணவும் அருந்திவிட்டு உறங்குவது நல்லது தான். ஆனால், அந்த அளவை யார் நிர்ணயிப்பது? அங்குதான் பிரச்சினையே. சோக நிகழ்ச்சியை மறக்கக் குடிப்பதாகச் சொல்லுவார்கள். மது அருந்தினால் நாம் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நிகழ்ச்சி மட்டுமே விஸ்வரூபம் எடுத்து மனதை ஆக்ரமித்து நிற்கும். அதுபோல் குடிகாரர்கள் எல்லாம் உளறிக் கொட்டி ஊரைக் கூட்டுவார்கள் என்பதும் தவறு. எத்தனையோ மொடாக் குடியர்கள் தங்களது எல்லைதாண்டிய பிறகு வாய் திறக்காமல் அவர்கள் இருப்பிடம் சென்று விடுவார்கள். எப்படி வீடுபோய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

இராணுவச் சட்டத்தில் (Army Act-1950) நான்காவது பகுதியில் (Chapter-IV)குற்றங்கள் பட்டியலிடப்படுகின்றன. பிரிவு 34 முதல் ((Section-34)) பிரிவு 70 வரை ((Section--70) பலவிதமான குற்றங்கள் பட்டியலிடப்பட்டு, அதற்குரிய அதிபட்ச தண்டனையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் பிரிவு 48 “போதைக்கு உட்படுதல்” (Intoxication) என்று விளக்கமளிக்கப்பட்டு தண்டனை வேலையிலிருக்கும் போது, வேலையில் இல்லாதபோது, அதிகாரிகள் அதிகாரிகளல்லாதோர் போன்ற விபரங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கிறது. அதிக பட்சமாக இரண்டு வருட சிறைத்தண்டனை என்பது சட்டம். சிறைத் தண்டனை விதிக்கப்படும் பொழுது, அது இராணுவச் சிறையில் நிறைவேற்றப்பட வேண்டுமா அல்லது பொதுமக்களுக்குரிய சிவில் சிறையில் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது தண்டனை வழங்கும் அதிகாரி குறிப்பிட வேண்டும். இப்பொழுது இராணுவ சிறை உபயோகத்தில் இல்லை என்பது அனுமானம். சிவில் சிறைக்குப்போகும் குற்றவாளி மீண்டும் திரும்பி இராணுவத்தில் பணியாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ சட்டங்களுக்கு உட்பட்ட ஒருவர் ஒரு குற்றம் இழைக்கும்போது அவர் குடிபோதையில் இருக்கையில் அவரது குற்றம் குடிபோதையில் இருப்பதே தவிர குடிபோதையில் இருக்கையில் இழைத்த குற்றத்திற்காக இருக்காது. ஆகையினால் ஒருவர் குடி போதையில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது மருத்துவ ரீதியில் நிரூபிக்க முடியாது. ஏனெனில், குடித்திருக்கிறார் என்பது தான் மருத்துவப் பரிசோதனையில் நிரூபணம் ஆகுமே ஒழிய அவருடைய போதை நிலை நிரூபணம் ஆகாது. சாட்சியங்கள் அவருடைய வாயில் வீசிய துர்நாற்றம், போதையில் இருப்பவர்கள் செய்வது போன்ற ஸ்திரமற்ற செயல், கண்கள் நிலையற்று அலைதல் - தாழ்ந்து போதல், ஒழுங்கற்ற பேச்சு போன்றவைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். குடித்திருப்பவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது Use of criminal Forceஎன்ற பிரிவின்கீழ் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நபரை குற்றவாளியாக்கி விடும். இதுபோன்று எந்த ஒரு குற்றமானாலும் அவை மிக மிக விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டு குற்றமிழைப்பதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

