Saturday 27 September 2014

தமிழ் இனி மெல்ல 3:5[தொடர்கிறது]

தமிழ் இனி மெல்லதமிழ் [ 3:4  ]    சென்ற பதிவின் தொடர்ச்சி 
“முதல் கேள்விக்குப் பதில் சொல்வதானால் நான் முதல் முறையாக உங்களைக் கருவூராருடன் சந்தித்த நாளுக்குச் செல்ல வேண்டும்!” என்றபடி அங்கு இராஜேந்திரனுக்கும், இராஜராஜருக்கும் நடந்த சிறு பூசலைச் சுட்டிக் காட்டுகிறான்.

“அப்பொழுது அங்கு உங்களுக்கும், சக்ரவர்த்தியாருக்கும் இடையில் ஒரு திரை விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அது எனக்கு மட்டும் தோன்றவில்லை, கருவூராருக்குமே தோன்றியது என்பதை அவர் தமிழ்த் திருப்பணியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் புறப்பட்டதிலிருந்து தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல...” என்று மேலே தொடர்ந்து கருவூரார் இராஜேந்திரனும், இராஜராஜரும் பாண்டியருடன் உறவை மறுத்ததைப் பற்றியும் விளக்குகிறான்.

“அது கருவூராரின் மனதை மிகவும் பாதித்து விட்டது. எனவேதான், அவர் திருக்கயிலைக்குச் செல்லத் தீர்மானித்து தஞ்சையை விட்டு நீங்கி விட்டார். மேலும், நீங்களாகக் கேட்காவிடில், நான் அவரது மன ஓட்டத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் ஆணையிட்டுவிட்டார். பாண்டியருடன் நாம் இணைந்தால்தான் தமிழ்த் திருப்பணி நிறைவேறும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

“தாங்கள் என்னை தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது திருப்பணிக்கு மிகவும் உதவியது. ஆயினும் பாண்டியன் அமரபுஜங்கனுடன் சக்ரவர்த்தி அவர்கள் நடத்திய வாட்போர் அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்து விட்டது. திருப்பணி ஒரு நல்ல நிலைக்கு வருமுன்னரே தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டதே என்று வருந்தினார். அவர் கேட்டுக்கொண்டதால் தங்களுக்குச் சொன்ன இந்த உண்மையை அவருக்குச் சொன்னேன்.

“கருவூராரின் திருக்கயிலைப் பயணத்தின் காரணம் அவரை மிகவும் செயலிழக்கச் செய்து விட்டது. அவரின் கம்பீரம், தன்னம்பிக்கை, எதற்கும் அஞ்சாச் சிங்க நெஞ்சம் - கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து வருவதை தினமும் கண்டுவந்த நான் மிகவும் கலங்கினேன். என்னைத் திருமந்திர ஓலைநாயகமாக நியமித்தது என்னைத் தமிழ் திருப்பணியில் முழுதும் ஈடுபடவிடாமல் என் கவனத்தைத் திருப்பியது. அவரிடமே இதுபற்றிப் பேசிவந்தேன். அதைச் சரிசெய்ய முயன்ற பொழுதுதான் நான் இளஞ்சேரனிடம் பிடிபட்டுத் திரும்பினேன். அவரின் காலமும் முடிந்துவிட்டது.

“அந்த ஆற்றாமைதான் என்னை நிலைகுலைய வைத்து என் மகள் சிவகாமியிடம் தாங்கள் அனுமதிக்கும்வரை திருப்பணியைச் செய்வேன் என்று சொல்லவும் வைத்தது. என்றும் இல்லாத அதிசயமாக அவள் நான் பேசியதைத் தங்களிடம் சொல்லிவிட்டாள். அது தங்கள் மனதில் எப்படிப் பதிந்ததோ என்று இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தாங்கள்தான் அதைப் பற்றி என்னிடம் சொல்ல வேண்டும்.

“மேலும், சக்ரவர்த்தியாரின் மறைவிற்குப் பின்னர் தாங்கள் என்னை மேலும் மேலும் மற்ற அரசுப் பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தீர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துத் தாங்கள் எடுத்த முடிவு ஆகும் அது. என்னுடைய ஓலை நாயகத்தின் பதவி உரிமையைக் கொண்டு சக்ரவர்த்தியாரின் இறைவனடிமைத் திட்டத்தை நிறைவேற்றி விட்டேன். கோவில்கள் தோறும் இறைவனடிமைப் பெண்கள் தமிழ்க் கலைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அங்கீகாரமும், அந்தஸ்தும் பலரையும் இறைவனடிமைத் திட்டத்திற்கு ஈர்த்து வருகிறது.

“தங்களது மூத்த மகனான ஆளவந்தானுக்கும் சோழநாட்டின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உண்மையாக நம்பினேன். அவன் மூலமாகவே சேரநாட்டில் தமிழ் உருமாறிவரும் நிலையைத் தடுக்கத் திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். அதற்காகவே அவனுக்கு “மனுகுலகேசரி” என்ற பட்டத்தைத் தாங்கள் அளிக்குமாறு இடைவிடாது கோரினேன்.” சிறிது நேரம் சிந்தனை ஓட்டத்தை ஒருங்குபடுத்திவிட்டு மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

தமிழ் இனி மெல்ல 3:5[தொடர்கிறது]
அரிசோனா மகாதேவன் 


                                                  அத்தியாயம் 5
                             செயங்கொண்ட சோழபுரம்
                            பிங்கள, வைகாசி 24  -  ஜூன் 9, 1017
கூரைக்கு மேலே வண்டுகள் ரீங்காரமிட்ட வண்ணம் இருக்கின்றன. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிவாச்சாரி சொல்வதை காதுறுகிறான் இராஜேந்திரன். அவனது மனம் சிவாச்சாரி சொற்களில் உள்ள உண்மைகளையும், அதன் விளைவுகளையும் எடை போடுகிறது.

ஆளவந்தானுக்கு சிவாச்சாரி ஆதரவு தருவதாகச் சொல்வதும், நிலைவுமொழியையும் ஒரு வைணவனுக்கு மணமுடிக்கத் தூண்டியதும் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. அவனுடைய ஆழ்ந்து சிந்திக்கும் திறனிலும், தொலைநோக்குப் பார்வையிலும் இராஜேந்திரனுக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

தந்தையார் இராஜராஜரும் சிவாச்சாரி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்றும் அறிவான். கடைசிக் காலத்தில் அவனைக் கருவூராக எண்ணி அவன் கையைப் பிடித்துக் கொண்டுதானே உயிரை விட்டார்! அவனது மன ஓட்டம் சில சமயம் தன் மன ஓட்டத்திற்கு முரணாக இருப்பதையும் அவன் கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறான். இருப்பினும், தான் என்ன ஆணையிட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு முகம் சுளிக்காமல் முழுமனதுடன் நிறைவேற்றி வருவதும் அவனுக்குத் தெரியாமலில்லை. அவனே எல்லா விவரங்களையும் சொல்லட்டும் என்று காத்திருக்கிறான்.

“அரசே! சிவாச்சாரியனான நான் வைணவரான சேதுராயருக்கு முக்கியத்துவம் அளிப்பது சோழநாட்டின் மேன்மையைக் கருதித்தான். சைவமும், வைணமும் அதன் இரு கரங்கள், இரு கண்கள், இரு கால்கள், இரு செவிகள். அவை சேர்ந்து இயங்கினால்தான் சோழ நாடு சிறப்பாக இருக்கும். அவை வெவ்வேறு பக்கம் சென்றால் சோழ நாட்டின் வலிமை குறைந்துவிடும். சேதுராயர் மனம் குளிர்ந்தால்தான் அவரும், அவரது சந்ததியாரும், மற்ற வைணவக் குறுநில மன்னர்களும் சோழநாட்டின் மேன்மையைத் தாங்கும் தூணாக இயங்குவார்கள்.

“அதை எப்படி நிரூபிப்பது? ஆளவந்தானுக்கு அங்கீகாரம் கொடுப்பதன் மூலம்தான். “கேசரி” என்ற பட்டத்தை அளிப்பதன் மூலம் ஆளவந்தான் சோழப் பேரரசரின் வழித்தோன்றல் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது. அதே சமயம், சக்ரவர்த்தி அவர்களின் ஆணையும் மீறப்படாமல் இருக்கிறது. அவனது தாய்க்குக் கிடைக்காத அங்கீகாரம் - சேதுராயரின் மகளுக்குக் கிடைக்காத அங்கீகாரம் - அவரது மகள் வயிற்றுப் பெயரனுக்குக் கிடைக்கிறது. அடுத்தடுத்து நாம் செய்வதும் அதை உறுதிப்படுத்தும் வகையில் சேதுராயரின் பரம்பரை சோழநாட்டின் காவலர்களாக விளங்கும்.

“காடவன் ஒரு சிறந்த கல்விமான். தமிழறிவு மிக்கவன். வடமொழியும் அறிந்தவன். அவனைச் சேரநாட்டிற்கு தமிழ்த் திருப்பணிக்கு அனுப்புவது சிறந்தது. அவனது வடமொழித் திறன் அங்குள்ள நம்பூதிரி அந்தணர்களிடம் மதிப்பை ஈட்டும். அத்துடன் அவனுக்கு அரசியல் செயல் நயமும் அதிகம்.

“அவனுக்கு உறுதுணையாகச் செல்லத்தான் நான் நிலவுமொழியைத் தேர்ந்தெடுத்தேன். இராஜராஜ நரேந்திரன் அவளிடம் முறைதவறி நடந்தவுடன் அவள் தனது முதன்மையான தமிழ்ப் பணியை விட்டுவிட நேர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவள் திருமயிலையில் வெதும்பிப் புழுங்கிக் கொண்டிருந்ததும் என் மனத்தை வருத்தியது. அவள் அப்படி இருக்கக் கூடாது, அவள் மணவாழ்வையும் தொடங்கவேண்டும், அதே சமயம் தமிழ் திருப்பணிக்கு உதவியாகவும் இருக்க வேண்டும், இதெற்கென்ன வழி என்று சிந்தித்தேன். அவளையும், காடவனையும் இணைத்தால் அதுவே சிறப்பானது என்ற முடிவுக்கும் வந்தேன். எனவே, தங்களிடம் அவர்கள் திருமணம் பற்றி சேதுராயரிடம் பேசும்படி வேண்டிக்கொண்டேன். தில்லைக்கூத்தனின் அருளால் எல்லாமே நன்கு நிறைவேறியது.” என்று நிறுத்துகிறான் சிவாச்சாரி.

“அதெப்படி சைவப் பெண்ணையும், வைணவனையும் இணைக்கத் திட்டம் தீட்டினீர்?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

“தாங்கள்தான் முன்னோடியாக அமைந்திருக்கிறீர்களே அரசே!” என்று புன்னகைத்தவாறே பதிலிருக்கிறான் சிவாச்சாரி.

“அது சரி. தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றுவது தேவையில்லை என்ற காரணம்?”

“இதற்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது.” என்றபடி துவங்குகிறான் சிவாச்சாரி. “ஓலைநாயகமாக இருந்த அனுபவத்தால் நான் எடுத்த முடிவு இது. நகரை நிர்மாணிப்பது மட்டும் பெரிதல்ல. அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் வணிகர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாது, அங்கு நிறுவப்படும் பள்ளிகள், தொழிற்சாலைகள், கலைக்கூடங்கள் இவற்றை நிரப்பவும் மக்கள் குடிபெயர வேண்டும்.

“அவர்கள் பெரும்பாலும் தஞ்சையிலிருந்தே குடிபுக நேரிடும். இதனால் தஞ்சை தன் மக்களை இழந்து பொலிவிழக்க நேரிடும். இடம் பெயர்வது அந்த மக்களுக்கு இன்னலை உண்டாக்கும். மேலும் நிறையப் பொருள் தேவைப்படும்.

