Wednesday 18 November 2015

ரேணுகா


முன்னுரை
வாழ்க்கை ஒரு பக்கம் எப்போதும் வளர்ந்து கொண்டே வருகிறது; மறுபக்கம் அழிந்து கொண்டே செல்கிறது. பிறப்பும் இறப்பும்போல் உறவும் துறவும். உலகில் சமகாலத்தில் இயங்குகின்றன.
ஆத்ம தாகம் ஒன்றின் பொருட்டு உடல் இச்சைகளை உதறி எறிந்த ஒருவன் இந்த நாவலில் வரும் சங்கர். ஒரு மரணம் அவனைக் கலக்கி ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.
உறவுகளைத் தேடி மன இருளில் அலையும் அவனுக்கு மறுகரையில் ஒரு வெளிச்சம். அவனை அவனுக்கே உணர்த்திய வெளிச்சம். அவள் தான் ரேணு.
விரக்திகளுக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு என்று வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவள். ஒரு வகையில் அவளைத் துறந்து ஓடி வந்தவன் தான் சங்கர் துறவிலிருந்து ஓர் உறவுக்கு அவனை மீட்டு அவனையும் துறக்கச்சித்தமாகிய ரேணுவின் ஆத்ம பலம் அவனை முழு மனிதனாக்குகிறது.
எப்போதுமே வெறும் கதை சொல்வது என்னால் முடியாதது. 
காண்ப வெல்லா மறையுமென்றால் மறைந்த  தெல்லாம் காண்பமன்றோ? என்று மகாகவி கேட்ட கேள்வியில் இந்த நாவல் பிறந்தது.
உடலை மறுத்தது போன்று வெளிவேடமிடுவோர் கணக்கிற்கு வராதவர்கள். ஆனால் அதற்கு உரியதை வழங்காதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
இந்தியச் சிந்தனை முறை இதை முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறது. அதை நினைவுட்டும் முயற்சியே இந்த நாவல் வடிவாயிற்று.
வழக்கமான எனது லகான் இந்த நாவலின் உணர்ச்சி ஓட்டத்தில் சற்றே விடுபட்டுள்ளது.
கூடுகளில் அடைபடாது மனக்கிளி பாயும் வானவிரிவிற்கு சம்பவங்களும் பாத்திரங்களும் ஓடியிருக்கின்றன. ஆயினும் என்ன?.
உன் உத்தேசம் என்றுமே ஒன்றுதான். கதை சொல்வதன் மூலம் மனதையும் ஆன்மாவையும் மேலே உயர்த்துதல்;ஒர் அணுவளவேனும்.
அதில் நான் பெற்ற வெற்றி தோல்விக்கு சான்று அளிக்க வேண்டியது நீங்களே!                                    
மிக்க அன்புடன்
வையவன்

                                             
                                                        1


மிஷன் ஆஸ்பத்திரி மாடி வாரந்தா
இரண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓர் ஆக்ஸிஜன் ஸிலிண்டரைத் தள்ளு வண்டியில் ஏற்றினார்.
சங்கர் ஒரு சின்ன பிரார்த்தனை சொல்லிக் பைஜாமா ஜிப்பா. தலைமுடியோடு நிற்கும்போது அதுதான் முடிகிறது.
அந்த ஸிலிண்டர் தான் பிரியமுள்ள தன் மாணவி ஜனவிக்கு உயிர் மூச்சு வழங்கப் போகிற அமுதசுரபி.
ஆக்ஸிஜன் வண்டியைத் தள்ள வேண்டியவன். வம்பளந்தான்.
“மைக்கேலு சாப்பாட்டுக் கூடை வந்திருக்குமா”
“மணி ஒண்ணாவப்போவுது. வந்திருக்கும்!”
“ஒண்ணு பண்ணுவியா.”
“சொல்லு.”
“இப்ப விட்டேன்னா நம்ப கூடைக்காரி வில்லியம்சு பில்டிங்கிலே பூந்துருவா. நீ இந்த ஸிலிண்டரை எம் வார்டுக்கு தள்ளிக்கிணு போயிட்டே இரு. நான் கேரியரை வாங்கி ஒபி கவுண்டர்லே வச்சுட்டு வந்துடறேன்.
“நம்மாலே முடியாது! நான் சாப்பிட மென்ஸீக்குப் போய்ட்டு வரணும்.”