1975-ம் ஆண்டு மேஜர் கணேசன் பெங்களூரில் உள்ள ஒரு படைப் பிரிவிற்குப் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுமார் 11 வருட பணி அனுபவத்தில் இராணுவத்தில் அதிகாரிகளுக்கான உயர் பதவி தேர்வுகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருந்தார். மேலும், இராணுவத் தேர்வுகளில் நிர்வாகம் மற்றும் இராணுவச் சட்டம்  என்ற இரண்டு பிரிவுகளில் மிவும் சிறப்பான டிஸ்டிங்ஷன் பெற்றிருந்தார். இந்த இரண்டு பிரிவுகளும் இராணுவ அதிகாரிகளுக்கு மிக மிக அவசியமானப் பிரிவுகள். தேர்வுக்காக என்றில்லாமல் அன்றாட வாழ்க்கைக்கும் இவை அவசியம் என்பதால் அதில் தனிக் கவனம் செலுத்திப் படித்திருந்தார் மேஜர் கணேசன். பங்களூர் பயிற்சி தளத்தில் சுமார் 1500 இளம் பயிற்சியாளர்கள் பல நிலைகளில் பயிற்சியில் இருந்தார்கள். அவர்களுக்குப் பயிற்சி தரும் அதிகாரிகள் சுமார் 300 பேர் இருந்தார்கள். சிலர் குடும்பத்துடனும், சிலர் குடும்பம் இல்லாமல் இராணுவத் தங்குமிடங்களிலும் இருந்தார்கள்.
                 கொலையுண்டுகோணிப்பையில் 
                   கட்டி எறியப்பட்ட அதிகாரி

இந்நிலையில் ஒரு நாள் மேஜர் கணேசன் தனது 3.5 புல்லட் t மோட்டார் சைக்கிளில் அல்சூர் ஏரிக்கரையோரம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பங்களூர் தமிழ்ச்சங்கம் உள்ள பகுதிக்கு அருகில் யாரோ ஒரு ஆளை கொலை செய்து கோணிப்பையில் கட்டி அந்த சாலையிலிருந்தபடி உருட்டி நீரில் போட்டிருக்கிறார்கள். அந்த மூட்டை நீரில் விழாமல் கரையோரம் மண்ணில் வீழ்ந்திருந்ததால் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கணேசன் தனது படைப்பிரிவு வந்து சேர்ந்து அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்பொழுது அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு பயிற்சி தரும் நான் கமிஷன்ட் ஆபீசர்  அன்று டூட்டிக்கு வரவில்லை என்றும் அவருடைய வீடு பூட்டி இருப்பதால் அவரைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை என்பதும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இராணுவத்தில் இருப்பவர்கள் எந்த நிலையிலும் தங்களது இருக்குமிடம் தெரிவிக்காமல் இருப்பது ஒரு குற்றம். படைப்பிரிவின் தலைமையகம் தங்களது படைப் பிரிவைச் சேர்ந்தவர்களின் தங்குமிடம், சொந்த ஊர், போன்ற விபரங்களை எப்பொழுதும் சரியாகவும் தயாராகவும் வைத்திருக்க வேண்டும். அப்படி விபரம் தெரிவிக்காமல் ஒருவர் 48 மணி நேரத்திற்கு மேல் தலைமறைவாகி இருந்தால் அவரை “அனுமதியின்றி ஓடிப்போனவர்” என்ற பிரிவில் பதிவு செய்து இராணுவத் தலைமையகம், காவல் துறை போன்றவற்றிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கணேசன் அப்படிப்பட்ட வேலைகளை முடித்து அல்சூர் காவல்துறை இன்ஸ்பெக்டரை சந்தித்தார். அந்த காவல்துறை அதிகாரி அன்று காலையில் ஏரியில் கிடைத்த பிணம் ஒரு இராணுவ ஆள் போல் தெரிகிறது என்பதால் அவர் கணேசனை அழைத்துக் கொண்டு பிணப் பரிசோதனை (Post mortem) செய்யப்பட்டுள்ள செய்ண்ட்  ஜான்ஸ் ஆஸ்பத்திரிக்குச்  சென்றார். அங்கு வைத்துள்ள பிணத்தைப் பார்த்த மேஜர் கணேசன் அதிர்ச்சியடைந்தார். அந்தப் பிணம் அவரது படைப் பிரிவைச் சேர்ந்தவருடையதுதான். அவர்தான் அன்று காலையில் பணிக்கு வராதவர். திரும்பவும் “கொல்லப்பட்டு விட்டார்” என்று எல்லா இராணுவ தளங்களுக்கும் தகவல் அனுப்பிவிட்டு அவரைப் பற்றிய விபரங்களைப் பார்த்தார். [வளரும்]