“நமக்குத் தொல்லை தரவேண்டும் என்பதற்காகவே நமது வணிக நாவாய்களைத் தாக்குவதை சிங்களவர்கள் ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருப்பதால் தாங்கள் கடற்படையை மூன்று மடங்கு விரிவு படுத்தத் தீர்மானித்திருக்கிறீர்கள். மேலும் தமிழ்த் திருப்பணிக்கும் நிறையப் பொருள், மக்கள் பலம் தேவைப்படுகிறது. தாங்கள் பெருவுடையாருக்குப் புதிய தலைநகரில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு இணையாக ஒரு கற்றளி அமைக்க இருப்பதாகவும்
எனக்குச் செய்தி கிட்டியுள்ளது. இதற்கும் ஏராளமான பொன்னும் பொருளும் தேவைப் படுமே!

“சக்கரவர்த்தி அவர்கள் விட்டுச் சென்ற பேரரசை உறுதிப் படுத்தவதே தலையாய பணி என்று எனக்குப் படுகிறது. அவர் பேரரசு முழுவதையும் தமிழ் கூறும் நல்லுலகு ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார். கருநாட்டார்கள் தங்கள் மொழியான கன்னடத்தை வளர்க்க முற்பட ஆரம்பித்து விட்டார்கள். கன்னடம் தமிழுக்கு அடுத்தபடியாகச் சிறந்து விளங்க ஆரம்பித்திருக்கிறது. அங்கு தமிழைப் பரப்புவதென்றால், அங்கிருப்பவர்கள் கன்னடத்தை விடுத்து தமிழைக் கற்க நாம் ஆவன செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு பொருளாசை காட்டுவதே சாலச் சிறந்தது என்பது எனது துணிபு. இதற்கு வேண்டிய செல்வத்தை புதிய தலைநகரை நிர்மாணிக்கும் திட்டம் திசை நிரப்பும் என்று எனக்குப் பட்டது.

“வெங்கியையும், ஆந்திரத்தையும் எடுத்துக் கொண்டால், அங்கு தெலுங்கு பேசப்பட்டு வருகிறது. தங்கள் மைத்துனர் விமலாதித்தர் நமது தமிழ்த் திருப்பணியை முறியடிக்கத் தன் மகன் மூலம் ஆவன செய்து வருகிறார். அவனுக்குச் சிறுவயதிலேயே தெலுங்கைப் புகட்டி தமிழைப் பேசவிடாமல் அடித்தார். இருப்பினும் நிலவுமொழியின் மீது ஏற்பட்ட மயக்கத்தால் அவன் தமிழைக் கற்றுக் கொண்டான். அவன் கொண்ட மயக்கம் தவறானது என்றதால் அவனது தமிழ்க் கல்வியும் தடைபட்டது. அதிலிருந்து அவன் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டான் என்று தங்களது தங்கையார் மூலம் எனக்குத் தகவல் வந்தது.

“அவன் திருப்பணிக்கு என்ன முட்டுக் கட்டை போடுவான் என்று நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. விக்கிரம சிம்மபுரி(நெல்லூர்)க்கு வடக்கேயும், மேற்கேயும் இருக்கும் சோட மன்னர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அங்கு தமிழ் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சைவ, வைணவக் குழப்பமும், உட்பூசலும் தலையெடுக்க வேண்டாம் என்றுதான் சேதுராயரை திருப்தி செய்யும் முயற்சி மேற்கொண்டேன்.

“இவ்வாறு பலவிதமான முதன்மையான செயல்கள் நிறைவேற்றப்பட வேண்டிய இத்தருணத்தில் நமது ஈர்ப்பை வேறு பணியில் திருப்ப வேண்டாம் என்றும், புதுத் தலைநகரை உருவாக்கும் செலவிலும், நேரத்திலும் மிகமிகச் சிறிய அளவிலேயே தஞ்சையை இன்னும் பெரிய, வனப்புள்ள நகராக்கி விடலாம் என்றும் தோன்றியது. எனவேதான் புதிய தலைநகரம் தேவையற்றது என்று அரசவையில் ஒரே எதிர்ப்புக் குரலாக எனது குரலைப் பதிவுசெய்ய வேண்டிய அவப்பேறும் எனக்கு ஏற்பட்டது. மற்றவர்களும் வெவ்வேறு ஊர்களையே புதிய தலைநகராக்கும் வண்ணம் பரிந்துரை செய்ததிலிருந்தே அவர்களும் புதிதாக ஒரு தலைநகரை நிர்மாணிக்க வேண்டாம், இருக்கும் ஒரு ஊரையே சிறப்புடையதாக்கலாம் என்று, தங்களையும் அறியாமல் என் கருத்தையே வலிவு செய்தார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

“தங்கள் வினாக்களுக்கு என் மதியில் எட்டியதை மறைக்காமல் விளக்கி உள்ளேன். என் கருத்து எப்படி இருந்தாலும், தங்கள் ஆணைக்கு என்றும் நான் கட்டுப் பட்டவன். ஒரு கணமும் யோசியாமல் சோழ நாட்டிற்காக என் உயிரையும் கொடுக்கத் தயங்காதவன் நான். அந்த உறுதியை தில்லைக் கூத்தனார் சாட்சியாக நான் தங்களுக்கு அளிக்கிறேன்.” சொல்லி முடிக்கிறான் சிவாச்சாரி.

அவனது பதிலைக் கேட்டு இரண்டு முறை தலையசைத்த இராஜேந்திரன் தனது விழிகளை மூடிக் கொள்கிறான். கண்களைத் திறவாமலேயே, “மிக்க நன்றி சிவாச்சாரியாரே! உமது உண்மையான பதில் எனக்குப் பல உண்மைகளை உணர்த்துகிறது. சில நாள்கள் நான் உமது சொற்களின் பொருளை அசை போட்டுப் பார்க்கிறேன். சிறிது நேரம் எனக்குத் தனிமை தேவைப்படுகிறது. எனக்குத் தொந்தரவில்லாமல் இங்கு காவலிருக்கும்படி எனது மெய்க்காப்பாளர்களை பணித்து விட்டு, நீர் உமது பணிகளைக் கவனிக்கச் செல்லும். தேவையிருந்தால் நான் சொல்லி அனுப்புகிறேன்.” என்று கூறுகிறான்.

சிவாச்சாரி மெல்ல அங்கிருந்து நகர்கிறான். இராஜேந்திரன் தன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிப் போக்கையும் காட்டாததால், தன் கூற்று இராஜேந்திரனின் உள்ளத்தில் தன்னைப் பற்றி எந்தவிதமான முடிவைத் தோற்றுவித்தது என்பதை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. அரசுப் பொறுப்பை ஏற்றதும் தனது உணர்ச்சிகளைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள நன்றாக இராஜேந்திரன் கற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அவனது அருகிலிருந்து கவனித்துக் கொண்டுதானே வருகிறான் சிவாச்சாரி!

ஏதோ ஒரு பெரிய திட்டம் அவனது மனதில் உருவாகி வருகிறது என்பதும், விரைவிலேயே அவன் அதை நிறைவேற்றுவது பற்றித் தெரிவிக்கப் போகிறான் என்பது மட்டும் சிவாச்சாரியனுக்குப் புலனாகிறது.

சிவாச்சாரி அங்கிருந்து சென்றதும், இராஜேந்திரன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை மலர்கிறது. கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்ட அவன் அப்படியே உறங்கிப் போகிறான்.
* * *
                                           ரோகணம், இலங்கை
                           பிங்கள, ஐப்பசி 8 - அக்டோபர் 23, 1017

கைகள் களைத்துப் போகின்றன முருகேசனுக்கு. அதைப்பற்றி அவனது உடல் தெரிவிக்க முயன்றாலும், அவனது மனமும், மூளையும் அதைத் திரை போட்டுத் தடுத்து விடுகின்றன. இதுவரை எத்தனை சோழவீரர்களை மாரியம்மனுக்குக் காணிக்கையாக்கினோம் என்ற கணக்கை நினைத்துப் பார்க்கவும் நேரமில்லாது போகிறது அவனுக்கு. அவனது ஒரே நோக்கம் - பாண்டியப் பொக்கிஷங்களைக் கவர்ந்து செல்ல வந்திருக்கும் சோழர்களைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே. வேறு எந்த நினைப்பும் - உடல் சோர்வோ, வலியோ, களைப்போ, தன் உயிரின் மீது பற்றோ, குடும்ப நினைப்போ - அவனுக்கு இல்லவே இல்லை...

...கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முன்னர் விக்கிரம பாண்டியன் அவனைச் சந்தித்து, பாண்டியப் பொக்கிஷத்தைக் காப்பாற்ற அவனுக்குத் துணையாக மூவாயிரம் பாண்டிய வீரர்களை விட்டுச் சென்றதும், பொக்கிஷத்தைக் காபாபாற்ற அவர்கள் துணைகொண்டு ஒரு பெரிய காப்புக் கட்டுமானம் செய்ததுதான் அவன் முதலாவதாகச் செய்த பணி.
---------------------------------------------------------------------------------------------------------------------------
[வையவன் படைப்புக்களை
 இதய ஒளி ப்ளாகில் காணலாம் 
blog address http // idhayaoli.Blogspot.in]
--------------------------------------------------------------------------------------------------------

நூறடி விட்டமும், இருபத்தைந்தடி ஆழமும் உள்ள ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அதற்குச் செல்ல சிக்கலான ஒரு வழி அமைத்தான். அந்தப் பள்ளத்திற்கு கருங்கற்களால் சுவர்களும், தரையும், மேல் தளமும் கட்டி, நடுவில் பதினைந்தடி அகலத்தில் ஆறு பட்டை உள்ள ஒரு அறை கட்டி, அந்த அறையில் பாண்டியப் பொக்கிஷங்களை வைத்து மறைத்தான். ஓரொரு பட்டையிலும் வெளியே செல்ல சுரங்க வழிகள் அமைத்தான். அந்த அறையில் மேல் தளத்தில் ஒரு சிறிய சிவன் கோவில் அமைக்கப்பட்டது. பொக்கிஷ அறை கீழே இருப்பது தெரியா வண்ணம்.

அந்தச் சுரங்கப் பாதைகள் ஒன்றை ஒன்று மூன்று முறை சுற்றி வந்து பிறகு தனித் தனியாக வெவ்வெறு திசையில் பிரிந்து சென்றன. சில வழிகள் ஒன்றோடு ஒன்று பதினைந்து அடிக்குப் பதினைந்து அடி அகலமான அறைகளில் சந்தித்தன. கடைசியில் இரண்டே வழிகள் வெளியில் வந்தன. ஒன்று முருகேசனின் குடிசைக்கும், இன்னொன்று, ஒரு சிறிய மண்டபத்தின் இரகசிய அறைக்கும் சென்றன. வழி தெரியாதவர் சுரங்கப் பாதையில் நுழைந்தால் வழி தவறித் திண்டாட வேண்டும் என்றே குழப்பான வகையில் அவை கட்டிப்பட்டிருந்தன.

சுரங்கப் பாதையும், ஒருவர் செல்லும் அளவுக்கே இருந்தபடியால் உள்ளே வருபவர் எவராக இருந்தாலும், சுரங்கப் பாதைகள் சந்திக்கும் அறையில் தாக்கிக் கொல்லப்படுவது எளிது. அது மட்டுமன்றி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு காவலாக நின்று விட்டால், அவர்களைத் தாக்கிக் கொன்று கீழே வீழ்த்தினால்தான் மேலே செல்ல இயலும். கடைசியில் அவர்கள் மேலே செல்ல இயலாதவாறு வழியும் அடைக்கப்பட்டு விட ஏதுவாகும். எனவே, நூற்றுக்கும் குறைவான வீரர்களே கடைசி நிலையில் பொக்கிஷத்தை நன்கு காவல் காக்க முடியும்.