“பாத்தியா.... ஓரு ஹெல்ப் கேட்ட பிரேக் அடிக்கறே!...”
ஒருத்தி உயிருக்குப் போராடுகிறாள். இவர்ரகளுக்கு சோற்றுப் பிரச்னை. சங்கர்  பிரார்த்தித்தான்.
சொற்கள் இல்லாத. பயம் இல்லாத எந்த வேண்டுதலும் இல்லாத பிரார்த்தனை. நாம ரூபமில்லாத ஒரு சர்வ வியாபகத்திடம் ஒரு டிஸ்கனெஷன் நேரிட்டு. அதைப் பழுது பார்த்து ஓர் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பிரார்த்தனை.
ஸிலிண்டர் தள்ள வேண்டியவர்கள் இன்னும் உடன் பாட்டுக்கு வரவில்லை.
“மைக்கேலு.... ஒண்ணு செய். நீ கூடைக்காரிகிட்டே போயி கேரியரை வாங்கி ஓபியிலே வக்கிறே. நீயும் நானும் ஒண்ணாச்சாப்பிடறோம்.”
அவர்கள் சாவதானம் அவனுள் ஒரு பதற்றத்தை வருவித்தது. அங்கே அவள் சிலிண்டரில் ஆக்சஸிஜன் தீர்ந்திருக்குமோ!
“ஏங்க.... இது கொஞ்சம் அர்ஜெண்டு.”
குறுக்கிட்டவனை எரிச்சலோடு பார்த்தான் மெக்கேல்.
“அட நீ ஏன் சார்பதார்றோ எங்களுக்குத் தெரியாது?”
“இன்னிக்கு சாப்பாட்டிலே நமக்கு சிக்கன் வரும்யா”
“எதுவானா வரட்டும் என்னால முடியாது.”
“நீ போயி ஓழி! நானே வண்டியைத் தள்ளிக்கிணு போறேன்!”
தள்ளுவண்டி நகர்ந்தது. சங்கர் அதன் சக்கரங்கள் சுழலும் வேகத்தை உந்திவிட முடியாதா என்று ஏங்குவது போல் வெறித்தான்.
“ஜைனவி.”
பார்மஸி ஜன்னலில் பெயர் கூப்பிட்டார்கள் ஆக்ஸிஜன் ஸிலிண்டரின் பின்னாலேயே போய் திறந்து மூடிய லிஃப்ட் கதவுக்குள் அது மறைவதைப் பார்த்தப்பின் சங்கர்  திரும்பினான்.
பார்மஸியில் ஜப்ரோ பென்ஸில் புருவத்தோடு ஒரு பெண் சாப்பாட்டு நேரச் சலிப்பில் நின்றாள்.
“எஸ்.”
ஆறுபாட்டில் க்ளுகோஸ். கிளிங்.... கிளிங்.. என்று புட்டிகள் மோத வெளியே வந்தன. டாப்ட் அட்டைகள். மாத்திரை கவர்கள்.
ஆறு பாட்டல்களையும் ஒன்றாக எப்படி எடுத்துப் போவது? மார்பில் தழுவியர் பார்மஸி பெண்ணுக்கு இரக்கம் வந்தது.
“மைக்கேல்.... மைக்கேல்”என்று ராகம் போட்டுக் கூப்பிட்டாள்.
“ஹீ ஹாஸ் கான்“ என்றான் சங்கர்.
   ப்ளீஸ்... வெய்ட்  “மருந்துகளும் மாத்திரைகளும் பொதிந்த கிளிப் பொந்து ஷெல்புகளை நோக்கிவெறொரு சீட்டுடன் அவள் நகர்ந்துவிட்டாள்.” 
காத்திருந்தான். காத்திருப்பின் உள்ளசலிப்பு இப்போதில்லை. ஒரு சின்ன திகில். அங்கே க்ளுகோஸ் தீர்ந்திருந்தால்? சே. இருக்காது.
யாரென்ன வரவேண்டியது?  நாமே எடுத்துப் போய் விடலாம். ஆனால் ஆறு பாட்டில்கள்! இரண்டு முழங்கைகளை நீட்டி. ஒன்றின் மீது ஒன்றாக பாட்டில்களை யாராவது அடுக்கி வைத்தால் மாத்திரைப் பைகளையும் டாப்லெட் அட்டைகளையும் வைத்து கீழே விழாமல் மோவாயில் அழுத்திப் பிடித்துக் கொண்டே போய்விடலாம்.