Thursday 13 November 2014

எதற்கும் நேரம் வரவேண்டும் (சிறுகதை)

                                                                . மீனாட்சிசுந்தரம்
       எதற்கும் நேரம் வரவேண்டும் 
                     (சிறுகதை)
                                                                                                                
பெரியம்மாவிற்கு குழந்தையில்லை என்ற காரணத்தினால், அம்மாவை இரண்டாம் தாரமாக அப்பா திருமணம் செய்துகொண்டார். பெரியம்மாதான் இதற்கு வித்திட்டவர்கள். அம்மாவின் முழு சம்மதத்தைப் பெற்ற பின்புதான் பெரியம்மா தன் கணவனுக்கு, தங்கையை மணம் முடித்துக் கொண்டார்கள்.

      தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவள் என்ற காரணத்தினால், பெரியம்மா மேல் அப்பாவுக்கு கூடுதல் பிரியம். அவர் வீட்டில் இருந்தால், மூச்சுக்கு மூன்று முறையாவது ஆனந்தி, ஆனந்தி என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார். அப்பாவிற்கு தினமும் பணிவிடை செய்வதிலிருந்து, ஆலோசனை சொல்வது வரையில் எல்லாமே பெரியம்மாதான். அம்மாவிடமும் அவரது அன்பு குறையவில்லை. இருவருமே இரண்டு கண்கள்தான் அப்பாவிற்கு.

       அப்பா பெரியம்மா மேல் வைத்திருந்த பாசமிகுதியால், எனக்கு ஆனந்தன் என்று பெயர் வைத்தார்கள்எனவே    என்மேல் பெரியம்மாவுக்கு கொள்ளைப் பிரியம். ஆனந்த், ஆனந்த் என்று என்மீது அன்பைப் பொழிவார்கள். இந்த பாசத்திற்கு அவரது பெயரைச் சூட்டியதும் காரணமாக இருக்குமோ என்று நான் நினைத்ததுண்டு. நான் சிறு குழந்தையாய் இருந்தபோது எப்போதும் அவர் இடுப்பில்தான் இருப்பேனாம். பெரியம்மாவின் சம்மதம் இல்லையென்றால் நான் பிறந்திருக்கமாட்டேன்தானே! ஆகவே இயற்கையாகவே அவர்களிடம் பாசமும் மரியாதையும் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லைதான். அது இந்த இருபத்தைந்து வயதிலும் தொடர்கிறது.

      உடன் பிறந்த சகோதரி என்பதையும் மறந்து பெரியம்மா மேல் பாசத்திற்குப் பதிலாக வெறுப்பைத்தான் காட்டிவருகிறாள் அம்மா. எனக்கு விபரம் தெரிந்தது முதல் இதை கண்கூடாகப் பார்த்து வருகிறேன். இதுவரையில் இதற்கான காரணத்தை என்னால் யூகிக்கமுடியவில்லை. அதுவும் அப்பாவின் மறைவிற்குப் பிறகு பெரியம்மா மேல் உள்ள வெறுப்பு கூடுதலானது. பெரியம்மாதான் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொண்டார்கள்.
  

பெண்களுக்குண்டான அடிப்படைக் குணமே கணவனைப் பங்குபோடுவதை விரும்பமாட்டார்கள். இந்தக் குணத்திற்கு அம்மாவும் அடிமையாகிவிட்டாளோ! இதனால்தான்  பெரியம்மா மேல் வெறுப்பைக் காட்டினாளோ! இப்படி  மனதுக்குள் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்
.
அப்படியானால் அப்பா இறந்த பிறகும் ஏன் பெரியம்மா மேல் வெறுப்பைக் காட்டவேண்டும் என்பதும் இதுவரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. பெரியம்மாவிடமும் இதற்கான காரணம் கேட்டும் அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை. ‘ஆறும் அது ஆழமில்ல. அது சேரும் கடலும் ஆழமில்ல. ஆழம் எது ஐயா இந்த பொம்பள மனசு தாய்யாஎன்று ஒரு கவிஞன் பாடியதுதான் நினைவுக்கு வந்தது.