இந்த அமைப்பைக் கட்டி முடிக்க பதிமூன்று மாதங்கள் ஆயிற்று. விக்கிரம பாண்டியன் ஆறு மாதங்கள் முன்பு வந்து பார்த்து விட்டு, முருகேசனைப் பாராட்டி விட்டுச் சென்றிருந்தான். அப்பொழுது அவன் முகத்தில் கவலைக் கோடுகள் நிறைய இருந்ததைப் பார்த்துக் கவலையுற்ற முருகேசன் அவனிடம் விசாரித்த போது சுரத்தில்லாமல்தான் பதிலளித்தான் விக்கிரமன்.

“முருகேசா, இராஜேந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து வரத் தீர்மானித்து விட்டான். கிட்டத்தட்ட முந்நூறு நாவாய்கள் ரோகணத்தைச் சுற்று வளைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. தொண்டித் துறைமுகம் நமது கைவிட்டுப் போய் விட்டது. தொண்டிக்கு நான்கு கல் தூரத்திற்கு முன்னரே அனைவரும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இப்பொழுது கொற்கைதான் நமது கைவசம் இருக்கிறது. அதை முதலில் கைப்பற்ற இராஜேந்திரன் திட்டம் தீட்டியே நாவாய்களை அமைத்து வருகிறான் என்று ஒற்று கூறுகிறது.

“கொற்கை பிடிபட்டால் பாண்டி நாட்டிலிருந்து இலங்கை வருவது குதிரைக் கொம்பாகி விடும். சேரத் துறைமுகமான விழிஞத்திலிருந்துதான் வர இயலும். எனவே இராஜேந்திரன் கொற்கையைத் தாக்க முற்பட்டால் அங்கு குவிந்திருக்கும் பாண்டியப் படை முழுவதும் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். உனது கடமை நமது பரம்பரைச் சொத்து இருக்குமிடத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதுதான். நீ நிறைவேற்றி இருக்கும் பாதாள அரணமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று பொக்கிஷ அறையில் மேல் தளத்தில் இருந்த சிவன் கோவிலில் வழிபட்டுவிட்டு, மேலும் இரண்டாயிரம் பாண்டியவீரர்களையும் விட்டுவிட்டுச் சென்றான்.

தன் அரசனைச் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக அது அமைந்து விடுமோ என்று முருகேசன் அஞ்சியபடியே நடந்து விட்டது.

இராஜேந்திரனின் ஒற்றர்கள் தவறான தகவலை அனுப்பி பாண்டிய ஒற்றர்களைக் குழப்பி இருந்ததால் பாண்டியப் படை கொற்கையில் கட்டிப் போடப்பட்டது. நாகைப்பட்டினத்திலிருந்து திரிகோணமலைக்கு இருநூறு நாவாய்கள் மூலம் நிறைய சோழவீரர்களை அனுப்பி ரோகணத்தைத் தாக்கினான் இராஜேந்திரன்.

அவனுடன் தோள் கொடுத்து சோழப் படைவீரர்களுடன் முன்னிருந்து வீரப் போர் புரிந்தான் இராஜாதிராஜன். தனக்குப் பிடித்த யானைப் படைகளை அணிவகுத்துப் போர் புரிந்து சிங்களப் 

படைகளைச் சின்னா பின்னாமாக்கினான். பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி சோழ நாட்டிற்குக் கொண்டு வருவதும், வணிக நாவாய்களைக் காப்பாற்ற இலங்கையிலிருந்து தாக்கும் கடல் கொள்ளைக்காரர்களைப் பூண்டறுப்பதும் சோழர்கள் திட்டமாக இருந்தது.
[வளரும்]
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayaoli.Blogspot.in]

Friday 26 September 2014

அவரைப்பற்றி இவர்

சி. ஜெயபாரதன்கனடா

கவிஞர் புகாரியின் குடும்பத்தார் கனடாஅண்டாரியோ மாநிலத்தில் உள்ள டொராண்டோ பெரு நகரிலிருந்து,கிங்கார்டின் சிறு கிராமத்துக்கு  வருகை தந்து எங்கள் வீட்டில் இரண்டரை நாட்கள் தங்கிக் கலகலப்பை உண்டாக்கினார். அந்த வரலாற்று நாளை நினைவூட்ட எழுந்த கவிதை இது.

 ஒரு மரத்துப் பறவைகள்

 சி. ஜெயபாரதன்கனடா


 வலைப் புறாவை ஏவி விட்டுத் 
 தூதனுப் பினேன்!
 கூடு விட்டுக்
 கூடு பாய்ந்தன குயிலின் பறவைகள்,
 கனடாவின்
 கூரான் ஏரிக்கரை நோக்கி!



வீடுகள் வேறாயினும்
 வேர்கள் ஒன்றே!
 கிளைகள் வேறாயினும்,
 விதைகள் ஒன்றே!
 பறவைகள் யாவும் பிறந்தகம் விட்டு
 புதுத்தளம் அடைந்தவை!
 கூடுகள் மாறினும்,
 வீடுகளின் அடித்தளம் ஒன்றே!



 இல்லத்தரசி
 வெளியூர் செல்ல,
 மெல்லத் தயங்கினேன் வரவேற்க!
 வீட்டாளி விழித்து நிற்க,
 அறுசுவை உண்டியை முந்தைய நாள்
 இரவோடு இரவாய்
 முறுவலோடு சமைத்து
 வீட்டுக்காரன் இலையை நிரப்பியவர்,
 விருந்தாளி அம்மையார்!
 வேடிக்கை அல்லவா இது?
 வீட்டுக்காரன் விருந்தி னாக,
 விருந்தாளி
 வீட்டாளி யான தெங்கே?




 சென்னைக் கவிதை விழாவைப்
 படமெடுத்துப்
 கணினியில் போட்டுக் காட்டினார்.
 பூரித்தேன்போற்றினேன்வியந்தேன்!
 வைரமுத்துமாலன் முன்னமர,
 வைகைச் செல்வி வியப்படைய,
 நூறு பேர் முன்பாக,
 அன்னைக்குப்
 பொன்னாடை போர்த்திய
 உன்னத புத்திரனைப்
 பொன்னெ ழுத்தால் பொறிக் கின்றேன்,
 கண்களில்
வெந்நீர் பொங்கு தப்பா!

   
 பிரியும் வேளை வந்ததும்,
 கண்ண பெருமானுக்கு,
 அளிக்க ஏது மின்றி
 அவல் கொடுத்தான் குசேலன்!
 நான் அளித்த
 தோட்டக் கனிகளும்,
 காய்கறிப் புதினா இலைகளும்,
 கருவேப் பிலையும்,
பச்சை மிளகாய்க் கொத்துகளும்,
 கனிவுடன் விஜயம் செய்த
 கவி வேங்கை குடும்பத்துக்குக்
 கைமா றாகிடுமா?


*********************************

கவிஞர் புகாரியின் பதிலிது:



                                                           


இனிய ஜெயபாரதன் அவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். எனவே நட்சட்திரக் குறியிட்டு அப்படியே இம்மடலை வைத்திருந்தேன். என் பணிச்சுமை அப்படி...

இன்றும் போதிய நேரல் இல்லை என்றாலும் சில வரிகளாகவது சொல்லிப் போகவே வந்தேன்...

கனடாவில் அறிவியல் கட்டுரைப் பேரரசை இந்த அடியேன் குடும்பத்தோடு சென்று பார்த்து இரு தினங்கள் அவரின் மாளிகையில் தங்கி மகிழ்ந்து வந்த கதையைச் சொல்ல பக்கங்கள் போதாது.

குறிப்பாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஜெயபாரதனின் அறிவு இல்லத்தில் நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார்.

அடுக்கிவைக்கப்பட்ட ஒளிநாடாக்களில் சரித்திர விசயங்கள் ஏராளம். அதில் ஈழத்தின் புலிமுகாம்களில் பிபியெஸ் [PBS]  எடுத்த குறும்படம் பார்தோம். சொல்ல வார்த்தைகள் இல்லை. சயனைட் தாலி கட்டிக்கொள்ளும் பிஞ்சுகளைக் கண்டால் கண்ணீரல்ல கண்களே வெளிவந்து விழுகின்றன...

இந்திய சுதந்திரகால பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம் இன்னொரு ஒளிநாடாவில்...

பின் தோட்டத்தில் கொத்துக்கொத்தாய் காய்கறிகள் பழங்கள் என்று சுறுசுறுப்பாய்த் தோட்டவேலையில் சாதனை காட்டி இருக்கிறார்

ஒரு கறுவேப்பிலைக் கன்றை தத்தெடுத்துக்கொண்டு வந்தோம் நாங்கள் டொராண்டோவுக்கு..

ஏரிக்கரையில் உல்லாசமாக அலைந்தோம் புகைப்படங்கள் எடுத்தோம்...

இனிப்பாய்க் கழிந்த நாட்களைக் கடந்து மீண்டும் வீடுநோக்கி வரும்போது வழியில் ஒரு அழகி பூனைக்குட்டி மியாவியது என்னை அழைத்துப்போ என்று. அள்ளி எடுத்துக்கொண்டோம். வரும் வழியிலேயே அதற்குப் பெயர் சூட்டு விழா நடந்தது.

தேன்முகில் என்று பெயரிட்டேன். என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது பெயர். முகில்... முகில்... என்றால் இப்போதெல்லாம் பூனைக்குட்டிக்கு ஒரே ஆனந்தம். அதற்கும் அந்தப் பெயர் பிடித்துப் போனதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...


அன்புடன்
புகாரி


[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayaoli.Blogspot.in]

Thursday 25 September 2014

அவரைப்பற்றி இவர்

                                                         
                                                    அவரைப்பற்றி இவர் 
கலைமாமணி.டாக்டர் விக்கிரமன் அவர்களோடு கௌதம நீலாம்பரன் 

             கலைமாமணி விக்கிரமன் பற்றி  
                                    கௌதம நீலாம்பரன்


தமிழ் இதழியல் வரலாற்றில், கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு மிக்க இடம் உண்டு. கலமகள் ஆசிரியராக இருந்த கி.வா.ஜ. தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என்.சிவராமன், முரசொலி நாளேட்டின் ஆசிரியர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு மேலாக இதழாசிரியராக பணிபுரிந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் என்பர். அந்த வரிசையில் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்த பெருமை விக்கிரமனுக்கு உண்டு.  தற்போது 18 ஆண்டுகளு்கு மேலாக, இலக்கியப்பீடம், என்கிற இலக்கிய இதழை நடத்தி வருகிறார். தமிழரசி மங்களம் என்னும் வார இதழ்களிலும் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். வேம்பு என்கிற இயற்பெயருடைய அவர், எல்லோருக்கும், எந்த நாளிலும் இனிப்பானவராகவே திகழ்ந்து வருவது, எழுத்துலக நண்பர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மையாக இருக்கிறது. நூற்றுக் கணக்கான இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து, எழுத்துலகில் தடம் பதிக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.
சமயம், தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டுச் சரித்திரமாகவும் புலப்படுகிறது எனக்கு.
இந்நூலில் விக்கிரமன் அமுதசுரபி இதழின் காரணமாக எத்தகு பெருமக்களையெல்லாம் சந்தித்தார் என்பதை வாசிக்கும் போது நமக்குச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. இன்று தமிழ் இலக்கிய உலகம், யார் யாரையெல்லாம் தமிழ் மேதைகளாக, தமிழறிஞர்களாகப் போற்றிக் கொண்டாடித் தலை வணங்குகிறதோ அத்துணைப் பெரு மக்களையும் நேரில் கண்டு, உரையாடி மகிழ்ந்து, அவர்களி்ன் நல்லாசிகளைப் பெற்று, அவர்கள் எழுதிய நல்லிலக்கியப் படைப்புகளையும் பெற்று, அமுதசுரபி இதழ்களில் - தீபாவளி மலர்களில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இப்பெருமகன்.