யாராவது வருகிறார்களர் சங்கர் அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் நேராக பார்மஸியை நோக்கி வந்தாள்.
“நான் கொஞ்சம் கொண்டு வரட்டும அவள் அத்தனை பாட்டில்களையும் கொண்டு போக முடியாமல் விழிக்கிறான் என்பதை அவள் உணர்ந்திருக்கவேண்டும்.”
சங்கர் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
இவளர்?
மிஷன் ஆஸ்பத்திரி மாதிரி ஒரு பெரிய மருத்துவ மனையில் வாரக்கணக்காகத் தங்கினால் பரிச்சயங்கள். ஆஸ்பத்திரி உறவுகள். சொற்ப காலப் பந்தங்கள் .
எம் வார்டுக்குக் கீழே படிக்கட்டு இறங்கியதும் ஒரு புல்வெளி. சின்ன பார்க். மாலை நேரங்களில் இவள் ஒரு மத்திய வயசுக் குருடனை அழைத்துக் கொண்டு வருவாள். ஆஸ்பத்திரிக்கு வருகின்ற குழந்தைகளில் இரண்டு மூன்று இவளைச் சுற்றிக் கொள்ளும் முன்பின் தெரியாத குழந்தைகள்! அந்த ஈடுபாட்டிற்கு என்ன காரணம்?.
ஜைனவியை படுக்கையில் விட்டு விட்டுக் கொஞ்சம் காற்று வாங்க வரும்போது அவன் எப்போதாவது யோசிப்பான்.
குழந்தைகளோடு குழந்தையாய் சிரித்துக் கொண்டே நிமிரும்போது அந்தச் சிரிப்பிலும் குதூகலத்திலும் கொஞ்சம் அவனுக்கும் வழங்குவது போல் அவனைப் பார்ப்பாள்.
நீருற்றிலிருந்து வாணம் சிதறுவது போல் சிதறும் நீர்த்துளிகள் தான் அவனுக்கு நினைவுவரும். இவ்வளவு தான் அவர்கள் அறிமுகம்.
ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் களித்துக் குலுங்கும் அவள் ஆனந்தம் சங்கரை. கண்கள் சோர்ந்து மூடினால் வராந்தாவில் நடக்கும்போது. லிஃப்டில் இறங்கும் போது நினைவுப் பொந்துகளிலிருந்து வெளிவந்து குசலம் விசாரித்து விட்டுப்போகும்.
அவள் யார்? எந்த வார்டுக்கு வந்திருக்கிறாள்? யாருக்குத் துணையாக? கடைசி கேள்வி மட்டும் சமீபத்தில் விளங்கியது. அந்த குருடனுக்கு.
அவனுக்கு என்ன உடம்பு?
சங்கர் தெரிந்து கொள்ள முனையவில்லை. அந்த முகத்தில் கண்களும் புருவங்களும் உதடுகளும் உணர்ச்சி லாகவத்தை அற்புதமாய் வெளியிடும்.
இப்போது அவளே முன் வந்து நிற்கிறாள்.
“கொஞ்சம் இதை எடுத்து என் கை மேலே வச்சா போதும்.”
“இல்லை.... ஆறு பாட்டில் இருக்கு! நான் ரெண்டு ரெண்டா நாலு எடுத்துக்கறேன். நீங்க ஒரு கையில் ரெண்டு பாட்டிலையும் இன்னொரு கையில மாத்திரை மருந்துகளையும் எடுத்துக்குங்க.”
அவள் சங்கரின் பதிலை எதிர்பாராது பாட்டிலை எடுக்கக் கை நீட்டினாள். அப்போதுதான் அந்த விரல்கள் எவ்வளவு நீளம் அவள் எவ்வளவு சிவப்பு என்று சங்கருக்கு உறைத்தது.
பாட்டிலை எடுத்துக்கொண்டு அவள் திரும்பாமல் நடந்தாள். “எம் வார்ட். ஜ.ஸீ?. யூனிட்.”
எங்கே போவது என்று அவளுக்கு வழி சொன்னான் சங்கர்?. “தெரியும்” என்று அவள் நடந்தாள்.
அந்தத் “தெரியுமில் பல விஷயங்கள் தெரிந்தன. தான் யாருக்காக ஏன் இங்கே தங்கிருக்கிறோம் என்று இவளுக்குத் தெரியும்”.
சங்கர் பின் தொடர்ந்தான்.
