Thursday 25 September 2014

காதல் கலைக்காத கோலங்கள்

                            
வையவன் 

காதல் கலைக்காத  கோலங்கள்
கருமணிகள் கோர்த்தது போல் 
மை கரைந்து துளித்துளியாய் 
சிந்தி நிற்க மோவாயை உயர்த்தி 
உள்ளங்கையில் முத்து வாங்கி 
மௌனமே மொழியாக புன்னகையே 
தெளிவிக்கும்   தீபமாக 
காதல் மனக் காரிருளில் 
வழி தேடி நான் நிற்க 
செல்வியவள் கன்னம்தொட்டு 
கவிழ் உதட்டில் தமிழாகிச சின்னம் பதிப்பாள்
ரையும் காலம்  தொலையும் பிறவி
கலையாது கலையாது 
காதல் போட்ட கோலங்கள் 

-வையவன் 

No comments:

Post a Comment