தமிழ் தென்றல் திரு.வி.க, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மூதறிஞர் இராஜாஜி, கி. ஆ.பெ. விசுவநாதன், டாக்டர் மு. வரதராசனார், உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் (மகாத்மா காந்திஜி பற்றி முதல் ஆவணப் படம் எடுத்தவர்) பேராசிரியர் கல்கி, பொதுவுடைமை இயக்க மாமேதை ப.ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தாத்தாவின் தனிப் பெரும் சீடரான கி.வா.ஜ., தமிழ் நாடக மேதை டி.கே. சண்முகம், டி.கே.பகவதி, பன்மொழிப் புலவர் அப்பா துரையார் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் மட்டுமல்லாது, தமிழ் நிலத்தின் புகழ் பூத்த அரசியல் தலைவர்கள் பலரோடும் விக்கிரமன் பழகியிருந்தார்.
எழுத்தாளர்களோடு விக்கிரமன் அவர்களுக்கு உள்ள தொடர்பு அமுதசுரபி இதழுக்காக மட்டுமின்றி, இவருடைய தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்பானதாகவும் திகழ்வதால், அவர்களின் பெயர்ப் பட்டியலை நான் இங்குத் தொகுத்தால் அதுவே பல பக்கங்களாக நீட்சி பெற்றுவிடும். இவருக்கு முன்பு பிரபலமாக இருந்தவர்கள், இவரால் பிரபலமாக்கப் பெற்றவர்கள் என்று வேறு, வகைப்படுத்தி எழுத நேரும் அத்தனை பேரையும் அமுதசுரபியில் அணைத்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் சாண்டில்யனின் மலைவாசல், ஜீவபூமி போன்ற சரித்திரக் கதைகளை வெளியிட்டு, அவரைத் தமிழ் வாசக உலகில் மிக அழுத்தமான நேசிப்பிற்கு உள்ளாக்கியதோடு, குமுதம் வார இதழுக்கும் அறிமுகம் செய்து வைத்துப் புகழின் உச்ச நிலையைத் தொட வைத்த பெரும் பண்பாக ஒளிர்கிறது.  அதே போன்று ஜெயகாந்தனின் சிறுகதைகளை வெளியிட்ட சூழல், விந்தன் எழுதிய அன்பு அலறுகிறது தொடர்கதையை விந்தனே வேண்டிக்கொள்ள ஜெயகாந்தன் இறுதி அத்தியாயங்களை எழுதித் தந்த நிலை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. விந்தன் எழுதிய இக்கதையால் அகிலன் அவர்களின் அவர்களின் எதிர்ப்பையும் மனக் கசப்பையும் விக்கிரமன் எதிர்க்கொள்ள நேர்ந்த விவரங்கள் நமக்கு அவர் மீது பெரும் பரிவை ஏற்படுத்துகின்றன. கிட்டத்தட்ட சாதி மோதலுக்கு வித்திடுவது போன்ற அந்தப் பகைச் சூழலை மனிதர் தன்னந்தனியொருவராக நின்று - தர்மயுத்தம் நிகழ்த்திய நெஞ்சுரம் பாராட்டத்தக்கதாக  இருக்கிறது.

அமுத சுரபி இதழின் பொறுப்பை முழுவதுமாக ஏற்று நடத்த இதழ் நின்று போகாமல் வெளிவர விக்கிரமன் பட்ட பாடு சிறிய மாமனாரிடம் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கிச் சமாளித்த நிலை - பிறகு அக்கடனை அடைக்க முடியாமல் பட்ட சிரமங்கள் - மேலும் பல இடங்களில் கடன் வாங்கியும் மனைவிழயின் நகைகளை அடகு வைத்தும் இதழைக் கொண்டு வந்த போராட்டங்கள் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன. பிரசவத்துக்கு ஜம்ஷெட்பூர் சென்ற மனைவியைப் பல மாதங்கள் பிரிந்திருந்து காணச் சென்ற நிலையிலும், மனைவி முகம் கண்டோ - பிறந்த பிஞ்சு மழலையின் முகம் கண்டோ மகிழ்வதை விட, கல்கத்தா நகரில் ஒரு விளம்பர நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய பாக்கித் தொகையை வசூலித்தால் தான் சென்னை வந்தவுடன் தொடர்ந்து இதழை வெளிக்கொண்டு வரவியலும் என விக்கிரமன் தவித்த தவிப்பு இருக்கிறதே அதை நினைத்துப் பார்க்கும் எவர் மனமும் கலங்கும்; கண்ணில் நீர் பெருகும்.

                                                     வையவன் 

1950-60களில் இருந்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களில் ஒருவரது படைப்பாவது அமுதசுரபியில் வெளிவராது இருந்திருக்க வாய்ப்பில்லை. அமுத சுரபி என்றும் அவர் காலத்தில் அமுதம் சுரந்தபடி இருந்ததை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்தபடி இருந்துள்ளது 

தமிழ் எழுத்தாளர்களை பல வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று மதிப்பும் மரியாதையும் பெற்றுத்தர முதல் மூல காரணியாக இருந்தவர் டாக்டர் விக்கிரமன் அவர்கள் 

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைத்து அது இன்று வரை தளராத 
வெற்றிநடை போட்டு வருவதற்கு அவரே அச்சாணி.

தமிழ் எழுத்தாளர் நல நிதி என்று வரலாறு காணாத அமைப்பைத் தொடங்கி இன்றளவும் பல நலிந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி நல்கி வருகிறார்.

தினத்தந்தி ஆதித்தனார் நினைவுப்பரிசு, கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது தமிழ் பல்கலைக்கழகப் பரிசு என்று பற்பல பரிசுகளும் விருதுகளும் பெற்ற கலைமாமணி அவர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது என்றோ கிடைத்திருக்க வேண்டிய விருது . கோஷ்டிப் பூசல்களும் அரசியல் மாற்சர்யங்களும் தலை தூக்கி விளையாடும் சதுரங்க மேடையான சாஹித்ய அகாடமி இவரது ஒப்பற்ற இலக்கியத் தொண்டை எப்படி மதிப்பிடும் ? இவர் எந்த அரசியல் கட்சிக்கும் துணை போகவில்லையே!

உடல் நலமாக இருந்த காலகட்டங்களில் ஒவ்வோர் பாரதி நினைவு நாளிலும் எட்டயபுரம் பாரதி மண்டபத்தில் ஊர்வலம் சென்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி நமது தமிழ் இலக்கியப் பிதாமகன் மகாகவி நினைவை இவர் போற்றி வந்ததை 
எந்தத் தமிழரும் மறக்கமாட்டார் 
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address
idhayaoli.Blogspot.in


வாழ வைத்திருக்கிறது தீபத்தின் அறிவு ஒளி

டாக்டர் மு.வ
ஒருமுறை நா.பா. ஒரு கடிதம் கொடுத்து, டாக்டர் மு.வரதராசனார் அவர்களிடம் கொடுக்க என்னை அனுப்பினார். எழும்பூர் ரயில் நிலையம் சென்று, ரயிலில் அமர்ந்திருந்த மு.வ. அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் மதுரைக் காமராசர் பல்கலையின் துணைவேந்தராக இருந்ததாக நினைவு. ஜன்னல் வழியே அவரைக் கண்டு, வணங்கி, கடிதத்தை நீட்டினேன், உள்ளே வருமாறு அழைத்தார். சென்று நின்றேன். எதிர் இருக்கையில் அமரச் சொன்னார். பயணிகள் இன்னும் அதிகம் வரவில்லை. பரபரப்பு கூடாது என்பதால் மு.வ. முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார். 

எங்கள் மாமா வீட்டில், சிறு வயதில் மு.வ. நூல்களை நான் கண்டதுண்டு. மண்குடிசை, அகல்விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ போன்ற மு.வ.வின் கதைகள் சிலவற்றைப் படித்துவிட்டு என் மாமா சிலாகித்துப் பேசியதும் மனத்தில் பதிந்திருந்தது. சென்னை வந்தபின் நானும் ஒன்றிரண்டு கதைகளை வாசித்திருக்கிறேன். பள்ளியில் படித்தபோது, திருக்குறளுக்கு மு.வ. உரையெழுதிய கையடக்கப்பதிப்பு ஒன்று என்னிடம் இருந்தது.

மு.வ. வுக்குப் பிறகு இலட்சிய நோக்குடைய கதை மாந்தர்களை உலவ விட்டுக் கதைகள் படைத்தவர் நா.பா. என்றொரு பேச்சு உண்டு. அத்தகு மாமனிதரை அருகில் பார்த்த பிரமையில் இருந்தேன் நான். அன்று மு.வ.தீபம் இதழ் எப்படி நடக்கிறது? இலக்கிய ஏடுகள் விற்பனையாகின்றனவா?’ என்றெல்லாம் அக்கறையுடன் கேட்டார். என்னைப்பற்றியும் விசாரித்தார். அந்த சந்திப்பு என்னால் மறக்க முடியாதது.

இதே போல் ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் வீட்டிற்கு நா.பா. என்னை அனுப்பினார். தீபாவளி இதழ் கொடுக்க வேண்டியிருந்தது. அதில் கண்ணதாசனின் கவிதை இடம் பெற்றிருந்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் அங்கு சென்றிருந்தேன். கவிஞர் சாப்பிட்டபின் படுக்கையறையில் உட்கார்ந்திருந்தார். நான் வாசலில் இருந்தவர்களிடம் தீபம் இதழைக் கொடுத்துவிட்டுச் செல்லவே நினைத்தேன். ஆனால், கவிஞர் உள்ளே அழைத்தார். சென்றேன். அவருக்கே உரிய சூழ்நிலையில்தான் அவர் இருந்தார். ஆயினும் என்னை உட்கார வைத்து, தீபத்தில் பிரசுரமான கவிதையை வாசிக்கச் சொன்னார். நான் ஏதோ கட்டுரை படிப்பது போல வாசித்தேன். எத்தனை பெரிய கவிஞர் முன்னிலையில் இருக்கிறோம் என்கிற பதற்றம் எனக்கு. அவரோ நிதானமாக என்னைத் திரும்ப ஒரு முறை படிக்கச் சொல்லிவிட்டு, இதழை வாங்கிப் பார்த்தார். அட்டையில் அமுதோன் வரைந்த ஓவியம். அதை மிகவும் ரசித்தார். பிறகு அவர் நடத்திய ‘கண்ணதாசன்’ இதழைப் பற்றி ஏதேதோ சொன்னார். ‘ரொம்ப சிரம்மப்பா... பத்திரிகை நடத்துவது சாதாரண காரியமில்லை. பாவம், நா.பா. எப்படித்தான் சமாளிக்கிறாரோ, விசாரித்தேன் என்று சொல். எப்போது வேண்டுமானாலும் நீ இங்குவா, தீபத்திற்கு எது வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்’ என்றார். (பிறகு நான் மணியனிடம் சென்ற பிறகும் இதயம் பேசுகிறது இதழில் கவிஞர் எழுதிய ‘மனதுக்குத் தூக்கமில்லை’ என்ற தொடர்கதை சம்பந்தமாக அவரை நான் சந்தித்ததுண்டு)

ஓவியர் அமுதோன், மாருதி போன்றவர்கள் நா.பாவிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தீபம் அட்டைக்கு இவர்கள் அருமையான ஓவியங்களை மிகக் குறைந்த சன்மானம் பெற்றுக் கொண்டு வரைந்து தருவார்கள். மணியம் செல்வன் அப்போது ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவரும் தீபம் அலுவலகத்திற்கு வருவார். படங்களும், அழகிய தலைப்புகளும் எழுதித் தருவார். தினமணிகதிர் அலுவலகத்தில் ஜெயம் என்றொரு பெரியவர் இருந்தார். சுதேசமித்திரனில் வெளியான ‘புத்தரின் புன்னகை’ என்ற என்னுடைய முதல் கதைக்கு இவர்தான் ஓவியம் வரைந்திருந்தார். இவரும் தீபத்திற்கு நிறைய கதைத் தலைப்புகள் எழுதித்தருவார். ஓவியர் ஏ.எஸ் மணி என்றொரு பெரியவர் தாம்பரத்திற்கு அப்பாலிருந்து வருவார். கு. அழகிரிசாமி தீபத்தில் எழுதிய உலகப் புகழ் பெற்ற குட்டிக் கதைகளுக்கு இந்த மணி மின்னல் வேகத்தில் ‘கேரிகேச்சர்’ டைப் படங்களை  வரைந்து தருவதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இவருடைய திறமைகள் பற்றி ஓவியர் மாருதி நிறையவே புகழுவார்.