எதிரில் ஏதோ யோசனையோடு வந்த ஒரு லேடி டாக்டர் முன்னால் போகிறவளைப் பார்த்து நின்றாள்.
“ஹாய்... உமா”
“குட்மார்னிங் டாக்டர்”
உமா தலையை வளைத்து வணக்கம் சொன்னாள்.
“யாருக்கு குளுகோஸ்?”
“இதோ இவருடையது. எம். வார்டுக்குப் போகணும் இவராலே எத்தனை பாட்டிலைத் தூக்க முடியும்? நான் கூடப் போய்ட்டிருக்கேன்.”
“சோஷியல் ஸர்வீஸா.... குட்! யுவர் ரங்கன் ஈஸ் ஓகே. அடுத்த வாரம் வரைக்கும் ரெஸ்டுக்காகப் பெட்லே இருக்கட்டும். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடறோம்?”
“தாங்க் யூ டாக்டர்.”
“சபாஷ்....தாங்க் யூ சொல்லக் கத்துக்கிட்டே! பை தி பை ரங்கனோட ஆர்மி புக் வச்சிருக்கே இல்லை.... டிஸ்சார்ஜ் சமயத்திலே அதைக் காட்டணும்! எக்ஸ் சர்வீஸ் மேன்னா கட்டணத்திலே சலுகை கிடைக்கும்.”
“வச்சிருக்கேன் டாக்டர்.”
“குட்.”
டாக்டர் உமாவைச் சந்தித்த அந்த சிறு நிகழ்ச்சியில் கொஞ்சம் பிரகாசமுற்றது போல் முக மலர்ந்து நகர்ந்தாள்.
உமா சிரித்திருக்கவேண்டும். பின்னால் நின்றதால் சங்கருக்குத் தெரியவில்லை.
படியிறங்கிய உமாவைப் பின் தொடர்ந்த சங்கர் படி திரும்பிய இடத்தில் மீண்டும் நிற்க நேரிட்டது.
கூலிங்கிளாஸ் .பாலியெஸ்டா ஜிப்பா. வேட்டியோடு வஸ்தாத் மாதிரி ஒரு முப்பதுவயதுக்காரன். உமாவை வழி மறிக்கிறவன்போல் நின்றார்.
அவனை ஒதுக்கிக் கொண்டு போக முயற்சிக்கிறவள் போல் படியில் நகர்ந்தாள் உமா.
“என்ன உமா.... குளுகோஸ் யாருக்கு? ரங்கண்ணனுக்கா கொண்டா நான் எடுத்தாரேன்!”
ஆள் சிவப்பாக இருந்தான். வம்புக்கு இழுக்கிற சிரிப்பு. அந்தச் சிரிப்பில் வெளிப்பட்ட மமதை சங்கருக்கு வெறுப்பூட்டியது.
“கோனாருக்கு இல்லே! இதோ கூட வர்றவருக்கு வழியை விடுங்க.”
அவன் கூலிங் கிளாஸைக் கழற்றிவிட்டு அக்கறையோடு சங்கரைப் பார்த்தான். பிறகு மெவாக விசிலடித்தான். கண்களில் சிவப்புக் கோடுகள்.கூலிங் கிளாஸ் சுழற்றிய பின் அந்த முகத்தில் என்னை வெறு அல்லது எனக்குப் பயப்படு என்று சீட்டு எழுதி ஒட்டியது போன்ற ரௌடிக்களை அவள் விடவில்லை.
“மார்க்கு” என்று காரணமாக அவனை அழைத்தாள்.
“கூப்பிட்டியா”
“வழி விடறியா”
“இல்லேண்ணா ஒரு பாட்டிலை எடுத்து மூஞ்சி மேலேயே எறிஞ்சிடுவே போலிருக்கே!”
“இவரு அவசரமா வார்டுக்குப் போவணும்!”
“அப்படியில் லேண்ணா செய்வேங்கிறியா”
இப்போது தான் குறுக்கிட வேண்டியது அவசியம் என்று உணர்ந்தான் சங்கர்
“கொஞ்சம் அவசரங்க.”
அவன் சங்கரை ஏளனமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“இது ஜங்கிளையா இருந்தா நான் என்ன பண்ணுவேன்னு காட்டியிருப்பேன்!” என்று பளிச்சென்று சொன்னாள் உமா.
“ரங்கண்ணனுக்கு உடம்பு நல்லாயிருச்சில்லே.”
“போய்ப் பாரு.”