பெரியம்மா தனியாகப் போய் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வாடகை வீட்டில்தான் அவர்களின் வாசம். அப்பாவின் ஓய்வூதியத்தில்தான் அவர்களின் ஜீவனம் கழிகிறது. அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லைதான்- நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துவருவது அவர்களுக்கு கூடுதல் சந்தோசம். அம்மா வெறுப்பைக் காட்டினாலும், பெரியம்மாவிற்கு தங்கைமேல் பாசம் குறையவில்லைதான். அம்மாவிற்குப் பிடித்த மைசூர்பாகை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து கொடுத்துவிடுவார்கள். அக்கா கொடுத்து அனுப்பிய மைசூர்பாகை மட்டும் ஆசையாக சாப்பிடும் அம்மா அக்கா மேல் பாசத்தை மட்டும்  காட்டாதது ஏன் என்று புரியவில்லை. எப்படி அம்மாவால் இப்படி இருக்கமுடிகிறதுஇதற்காக அம்மாவை மனதிற்குள் திட்டிய நாட்கள்தான் என் நினைவிற்கு வருகிறது. நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா இதில்  மட்டும் பிடிவாதமாய் இருக்கிறாள்.
     
   ஒவ்வொரு புத்தாண்டுக்கும் இரண்டுபேருக்குமே இந்த ஐந்தாண்டுகளாக நான்தான் புடவை எடுத்துத் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தப் புடவைகள் இரண்டும் ஒரே நிறமும், டிசைன் உள்ளதாக இருக்கும்படி பார்த்து எடுத்துவருவேன். இரண்டுபேருமே என்னைப் பொருத்தவரை அம்மாக்கள்தான். இதுவரையில் முதலில் பெரியம்மாவிற்குப் புடவையை கொடுத்துவிட்டுத்தான் அம்மாவிற்கு கொடுத்துவந்தேன். இந்த முறை ஞாபக மறதியில் இரண்டு புடவைகளையும் எங்களது வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டேன்.

     
ரெண்டு புடவையும் எனக்குத்தானாப்பாஎன்று ஆசையாகவும், “கலரும் டிசைனும் நல்லாயிருக்கு. பரவாயில்ல ரெண்டுமே இருக்கட்டும்அம்மா கேட்ட பின்புதான் தவறு செய்துவிட்டேனே? நானே என்னை கடிந்துகொண்டேன். இதேமாதிரி கலரும் டிசைனும் உள்ள இன்னொன்று கிடைப்பது சிரமம். அம்மாவிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான்.

 “அம்மா ரெண்டு புடவையில ஒண்ணு பெரியம்மாவுக்கும்மா. நாந்தான் மறந்து எடுத்துட்டுவந்துட்டேன். நாளைக்கி குடுத்துட்டு வந்துடுறேன்.“ அம்மாவிடம் மாற்றம் தெரிகிறதா என்று கவனித்தேன்.

     “ஒவ்வொரு வருசமும் இப்படித்தான் எடுத்துத்தருவியா?“ அம்மாவின் பேச்சில் மாற்றம் தெரிந்தது.

   “இந்த புதுவருசத்துக்கு பெரியம்மாவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுவாப்பா“  நம்ம எல்லாருமா சேர்ந்து கொண்டாடலாம். இந்தப் புடவையில எங்க அக்காவ நானு பாக்கணும் போல ஆசையாயிருக்குப்பா.“ குழந்தையாகிவிட்டாள் அம்மா.

      அம்மா மாறிவிட்டாளா? எனக்குள் ஆச்சரியமும், சந்தோசமும்.....

    “இந்தப் புடவையில எங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்கணும். அந்தப் போட்டோவ இந்த ஹாலில மாட்டிவைக்கணும்பா. இது என்னோட ஆசைப்பா.“ கண்களிலிருந்து கண்ணீர் பொங்கச் சொன்னாள் அம்மா.

இதைத்தான் எதற்கும் நேரம் வரவேண்டும் என்பார்களோ! தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆனந்த்