மாருதி அப்போது மயிலாப்பூரில், லட்சுமி லாட்ஜில் தங்கியிருந்தார். திருமணம் ஆகியிருக்கவில்லை. மாருதி நா.பா.விடம் மிகுந்த அன்புடையவர். தீபத்திற்கு அட்டைப் படமோ, கதைகளுக்கான ஓவியங்களோ ஆர்வத்துடன் வரைந்து தருவார். பணம் எத்தனைக் குறைவு என்றாலும் அதைப்பற்றி எதுவும் பேச மாட்டார். ‘பாவம், ஒரு நல்ல எழுத்தாளர். அவரே கஷ்டப்பட்டு தீபம் நடத்துகிறார். அவராக எவ்வளவு கொடுக்கிறாரோ, அது போதும்...’ என்று அனுதாபத்துடன் பேசுவதோடு, என்னையும் அழைத்துச் சென்று, மெஸ்ஸில் சாப்பாடு வாங்கித் தருவார். மாருதி நல்ல இலக்கிய ரசிகர். கம்யூனிஸம் பேசுவார். புல்லாங்குழல் வாசிப்பார். பல புகழ்பெற்ற ஓவியர்களைப் பற்றி மாருதி கூறிய தகவல்களைத் தொகுத்திருந்தால், ஒரு புத்தகமே போட்டிருக்கலாம். வெலிங்டன் தியேட்டரில் ஞாயிறு காலைக் காட்சிகளில் இந்தி, வங்காளிப் படங்கள் ஓடும், சத்தியஜித்ரே போன்ற சில பிரபலங்களின் படங்களைப் பார்த்துவிட்டு வந்து நா.பாவிடம் தொலைபேசியில் கூறுவார். உடனே நா.பா. என்னை டிக்கேட் வாங்கி வரச்சொல்லி, அப்படங்களைப் பார்ப்பார். இதன் காரணமாக ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஆரண்யா தீன் ராத்திரி’, அஷானி சங்கேத் போன்ற பல அபூர்வமான திரைப்படங்களை நானும் பிறகு பார்த்ததுண்டு.

‘தீபம்’ அலுவலகத்தில் பல எழுத்தாளர்களும் நா.பா.வின் ரசிகர்களும் வந்து அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பர். நா.பா.முகம் சுளிக்காமல் அத்தனை பேருடனும் இனிமையாகப் பேசுவார். அப்படி வருகிற பலரும் பெரிய பெரிய உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருப்பர். ஆனால், தீபத்தில் நா.பா.இட்ட வேலைகளை ஆர்வமுடன் செய்து கொண்டிருப்பர். தீபம் இதழ்களைக் கடையில் போடுவதை விட, சந்தாதாரர் எண்ணிக்கையே அதிகம். ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு சந்தாதாரர் விலாசம் ஒட்டிய உறைகளைச் சுற்ற வேண்டும். இது போன்ற பணிகளை மிகப்பெரிய உத்தியோகம் பார்க்கும் பலர் அங்கு வந்து, ஒரு தொண்டு போலச் செய்வர்.

நா.பா. ‘POWER’  என்று ஓர் இலக்கிய அமைப்பை ஆரம்பித்து நடத்தினார். மாதத்தில் ஒரு நாள் நிகழும் இந்த ‘பவர்’ அமைப்பின் கூட்டத்திற்கு அத்தனை எழுத்தாளர்களும் வருவர். பழைமைச் சிந்தனைகள் மாறாத முதுபெரும் தமிழறிஞர் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ முற்போக்குச் சிந்தனையுள்ள பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சா. கந்தசாமி அனல்பறக்கும் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் சின்னக் குத்தூசி, மொழிபெயர்ப்பு இலக்கிய வித்தகர்கள் என்று பலதரப்பட்ட எழுத்தாளர்களும் அங்கு ஒன்று கூடுவர். மாடியில் தரையில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து விவாதங்கள் நிகழும். எத்தனை மாறுபட்ட கருத்துகள் எத்தனை உரத்த குரலில் பேசப்பட்டாலும், இறுதியில் அன்பும் மரியாதையும் மாறாமல் ஒருவரோடொருவர் கைகுலுக்கி, மகிழ்வுடன் கலைந்து செல்வர்.

உலகப்பார்வை, சமூகச் சிந்தனை, படைப்புகளின் உன்னதம் என்று ஏராளமான விஷயங்களை இந்தக் கூட்டங்களில் என்னைப் போன்றவர்கள் பெற முடிந்தது என்றால் அது மிகையில்லை. ஒரு நல்ல கதையை எங்கே படித்திருந்தாலும் அதைப் பற்றி அங்கே சிலாகித்துப் பேசுவார்கள். எழுதும் கனவுகளோடு உள்ள ஒரு புதிய இளைஞனுக்கு இது ஒரு பயிற்சிப் பட்டறை போலவே இருந்தது எனலாம்.உப்பிலி சீனிவாசன், அ.நா.பாலகிருஷ்ணன், சங்கரி புத்திரன், ஆவடி சீனிவாசன், பாலசுப்பிரமணியன், எம்.எஸ்.தியாகராஜன், கண்ணன் மகேஷ் போன்ற பலர் ‘தீபம்’ அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார்கள். எல்லோருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தனர். எழுத்துக் கனவு சிலரிடம் இருந்தது. சிலர் நல்ல ரசனையோடு மட்டும் இருந்தனர்.

இவர்களையும் இன்னும் சிலரையும் பற்றி தனித்தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது.

மு. மேத்தா, நா. காமராசன் போன்ற அருமையான கவிஞர்களின் ஆரம்பகாலப் புகழ்மிக்க படைப்புகள் தீபத்தில்தான் வெளியாயின. மொழிபெயர்ப்புக்கென சாகித்ய அகாடமி விருது பெற்ற குறிஞ்சி வேலனின் அற்புதமான பல படைப்புகள் தீபத்தில் இடம் பெற்றன. இதைப் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்ல ஆரம்பித்தால், அது பெரிய ஆய்வுக்கட்டுரை நூல் போலாகிவிடும்.
தெருவில் கிடந்த என்னை எடுத்துத் தூசுதட்டி, ஒரு நல்ல மனிதனாக - எழுதும் ஆற்றலுடையவனாக ஆக்கியவர் நா.பா. ‘காணும் உலகம்’ மட்டுமே அறிந்திருந்த எனக்கு ‘அறியும் உலகம்’ என்றிருக்கிறது என உணர்த்தியவர் நா.பா. அவருடைய தொடர்பு மட்டும் ஏற்படாது போயிருந்தால், நான் சிதைந்து- சின்னாபின்னமாகியிருப்பேன்.

நா.பா.வுக்காக நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு மனிதரும் என்னுள் பெரும் சிந்தனைக் கிளர்வை ஏற்படுத்தினர். வரலாற்று அறிஞர் அ.கி. பரந்தாமனார், தேசிய உணர்வி ஊறிய கு. ராஜவேலு, புதுக்கவிதை அலைகளை இலக்கியக்கடலில் பரவலாகத் தோன்றச் செய்த ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா பாரதிக்குப்பின் இதன் நவீன முன்னோடியான ந.பிச்சமூர்த்தி, இளசுகளை எழுதுகோலுடன் திரும்பிப் பார்க்க வைத்த சிவகங்கைப் பேராசிரியர் மீ.ரா. ‘இந்து’ நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த ஆர். நடராஜன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் புதல்வர் வ.உ.சி. சுப்பிரமணியம், ரசிகமணி டி.கே.சி.யின் வட்டத்தொட்டியை நடத்தியவரும் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் புதல்வியுமான ராஜேஸ்வரி நடராஜன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், நீதிபதி மகராஜன், தனித்தமிழ்ப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கா.சோமசுந்தரம், குயிலிராஜேஸ்வரி, ஜோதிர்லதாகிரிஜா, தி.க.சியின் புதல்வர் வண்ணதாசன், நண்பர் வண்ண நிலவன் என்று ஒரு நீண்ட பட்டியலே என் மனப்பேழையில் ஒளிவிடும் ரத்தினங்களோடு பதிந்திருக்கின்றது.

தீபத்தின் அறிவு ஒளிதான் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று பெயர்சொல்லி, வாழ வைத்திருக்கிறது.
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayamaeoli.Blogspot.in]

காயத்தின் தடங்கள்

தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்




காயத்தின் தடங்கள்

உன்னால் உருவான
காயத்தின் தடங்கள்
கதை சொல்கின் றன .!!
பாட்டி வடை சுட்ட கதையாய்
இருந்த போதும்
பிரகாசித்துக்கொண்டிருக்கிறேன்
உன் வருகைக்காய்...!!

----------------------------------------------------

உனைக்  காணவில்லை 
இருந்தும் நான் பிரகாசிப்பதை
நிறுத்தப்  போவதில்லை
உனை காணுகையில் உன்னுள்
மறைந்து போவேன்...!!

                                                               


[அ.தமிழ்ச்செல்வியாகிய நான்....
சென்னை தொலைபேசித் துறையில் 
பணியாற்றி வருகிறேன்..என்னுடைய 
பொழுது போக்கு: சிறுகதைகள் மற்றும் 
கவிதைகள் எழுதுவது...
மொபைல் எண் : 9444343134]
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayaoli.Blogspot.in]

காதல் கலைக்காத கோலங்கள்

                            
வையவன் 

காதல் கலைக்காத  கோலங்கள்
கருமணிகள் கோர்த்தது போல் 
மை கரைந்து துளித்துளியாய் 
சிந்தி நிற்க மோவாயை உயர்த்தி 
உள்ளங்கையில் முத்து வாங்கி 
மௌனமே மொழியாக புன்னகையே 
தெளிவிக்கும்   தீபமாக 
காதல் மனக் காரிருளில் 
வழி தேடி நான் நிற்க 
செல்வியவள் கன்னம்தொட்டு 
கவிழ் உதட்டில் தமிழாகிச சின்னம் பதிப்பாள்
ரையும் காலம்  தொலையும் பிறவி
கலையாது கலையாது 
காதல் போட்ட கோலங்கள் 

-வையவன் 

Wednesday 24 September 2014

இராணுவ சேவையும் சமூகமும்

            இராணுவ சேவையும் சமூகமும் 

மேஜர் ஜெனரல் ஜே. ஜே. .மணவாளன் வி.எஸ்.எம்.