“அப்புறமாமா ஐந்கிளைக்குத் தானே வரப்போறே?”
சிவுக்கென்று இரண்டுபடி இறங்கிய உமாதிரும்பினாள்.
“என்ன மார்க்கு மிரட்டறியா”
“ப்சு... ப்சு... ப்சு .... நான் மெரட்டறதே கிடையாதே உமா. உனக்கே அது நல்லா த் தெரியுமே?”
உமா இவனோடு பேசுவது வீண் என்று படியிறங்கத் தொடங்கினாள்.
சங்கருக்கு இந்த அவசரத்திடையே இது நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. இந்த பாட்டில்களைச் சுமந்து வருவதில் இவளுக்கு அநாவசியமாக ஒரு பிரச்னை முளைத்தது போலவும் சங்கர் உணர்ந்தான்.
“ஒங்களுக்கு என்னாலே தொந்தரவு”என்றான் உமாவிடம். இதை விடுங்க. அந்தாளுக்கு அப்பப்ப இப்படி டோஸ் வாங்கியே பழக்கம்.”
உமா அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
அவனும் அவளும் படியிறங்கிக் கடைத்தெருத் சந்தடி போன்ற பார்வையாளர் கூட்டத்தில் நீந்தி என்கொயரி வராந்தாவைக் கடந்து எம் வார்ட் “கேட் அருகே வந்தனர்.”
எதிரில் ஆக்சிஜன் ஸிலிண்டர் ஏற்றிச் சென்ற மைக்கேல் திரும்பிக் கொண்டிருந்தான்.அம்மாம் பாட்டிலு இருக்குன்னு முன் கூட்டியே சொல்லக்கூடாது  சார்!”
இவன் ஜைனனியின் படுக்கையருகே சென்று திரும்பியவன்!
அவனைப் பார்ப்பதே ஆசுவாசமாக இருந்தது. இவன் சொல்வதற்கு கெட்ட செய்தி இல்லை. “சீ! என்னது தன் மனம் என்ன இப்படி சஷீணித்துவிட்டது?”
இப்படிச் சின்ன சின்ன விவரங்களில்கூட ஒரு தெம்பைத் தேடுமளவு என்ன பலவீனப்பட்டு விட்டது. சங்கர் அவனுக்கு அவன் கொண்டு போன ஸிலிண்டருக்கு. ரப்பர் இணைப்புகளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னான்.
அவனைக் கடந்து ஜ.ஸி. யூனிட்டின் உள்ளே நுழையும் வழியில் மூடி நின்ற பச்சைத் திரை முன் இருவரும் நின்றனர்.
ஒரு நர்ஸ் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
“உள்ளே போகக் கூடாது...”
க்ளுக்கோஸ் காட்டில்களைக் காட்டினான் சங்கர்.
“எங்கிட்டே குடுங்க!”
உமா பாட்டில்களைக் கொடுத்தாள்.
இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டே திரும்பியவள் சங்கர் பின் தொடர்வதைக் கண்டு “ஏய் மிஸ்டர் தமிழ்லே தானே சொன்னேன்! உனக்குப் புரியலே.”
சங்கர் எந்த கோபத்தையும் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தக் கூடிய மனோ நிலையில் இல்லை.
ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன் ட்யூ இணைப்பில் ஜைனவியின் மார்பு மெல்ல உயர்ந்து தாழும் துடிப்பைப் பார்க்கிறவரை அவன் அவனாக இல்லை.
“ஸாரி... ஸிஸ்டர்.”
அப்புறம்தான் நினைவு வந்தது. தன் பொருட்டு பாட்டில்களைச் சுமந்த உமாவுக்கு ஒரு நன்றி சொல்லி மறந்தது!
பாட்டில்களையும் மருந்துகளையும் ஒப்படைத்து விட்டு அவன் வெளியே வந்தான். உமா போய் விட்டிருந்தாள்.
லிஃப்ட் ஏறி வருகிறது. இறங்கிச் செல்கிறது. மீண்டும் ஏறுகிறது. இறங்குகிறது. லிஃப்டின் இரும்புச் சிறை விரித்து கூட்டமாய். ஒன்றையாய் இரட்டை முகங்கள். கவலை. பயம். அவசரம். சாந்தம். சிரிப்பு. சலிப்பு. உணர்ச்சிச் சுழிப்பின் சித்திரங்கள் எழுதிய முகங்கள்.
சங்கர் லிப்டிற்கு எதிரேயிருந்த பெஞ்சில் காத்திருந்தான். எவருக்காகவும் அல்ல. காத்திருப்பதற்காகக் காத்திருந்தான்.
உள்ளே ஜ.ஸி. யூனிட்டில் ஆக்ஸிஜன் ஸிலிண்டரின் ட்யூப் இணைப்பு வழியாக ஜைனவியின் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் உயிர் மூச்சு பிரவேசிக்கிறது.
ஒருமுறை லிப்ட் அந்த அடுக்கைக் கடக்கும்போது அதன் ட்யூப் இணைப்பு மேலே ஏறுவது தெரிகிறது. சங்கர் ஆக்சிஜன் சிலிண்டரின் இணைப்பை நினைத்துக் கொண்டான்.
இது மூன்றாவது வாரம்.
ஆனால் ஜைனவிக்கு மூன்று நாளாகத்தான் ஆக்சிஜன்.
“திடிர்னு ஒரே வலி.... அப்பா.... அம்மா...மாஸ்டர் மூச்சுவிடமுடியலே... வலிக்கிறது மாஸ்டர்... வலிக்....”
மூன்று வாரங்களுக்கு முன் பிரக்ஞையிழந்த ஜைனவியைத் தூக்கிக் காரில் போட்டு வந்து எமர்ஜென்ஸி வார்டில் சேர்த்து... மறுநாள் லிப்டில் ஏற்றி....
பகல்களும் இரவுகளும் வளர்ந்து மலர்ந்து உதிர்ந்து சருகாயின.
இதோ அதோ என்று மூன்று வாரங்கள் திரும்பி வராத ஓட்டப் பந்தயத்தில் மறைந்தன.
ஜ.ஸி.யூனிட்டின் விஸிட்டர்ஸ் பெஞ்ச் இவனைப் போல் லட்சம் போரைச் சுமந்து வழவழப்பாயிருந்தது.
நான்காவது நாளாக சங்கர்காத்திருந்தான்.
ஒரு டாக்டர் பச்சைத் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்ததால் எழுந்து ஓடினான்.
“உன்ன கண்டிஷன் டாக்டர்”
“க்ரிடிகள்... எதையும் சொல்றதுக்கில்லே.”
“ஈஸ் தேர் ஹோப்?”
“ஹோப் ஈஸ் த ஒன்லி வே.”
டாக்டர் இடக்கரடக்கலாகச் சொல்கிறாரா? பிலசாபிக்காகச் சொல்கிறாரா?,
டாக்டரை விழுங்கிக் கொண்டு லிஃப்ட் போகிறது. மீண்டும் கொண்டு வருகிறது.
வாரங்கள்...  நாட்கள்.... மணிகள்... வினாடிகள்... காலத்தின் எந்த இஞ்ச் டேப்பிற்கும் அடைபடாத கொடி அவஸ்தை அது. ஒரு இன்ஃபினிடியிலிருந்து இன்னோரு “இன்ஃபினிடி.”
ஜைனவி ஆரம்பித்தது?
மனம் நேர்த் தகவல்களைத் தவிர்த்து தாறுமாறாக ஓடுகிறது.
உயிர் ஆரம்பித்ததிலிருந்து.
ஆணும் பெண்ணும் உருவானதிலிருந்து.
ஆஸ்பத்திரிகள் தொடங்கப்படாததிலிருந்து. இது நோயாளிகளுக்குத் தெரியாது.  அவர்கள் பாக்கியசாலிகள். டாக்டர்கள். நர்ஸ்கள் ஆகியோருக்கோ நூறோடு நூற்றொன்று. எங்கே ஓர் இதயம் துடிக்க மறந்து விடுமோ என்று விஸிட்டர்ஸ் பெஞ்சில் வயிறு கலங்கக் காத்திருந்தால் மட்டுமே இந்த அவஸ்தை விளங்கும்.
அவனோடு காத்திருந்தவர்கள் அடிக்கடி மாறினார்கள். மகன்கள் வந்து போனார்கள்.
இவர்களில் எவனாவது ஒருவன் காதலனாக இருக்கலாம். ஜ.ஸி.வார்டின் பச்சைத் திரையை நீக்கீக் கொண்டு பரஸ்பர பூரண ஆரோக்கியத்தோடு வர வேண்டிய ஒருத்தியுடன் கல்யாணத்திற்காகக் காத்திருப்பவனாக இருக்கலாம்.[தொடரும்]