நான் கர்னல் திரு.பா.கணேசன் அவர்களின் தலைமையின் கீழ் இராணுவத்தில் பணியாற்றியவன். அவரது சீரிய சேவை உணர்வு தன் கீழ் பணியாற்றும் அதிகாரியாயினும் எளிய சிப்பாய் ஆயினும் அவர் காட்டிய நிலை மாறாத மரியாதை , அணுகுமுறைஆகியனவற்றை நேரடியாகக் கண்டவன். அதனால்  பயன் பெற்றவன். ஒரு வகையில் அவர் எனது வழிகாட்டி. இராணுவப் பணி என்பது  மற்ற அரசாங்க உத்தியோகம் போல் தான் என்று மிக சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவப் பணி என்பது சேவையே . அப்படி சேவை புரியத் தேர்வாகி, அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு படைப் பிரிவில் சேர்ந்த பிறகு உடலளவில் நோய் நொடிகளற்றும் பலசாலியாகவும் தன்னை வைத்துக் கொள்வது மிக முக்கியம். கூட@வ பணி சார்ந்த வேலைகளில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்வதும் இராணுவத்தினர்களின் கடமையாகிறது. ஒரு அதிகாரியோ அல்லது படைப்பிரிவு தலைவனோ சொல்லித்தான் தனது உடல் நலத்தையோ அல்லது பணித்திறமையையோ வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
                                                            
                                                                    

தனிப்பட்ட ஒரு சிப்பாயோ அல்லது அதிகாரியோ தன்னளவில் தகுதிகளை வளர்த்துக் கொண்டு அந்த தகுதியும் திறமையும் படைப்பிரிவின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கு உதவக் கூடியதாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி பணியில் ஒன்றி இருக்கும் இராணுவத்தினர்களுக்கு அந்தப் பணிக்கு அப்பாலும் வாழ்க்கை உள்ளது என்பதை அவர்களோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்தால் இராணுவத்தினர்கள் மனித வாழ்வின் ஒரு பகுதியை இழந்து விடுவார்கள். இராணுவ வாழ்க்கை கரடுமுரடான வாழ்க்கை என்றாலும் அதில் அன்பு, பாசம், காதல் போன்றவற்றிற்கு இடமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. மனித வாழ்வில் அன்பு, இரக்கம் போன்றவை அடிப்படைக் குணங்கள். அவை இல்லாத வாழ்க்கை மனித வாழ்க்கையாகாது. ஆனால், “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்பதற்கொப்ப மனிதர்களின் இந்த அடிப்படைக் குணங்கள் பொருளின் மீது உள்ள மோகத்தால் ஏற்படும் பொழுது அந்த அன்பு, பாசம் போன்றவை வெளி வேஷங்களாகி விடுகின்றன.

இராணுவத்தினர்கள் இதுபோன்ற அன்பு, பாசம் போன்றவற்றை எப்பொழுது உணர்கிறார்கள்? ஒவ்வொரு விடுமுறையில் போகும்போது உற்றமும் சுற்றமும் காட்டும் பரிவான உணர்வுகள் மூலம் மற்றும் அதன் தொடர்பாக ஏற்படும் கடிதத் தொடர்பு வழியாகத் தான். ஒரு மனிதனுக்கு உற்றமும் சுற்றமும் மட்டுமே அன்பு, பாசத்தோடு பழக வேண்டும் என்றில்லை. சமுதாயமும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தில் இதை வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக ஒரு கிராமத்திலிருந்து ஒருவன் இராணுவப் பணிக்குத் தேர்வானால் ஏதோ வேலை இல்லாமல் அலைந்து திரிந்து கடைசியில் இராணுவத்தில் சேர்ந்தான் என்று 

சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு நாட்டின் முதல்தரப் பாதுகாப்புப் பணியில்  நம் ஊர் இளைஞன் இருக்கிறான் என்ற பெருமையோடு அந்த ஊரார் அவனுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும். அதனால் அந்த இராணுவ வீரன் தனது உற்றம், சுற்றம் தவிர ஊர் மக்களுக்கும் கடமைப்பட்டவன் ஆகிறான்.

ஒரு குடும்பத்தில் ஒருவன் இராணுவத்தில் சேர்ந்து விட்டால் மற்ற குடும்ப வேலைகளைப் பெற்றோர், அண்ணன் தம்பிகள் ஏற்று நடத்துவது இயல்பு. கால வேகத்தில் ஒரு குடும்பத்தில் அல்லது தனிமனித வாழ்வில் நடப்பவை நடந்து கொண்டுதான் இருக்கும். குடும்பத்தில் ஒருவன் இராணுவத்தில் பணியாற்ற தேர்வாகிய சுமார் 10 வருடங்களில் அந்த குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் ஓரளவு முன்னேற்றம் காண்கின்றனர். வயதைப் பொறுத்து மூத்தவர்களுக்குத் திருமணம் நடக்கும். சில சமயம்   வயதில் இளையவர்களுக்கும் கூட திருமணம் நடத்த வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட சமூக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது,  அந்த இராணுவ வீரன்  விடுமுறையில் ஊருக்கு வருகிறான் என்றால் குடும்ப உறுப்பினர்களின் வேலைகளும் ஊர் மக்களின் வேலைகளும் ஸ்தம்பித்து விடுமா என்ன? அவை தினசரி  நடந்து கொண்டுதான் இருக்கும். 

எல்லைப்புறங்களில் எதிரிகளுக்கும் இயற்கைக் கொடுமைகளுக்கும் ஈடுகொடுத்துப் போராடும் இராணுவத்தினர்கள் ஆண்டுக்கு இரண்டு மாதம் என்று விடுமுறையில் வருகிறார்கள். அந்த விடுமுறை நாட்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியாக புத்துணர்ச்சி ஊட்டுபவைகளாக, பெருமைப்படத்தக்கனவாக இருக்க வேண்டும். பொதுவாக அப்படி நடப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களும் ஊர்மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனையில் மூழ்கி வெளிவர முடியாமல் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது விடுமுறையில் வந்த இராணுவத்தினனை யார் கவனிக்கப் போகிறார்கள்? இங்குதான் நாம் சற்றே கவனம் செலுத்த வேண்டும். இராணுவப் பணியிலிருப்போர் எப்பொழுது வேண்டுமானாலும் விடுமுறையில் போகலாம் என்றிருந்தாலும்,  வழக்கமான இராணுவ ஒழுங்குமுறை விதிகளுக்கு  விடுமுறை போன்ற மிகச் சாதாரண நிகழ்ச்சிகளும் தப்புவதில்லை. ஒரு படைப்பிரிவில் சுமார் 1,000 பேர் பணியாற்றுகிறார்கள் என்றால்,  எல்லாரும் ஒரே சமயத்தில் விடுமுறை கேட்டால் கொடுத்துவிட முடியுமா? குறைந்தபட்சமாக சுமார் 70% படைப்பிரிவினர் எப்பொழுதும் படைத்தளத்தில் இருக்க வேண்டும். அதிகாரிகள் அதிகாரிகளல்லாதோர், தொழில் நுட்ப வல்லுனர்கள், போன்ற பல பிரிவுகளையும் சேர்ந்தவர்களில் இந்த விடுமுறை விகிதசாரம் காணப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை விடுமுறையில் போகலாம் என்று கணக்கிடுவார்கள். ஆகையினால், ஒரு இராணுவ வீரன் எந்த மாதத்தில் விடுமுறையில் வருவான் என்பது அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கும். அதைப் பொறுத்து அவனைச் சார்ந்தவர்களும் ஊர்க்காரர்களும் அந்த இராணுவ வீரன் விடுமுறை நல்ல விதமாக செலவாக ஆவன செய்ய வேண்டும்.

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மை எல்லாருக்கும் வருவதில்லை. பொதுவாக மக்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு குடும்பத்திற்குள்ளேயே உறவினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவ முன்வராத சமுதாயத்தில் இராணுவ வீரன்  அடுத்த வீட்டுக்காரர்களுக்கோ அல்லது ஊர்க் காரர்களுக்கோ எப்படி உதவப் போகிறார்கள்? இந்தப் போக்கினால் சமுதாயச் சீரமைப்பு சிதைந்து வருவது கண்கூடு. மனிதநேய ஆர்வலர்கள் ஒன்றுகூடி சமுதாய உணர்வுகள் அழிவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். “இராணுவத்தினர்கள் நல்வாழ்வு அமைப்பு” என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஆசிரியர், மருத்துவர், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் போன்றோர்கள் அடங்கிய ஒரு குழு அதைச் செய்யலாம்.

“எல்லைப்புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” என்ற நூல் இராணுவ அதிகாரியான கர்னல் பாவாடை கணேசனது ஆரம்பகால இராணுவ வாழ்க கை பற்றியது. பெற்றோர்களுடன் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று பெரிய குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து வளர்ந்த கணேசன் யாருமே எதிர்பாராமல், முன்னர் எக்காலத்திலும் அறிமுகமில்லாத விதத்தில் இராணுவ அதிகாரியானார். ஆரம்பகால இராணுவ வாழ்க்கையில் குடும்பத்துடனான பாசப்பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விடுபடவும் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட இராணுவ வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொள்ளவும் வைத்த காலமது. அந்த முதற்பகுதி 30 கடிதங்களடங்கியது. இராணுவ அதிகாரியாகத் தேர்வானது முதல் 1971-ல் நடந்த இந்திய - பாகிஸ்தானிய போர் அதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி “பங்களாதேஷ்” என்ற தனி நாடாகியது என்பதுடன் முடிகிறது.

இந்த இரண்டாம் பகுதி “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற பெயருடன் அவரது அடுத்த கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்து விட்டிருந்தன. ஒரே ஒரு தம்பியைத் தவிர மற்ற எல்லாருக்கும் திருமணமாகி இருந்தது. ஆகையினால், இந்த இரண்டாம் பகுதி “கடிதம்” போன்ற வடிவில் இல்லாமல் திரு.கணேசனது எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைத் தொகுப்பாக இருக்கும். அனுபவ முதிர்ச்சியும் காலத்தின் மாற்றங்களும் ஏற்படுத்தி இருக்கும் வித்தியாசமான மனநிலை கொண்டவராக இப்பகுதியில் அறிமுகமாகிறார் கர்னல் பாவாடை கணேசன்.

இன்றைய இளைஞர்கள் தங்களது மனவலிமையை உணராமல் இல்லாமை, இயலாமை என்று தங்களுக்குள்ளேயே ஒரு இழிநிலையை ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள். “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற தலைப்பிலான இந்த அனுபவக் கட்டுரைகள் திசைமாறி போகும் இளைஞர்களை சரியான பாதைக்குத் திருப்ப உதவும். வாழ்வின் முன்னேற்ற இலக்குகளை எளிதாக அடையாளம் காணவும் அவைகளை அடையவும் உதவும். குறிப்பாக இராணுவத்தினர்க்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் நலமுடன் நீடூழி வாழ்ந்து நாட்டிற்கும் அவர் பணியாற்றிய இராணுவத்திற்கும் மேலும் சிறப்பான தொண்டு புரிய இறைவனை @வண்டி வாழ்த்துகிறேன் 
Colonel.P.Ganesan VSM 
   “The Poles”
943 H-Block
 17th Main Road, 
Anna Nagar,
Chennai-600040
Tel:044-26163794 Mobile:9444063794

Sunday 21 September 2014

தமிழ் இனி மெல்லதொடர்கிறது[3ம் பாகம்-4ம் அதிகாரத் தொடர்ச்சி ]

 தமிழ் இனி மெல்ல சென்ற பதிவின் [3-4]இறுதியில் 
மேலே தொடர முயன்ற அவரை இடைமறித்து, “அல்ல சேதுராயரே, அல்ல! என் தந்தை சிறந்த சைவராக இருந்தாலும், வைணவத்தை மதித்தவர். நிறைய வைணவக் கோவில்களுக்கு நிலமும், அறக்கட்டளையும் வழங்கியவர். சாக்கிய முனியான புத்தருக்கு நாகைப்பட்டினத்தில் விகாரம் அமைக்க என் தந்தையார் அறக்கட்டளை வழங்கவில்லையா? என் அத்தையார் தஞ்சையில் சுந்தர சோழ விண்ணகரம் அமைக்கவும், சமணக் கோவில் கட்டவும் அறக்கட்டளை வழங்கியதை இந்நாடே அறியும். மேலும், தங்கள் மகள் என்னை மணந்ததும், சைவத்தை ஏற்று ஒரு சைவப் பெண் ஆகிவிடவில்லையா? அதல்ல காரணம்...”
சில கணங்கள் அமைதியான இராஜேந்திரனின் குரலில் இலேசான கரகரப்பு இருக்கிறது. “என் முதல் திருமணம் காதல் கடிமணமாக அமைந்ததை தந்தையார் ஒப்புக் கொள்ளவில்லை. சோழநாட்டின் பட்டத்து அரசியாக வரவேண்டியவள் நாடறிய, உலகறிய என்னை மணக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எங்கள் திருமணம் அரசர்களுக்கு அனுமதிக்கப் பட்டதே என்பினும், களவுக் காதல் கடிமணமாக அமைந்ததால், அது அரசுப் பதவி உரிமைக்கு அருகதையற்றது என்று முடிவெடுத்து - எனக்குத் தண்டனையாக தங்கள் மகள் வழியோர் சோழ அரச உரிமையற்றவர்கள் என்று செப்பேட்டில் பதிப்பிட்டுவிட்டார். இன்றுவரை என் அவசரச் செயலுக்காக நான் இதயத்திற்குள் குருதி சிந்தி வருகிறேன். உமது மன ஆற்றாமை எமக்குப் புரிகிறது. அதனால் உம் மனதைக் குளிர வைக்கும் ஒரு அறிவிப்பைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.”
இராஜேந்திரனின் கண்கள் பளிச்சிடுகின்றன. “அரசகேசரியான எமது தந்தையாரின் கட்டளையை மீற இயலாவிட்டாலும், சோழ அரசர்களுக்கே உரிய பட்டப் பெயரில் கடைசியான கேசரியை ஆளவந்தானுக்கு வழங்கிச் சிறப்பிக்கிறோம். ஓலைநாயகமே, இனி ஆளவந்தான் மனுநீதிச் சோழன் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கும் வகையில் “மனுகுல கேசரி”  என்று அழைக்கப் படுவான் என்பதைச் செப்பேட்டில் பதிவு செய்வீராக!” அவன் குரல் மண்டபத்தில் எதிரொலிக்கிறது.

தமிழ் இனி மெல்லதொடர்கிறது[3ம் பாகம்-4ம் அதிகாரத் தொடர்ச்சி ]
அரிசோனா மகாதேவன் 
தயங்கி எழுந்து நின்ற நிலவுமொழி தரையைப் பார்த்துக் குனிந்தவாறே மெல்லிய குரலில் பதிலளிக்கிறாள். “கோப்பரகேசரியாரே! இந்த ஏழையைத் தாங்கள் நினைவில் கொண்டு, ஒரு இளவரசருக்கு மணவினை முடிப்பது என் தந்தையார் சொல்லியது போல எங்கள் முன்னோர்கள் செய்த நல்வினைப் பயன்தான். அதில் ஒரு ஐயமும் இல்லை. ஆயினும்...” என்று இழுக்கிறாள்.

அரசவையே அவளை நோக்குவது அவளுக்குப் புரிகிறது. அனைவரின் கண்களும் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கவனிப்பதும் அவளுக்குத் தெரிகிறது.

“கோப்பரகேசரியாரே! இன்றும், என்றும் நான் ஒரு சைவப் பெண்ணாகத்தான் இருப்பேன். என் வாழ்நாள் முழுவதும் சிவனாரைத் துதித்து, தேவாரமும், திருவாசகமும் ஓதி வருவேன். இவ்வுலகத்தில் உள்ள அனைத்துப் பொன்னும், மணியும் எனக்குக் கிடைத்தாலும், சிவனாரை என் உள்ளத்திலிருந்து நீக்க நான் ஒப்ப மாட்டேன். என் வயிற்றில் பிறப்பவர்களுக்கும் சிவபக்தியையே ஊட்டி வளர்ப்பேன். வைணவராக இருக்கும் இளவரசர் இவற்றிற்கு முழு மனதுடன் அனுமதி கொடுத்தால்தான் இத் திருமணத்திற்கு என்னால் ஒப்ப இயலும். இதுவே இந்த ஏழை தங்கள் முன் வைக்கும் கோரிக்கை! இதைத் தாங்களோ, மற்றவர்களோ தவறாக எண்ணக்கூடாது!” மனதில் இருப்பதை அனைவரின் முன்னமும் கொட்டிவிட்டு அமைதியாகி விடுகிறாள் நிலவுமொழி.

அனைவரும் அதிர்ந்து போகிறார்கள்.

இராஜேந்திரன் சேதுராயரைக் கண்களினாலே வினவுகிறான். சேதுராயர் தன் பெயரன் காடவனைப் பார்க்கிறார். காடவனோ சேதுராயரை நோக்கி இருகைகளையும் விரித்து அவர் பக்கம் நீட்டுகிறான். “தங்கள் முடிவு பாட்டனாரே!” என்பது போல இருக்கிறது அது.

சேதுராயர் எழுந்திருந்திருந்து மெல்ல நிலவுமொழியின் அருகில் வந்து நிற்கிறார். நிலவுமொழியின் குனிந்த தலை இன்னும் நிமிராமலேயே இருக்கிறது.

“ஏன் பெண்ணே, உனக்கு திருமால் பேரில் இத்தனை வெறுப்பு?” என்று கனிவான குரலில் வினவுகிறார்.

“ஐயா, எனக்குத் திருமாலிடம் வெறுப்பு இல்லை. சிவனாரிடம் அளவு கடந்த பக்தி. அவ்வளவே!” என்று உறுதியான, மெல்லிய குரலில் குனிந்த தலை நிமிராமல் பதிலளிக்கிறாள்.

“திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் கணவன் வழி செல்வதுதானே சிறப்பு! அதைத்தானே மறைநூல்களும் உரைக்கின்றன! என் மகளும் கோப்பரகேசரியாரை மணந்ததும் சைவப் பெண்ணாகத்தானே தன்னை மாற்றிக் கொண்டாள்!” அவளிடம் தனது பக்கத்தை எடுத்துச் சொல்கிறார் சேதுராயர்.

“ஐயா, நான் தங்கள் அளவுக்கு அறிவு உள்ளவள் அல்ல. நான் அருள்மொழிநங்கையார் போல சிவனடியாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், அதற்காக அரசுரிமையையே துறப்பேன் என்னும் அளவுக்கு உயர்ந்தவளும் அல்ல. ஆயினும் திருமாலை மட்டும் வணங்கவோ, வைணவத்திற்கு மாறவோ என் மனது ஒப்பவில்லை. திருமணத்திற்குத் தலையை ஆட்டிவிட்டு, பிறகு திருமாலை வணங்க முடியாதென்றால் தங்களுக்கும், தங்கள் பெயரரான இளவரசருக்கும் என்மீது மனத்தாங்கலை ஏற்படுத்தும் அல்லவா? அதனால்தான் முதலிலேயே தெரிவிக்கிறேன். சமணரான கூன்பாண்டியரை சைவத்திற்குக் கொணர்ந்தது கோப்பரகேசரியாருக்கு முன்னுதித்த சோழ இளவரசியும், பழையாறையில் பிறந்த மங்கையர்கரசியார் என்பதும் தாங்கள் அறியாததல்ல. எனவே இறை வழிபாடு ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. நானும் தங்கள் மகளும் ஒன்றா? பத்தினித் தெய்வமான அவர்கள் இடத்தில் என்னை வைத்துப் பேசுவதே அவர்களை அவமதிப்பதாகாதா! ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் பிழை பொறுத்தருள்வீர்களாக!” என்று சேதுராயரின் கால்களில் விழுந்து பணிகிறாள் நிலவுமொழி.

“எழுந்திரு குழந்தாய்! மனதில் உள்வதைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? போகட்டும். நீ சிவனாரை வணங்குவது உன் மனப்பாங்கு. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் உன் வயிற்றில் உதித்தவர்களும் சைவர்களாகவே வளர வேண்டும் என்ற நிபந்தனையை ஏன் விதிக்கிறாயம்மா?” என்று கேட்கிறார் சேதுராயர்.

“ஐயா, என் வயிற்றில் பிறந்தவர்களுக்கு என் பாலை ஊட்டி வளர்க்கும் பொழுது எனது மொழியான தமிழையும், எனது கடவுளான சிவனாரையும் இனங்காட்டி வளர்க்காமல் வேறு எப்படி வளர்ப்பேன்? ஒரு தாயின் நாவில் வரும் மொழியைக் குழந்தை கற்று வளருவதால்தானே அதைத் தாய்மொழி என்று சொல்கிறார்கள்? அதைப் போலத்தானே தான் வணங்கும் தெய்வத்தையும் ஒரு தாய் குழந்தைக்குக் காட்டி வளர்ப்பாள்? அதைச் செய்யாதே என்று சொன்னால் நீ ஒரு தாயாக இராதே என்று சொல்வதாகத்தானே நான் பொருள் கொள்ள வேண்டும்? இப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது.” அவள் கண்களில் நீர்முத்துக்கள் திரண்டு வழிந்து சேதுராயரின் கால்களை நனைக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------


        எரிந்த கட்சி எரியாத கட்சி
                         உருவகம் தான் முதலாளி
                        சிலர். 
                        உவமை வெறும் கூலித்தொழிலாளி.
                       சிலர். 
                       பழைய கதாநாயகர்களின்
                        கல்லறை மீது இரங்கற்பா
                       இயற்றிக் குழாய்ப்புட்டு
                       சுட்டுப் பரிமாறுவோர் 
                       சிலர் 
                        உருவ வழிபாட்டுக்காரர்கள்
                       எப்படியெப்படியோ உருமாறி
                       விட்டது இன்றைய கவிதை
                      ஆகக் கூடி கேட்க
                       நன்றாக படிக்க 
                      ரசமாக இருப்பது
                      கவிதையா அல்லவா
                      என்பதில் எப்போதுமே 
                       எரிந்த கட்சி

                       எரியாத கட்சி தான்-    வையவன் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சேதுராயர் நெகிழ்ந்து போகிறார். அவளைத் தூக்கி நிறுத்துகிறார்.
“குழந்தாய்! உன் உண்மைக்கு என்னை அடிமையாக்கி விட்டாயம்மா! இதுவரை என் வாழ்வில் சோழநாட்டில் வைணவர்களைச் சிறுமைப்படுத்தி, நான் கண்டதில்லை. சைவமும், வைணவமும் சோழத்தாயின் இரு கண்களாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. எனக்கு உன் மனநிலை புரிகிறது. உன் விருப்பத்திற்கு நான் ஒப்புக் கொள்கிறேன். காடவன் உன்னை மணக்கத் தடையேதுமில்லை. திருமணத்திற்குப் பிறகும் உன் விருப்பப்படி சிவனாரை வழிபட்டு வரவும், உன் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு நீ சிவபக்தியை ஊட்டி வளர்க்கவும் நாங்கள் சம்மதிக்கிறோம். நீயும் எனது ஒரு விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உறுதியளிக்க வேண்டும்.” சேதுராயரின் கனிவான மொழி நிலவுமொழியை அமைதிப்படுத்துகிறது.

என்ன என்பது போல் முதன்முதலாக அவரை நிமிர்ந்து பார்க்கிறாள்.
“என் மகள் வயிற்றுப் பெயரனுக்குத் திருமாலைப் பற்றி நிறையச் சொல்லி வளர்த்து வந்திருக்கிறேன். ஆனால் அவனை வைணவனாக மாற்றக் கட்டாயப்படுத்தவில்லை. அவனுக்கு வைணவப் பெயரை வைத்து மகிழ விரும்பியதற்கும் கோப்பரகேசரியார் தடை ஏதும் சொல்லவில்லை. அதே போல உன் வயிற்றில் பிறப்பவர்களுக்கும் வைணவப் பெயரை வைக்க எனக்கு நீ உரிமை அளிக்க வேண்டும். எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் ஒருவருக்கு மற்றவர் சிறிது விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லவா! இந்த விஷயத்தில் எனக்கு நீ விட்டுக் கொடுத்தானம்மா ஆகவேண்டும்!” ஒரு குழந்தையைப் போல நிலவுமொழியிடம் கெஞ்சுகிறார் சேதுராயர்.

அவள் முகத்தில் புன்னகை மலர்கிறது. “ஐயா, இதற்கும் ஒப்புக் கொள்ளாவிட்டால் நான் பெண்ணே அல்ல! என் வயிற்றில் பிறந்தாலும் அவர்கள் உங்கள் பெயரர்கள்தான். அவர்களுக்குப் பெயர் வைக்கும் உரிமை தங்களுக்கு இல்லாமல் எவருக்கு ஐயா இருக்கிறது?” என்று சொல்லி விட்டு நாணத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறாள்.
மெல்ல தன் கைகளைத் தட்ட ஆரம்பிக்கிறான் இராஜேந்திரன். அனைவரும் அவனைத் தொடர்ந்து கையொலி எழுப்புகின்றனர்.
* * *
                           ஜெயங்கொண்ட சோழபுரம்
                             பிங்கள, வைகாசி 24 - ஜூன் 9, 1017

குடிசை ஒன்றில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர் இராஜேந்திரனும், சிவாச்சாரியனும். தூரத்தில் நகர நிர்மாணப் பணியால் ஏற்படும் ஒலிகளும், கூச்சல்களும் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. குடிசைக்கு அருகில் இருக்கும் மரங்களில் கட்டப்பட்டிருக்கும் குதிரைகளின் கனைப்புச் சத்தமும் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறது. வைகாசி வெய்யில் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தாலும் குடிசையின் நிழல் கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது.

தன்னைத் தனியாகக் கூட்டி வந்ததிலிருந்தே மிகவும் முக்கியமான அரசுப் பணியைப் பற்றித்தான் பேச விரும்புகிறான் இராஜேந்திரன் என்று ஊகிக்கிறான் சிவாச்சாரி. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பேசாமலே இருக்கிறான் இராஜேந்திரன். மனதிலேயே தான் நினைப்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததால் தானும் அமைதியாகவே இருக்கிறான் சிவாச்சாரி.

“சிவாச்சாரியாரே! உம்மிடம் சில கேள்விகளைக் கேட்கவேண்டும், உமது போக்கிற்கு விளக்கம் பெறவேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆயினும் தக்க தருணம் வரவில்லை. இருப்பினும் முக்கியமான சில அரசு முடிவுகளை நான் எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. எனவே, உம்முடைய மன ஓட்டத்தை நான் புரிந்து கொண்டாக வேண்டும். எனவே, சுற்றி வளைக்காமல், எனது நண்பனாகப் பதில் சொல்வீராக!” என்ற பீடிகையுடன் தொடங்குகிறான்.

“முதலாவதாக, எனது தந்தையின் தமிழ்ப் பணியின்மீது எனக்கு அக்கரை இல்லை என்று நினைக்கிறீர் என்றும், இரண்டாவதாக, புதிய தலைநகரம் நிர்மாணிப்பதற்கு உமக்கு ஒப்புதலில்லை என்றும் எனக்குப்படுகிறது. மூன்றாவதாக, அந்தப் பெண் நிலவுமொழியைச் சேதுராயரின் பெயரனுக்கு மணமுடிப்பதிலும், இறுதியாக, ஆளவந்தானுக்கு “மனுகுலகேசரி”  என்ற பட்டத்தை அளிக்கவேண்டும் என்பதிலும் ஏன் என்னை நீர் கட்டாயப்படுத்தினீர் என்றும் எனக்குத் தெரியவேண்டும். இன்னும் இரண்டு நாழிகைக்கு இங்கு யாரும் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டுத்தான் உம்மை அழைத்து வந்திருக்கிறேன். எனவே நீர் நிதானமாக எனக்கு உமது மனஓட்டத்தை விளக்குவீராக!” என்று கேட்கிறான்.

இராஜேந்திரன் இந்தக் கேள்வியைத் தன்னிடத்தில் கேட்பான் என்பது சிவாச்சாரி முன்னமேயே அறிந்திருந்ததுதான். ஆயினும், எப்பொழுதும் உடனுக்குடன் எந்த விஷயத்தையும் தீர்மானித்து அறிந்து கொள்ள விரும்பும் இராஜேந்திரன் ஏன் ஒரு ஆண்டுக்கும் மேலாகக் காத்திருந்தான் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. அவனுடைய இந்தக் கேள்விகளுக்குத் தான் அளிக்கும் விளக்கத்தில்தான் தனது எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்கிறான் சிவாச்சாரி. அரசன் என்று தான் காட்டி வந்த தயக்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதால்தான், நண்பனாகப் பதில் சொல்லுமாறு இராஜேந்திரன் கேட்கிறான் என்பதும் புரிகிறது.

“கோப்பரகேசரியாரே!” என்று துவங்கிய அவனைக் கையமர்த்துகிறான் இராஜேந்திரன். “ஓய் சிவாச்சாரியாரே! உமக்கு எத்தனை தடவை நான் சொல்லவேண்டும், நண்பனாகப் பதில் சொல்லும் என்று?” இராஜேந்திரனுடைய மீசை துடிக்கிறது.

“இப்பொழுது நான் சோழ நாட்டுப் பேரரசனாக உம்முடன் உரையாடவில்லை. உமது தயக்கத்தை விடும். அந்தப் பெண் நிலவுமொழி எவ்வளவு துணிச்சலுடன் சேதுராயருடன் உரையாடினாள்! அவளுடைய துணிச்சலைக் கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டு ஒரு நண்பனுடன் உரையாடுவது போல உரையாடும்!” இராஜேந்திரனின் பொறுமை குறைகிறது என்பதை அவனது குரல் நன்றாக உணர்த்துகிறது.

“அப்படியே மதுராந்தகா!” என்று ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.
அவன் தன்னை இப்படி அழைப்பான் என்று எதிர்பார்க்காத இராஜேந்திரன், ஒருகணம் கழித்து தனக்கே உரிய உரத்த குரலில் கடகடவென்று நகைக்கிறான். “இதுதான் நான் விரும்புவது. மேலே தொடரும்!” என்று சிவாச்சாரி அருகில் நெருங்கி அமர்ந்து கொள்கிறான் இராஜேந்திரன்.
“முதல் கேள்விக்குப் பதில் சொல்வதானால் நான் முதல் முறையாக உங்களைக் கருவூராருடன் சந்தித்த நாளுக்குச் செல்ல வேண்டும்!” என்றபடி அங்கு இராஜேந்திரனுக்கும், இராஜராஜருக்கும் நடந்த சிறு பூசலைச் சுட்டிக் காட்டுகிறான்.

“அப்பொழுது அங்கு உங்களுக்கும், சக்ரவர்த்தியாருக்கும் இடையில் ஒரு திரை விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அது எனக்கு மட்டும் தோன்றவில்லை, கருவூராருக்குமே தோன்றியது என்பதை அவர் தமிழ்த் திருப்பணியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் புறப்பட்டதிலிருந்து தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல...” என்று மேலே தொடர்ந்து கருவூரார் இராஜேந்திரனும், இராஜராஜரும் பாண்டியருடன் உறவை மறுத்ததைப் பற்றியும் விளக்குகிறான்.

“அது கருவூராரின் மனதை மிகவும் பாதித்து விட்டது. எனவேதான், அவர் திருக்கயிலைக்குச் செல்லத் தீர்மானித்து தஞ்சையை விட்டு நீங்கி விட்டார். மேலும், நீங்களாகக் கேட்காவிடில், நான் அவரது மன ஓட்டத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் ஆணையிட்டுவிட்டார். பாண்டியருடன் நாம் இணைந்தால்தான் தமிழ்த் திருப்பணி நிறைவேறும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
“தாங்கள் என்னை தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது திருப்பணிக்கு மிகவும் உதவியது. ஆயினும் பாண்டியன் அமரபுஜங்கனுடன் சக்ரவர்த்தி அவர்கள் நடத்திய வாட்போர் அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்து விட்டது. திருப்பணி ஒரு நல்ல நிலைக்கு வருமுன்னரே தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டதே என்று வருந்தினார். அவர் கேட்டுக்கொண்டதால் தங்களுக்குச் சொன்ன இந்த உண்மையை அவருக்குச் சொன்னேன்.

“கருவூராரின் திருக்கயிலைப் பயணத்தின் காரணம் அவரை மிகவும் செயலிழக்கச் செய்து விட்டது. அவரின் கம்பீரம், தன்னம்பிக்கை, எதற்கும் அஞ்சாச் சிங்க நெஞ்சம் - கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து வருவதை தினமும் கண்டுவந்த நான் மிகவும் கலங்கினேன். என்னைத் திருமந்திர ஓலைநாயகமாக நியமித்தது என்னைத் தமிழ் திருப்பணியில் முழுதும் ஈடுபடவிடாமல் என் கவனத்தைத் திருப்பியது. அவரிடமே இதுபற்றிப் பேசிவந்தேன். அதைச் சரிசெய்ய முயன்ற பொழுதுதான் நான் இளஞ்சேரனிடம் பிடிபட்டுத் திரும்பினேன். அவரின் காலமும் முடிந்துவிட்டது.

“அந்த ஆற்றாமைதான் என்னை நிலைகுலைய வைத்து என் மகள் சிவகாமியிடம் தாங்கள் அனுமதிக்கும்வரை திருப்பணியைச் செய்வேன் என்று சொல்லவும் வைத்தது. என்றும் இல்லாத அதிசயமாக அவள் நான் பேசியதைத் தங்களிடம் சொல்லிவிட்டாள். அது தங்கள் மனதில் எப்படிப் பதிந்ததோ என்று இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தாங்கள்தான் அதைப் பற்றி என்னிடம் சொல்ல வேண்டும்.

“மேலும், சக்ரவர்த்தியாரின் மறைவிற்குப் பின்னர் தாங்கள் என்னை மேலும் மேலும் மற்ற அரசுப் பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தீர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துத் தாங்கள் எடுத்த முடிவு ஆகும் அது. என்னுடைய ஓலை நாயகத்தின் பதவி உரிமையைக் கொண்டு சக்ரவர்த்தியாரின் இறைவனடிமைத் திட்டத்தை நிறைவேற்றி விட்டேன். கோவில்கள் தோறும் இறைவனடிமைப் பெண்கள் தமிழ்க் கலைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அங்கீகாரமும், அந்தஸ்தும் பலரையும் இறைவனடிமைத் திட்டத்திற்கு ஈர்த்து வருகிறது.


“தங்களது மூத்த மகனான ஆளவந்தானுக்கும் சோழநாட்டின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உண்மையாக நம்பினேன். அவன் மூலமாகவே சேரநாட்டில் தமிழ் உருமாறிவரும் நிலையைத் தடுக்கத் திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். அதற்காகவே அவனுக்கு “மனுகுலகேசரி” என்ற பட்டத்தைத் தாங்கள் அளிக்குமாறு இடைவிடாது கோரினேன்.” சிறிது நேரம் சிந்தனை ஓட்டத்தை ஒருங்குபடுத்திவிட்டு மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.[தொடரும்]