Saturday 6 September 2014

ஆச்சாள்புரம்:குறுநாவல்களைமுன்வைத்து-வளவ. துரையன்

ஆச்சாள்புரம்

வளவ. துரையன்

        [ வையவனின்குறுநாவல்களைமுன்வைத்து ]
மிகப்பெரியதாக மெகாநாவல்கள் வரத்தொடங்கியபின்னர்சிறியநாவல்களின்வரவுமிகவும்குறைந்துவிட்டது. அதிலும்குறுநாவல்கள்என்றவடிவம்சுத்தமாகஅற்றுப்போய்விட்டது. முன்பு ’கணையாழி’ இதழ்குறுநாவல்போட்டிநடத்திஅவ்வப்போதுஇந்தவடிவத்துக்குப்புத்துயிர்கொடுத்துவந்ததுஇச்சூழலில்வையவனின் ’ஆச்சாள்புரம்’எனும்ஐந்துகுறுநாவல்கள்கொண்டதொகுதியைப்படிக்கமிகவும்மகிழ்ச்சியாய்இருந்தது.   .
ஆச்சாள்புரம்எனும்சிற்றூருக்குவேணுஆசிரியராகப்பணிபுரியப்பொறுப்பேற்கிறான். ராயர்என்பவர்வீட்டிற்குஎதிர்வீட்டில்குடியமர்கிறான். ராயரின்மகள்கௌசல்யாவிற்கும்வேணுவிற்கும்காதல்மலர்கிறது. காதல்ஊரார்க்குத்தெரியவர, ராயர்
”நான்சீர்திருத்தக்காரனில்லே; லோகத்தைஎதிர்த்துஎதிர்நீச்சல்போடத்தெம்போ, தைரியமோஇல்லாதவன்; சாதாரணக்குடும்பஸ்தன்; எனக்குஇன்னும்மூணுபெண்கள்இருக்கு; இதெல்லாம்நடக்கிறகாரியமில்லே”
என்றுமறுதலிக்கிறார். ஆனால்வேணுவும்கௌசல்யாவும்உறுதியாய்இருக்கராயர்தற்கொலைக்குமுயல்கிறார். வேணுவேபோய்காப்பாற்றுகிறான். ஆனால்தான்மீண்டும்தற்கொலைசெய்துகொண்டுவிடுவேன்என்றுஉறுதியாய்ச்சொல்கிறார். குழம்பியவேணுவோதன்பணியைராஜினாமாசெய்துவிட்டுயாரிடமும்சொல்லாமல்ஊரைவிட்டேபோய்விடுகிறான். “உன்அப்பாவைப்பலிவாங்கிக்கொள்வதைக்காட்டிலும்என்னையேபலியிட்டுக்கொள்வதுமேலென்றுதோன்றுகிறது” என்றுகௌசல்யாவிற்குக்கடிதம்எழுதுகிறான். பின்னர்இருபத்துமூன்றுஆண்டுகள்கழித்துவேணுமீண்டும்ஆச்சாள்புரம்தள்ளாமையுடன்வந்துசேர்கிறான்.  திருமணமேசெய்துகொள்ளாதஅவன் இப்போதுகௌசல்யாவும்மணம்புரியாமல்பக்கத்துஊரில்தலைமைஆசிரியராகஇருப்பதையும்தங்கைகள்இரண்டுபேருக்கும்திருமணம்செய்துவைத்ததையும்அறிகிறான்.
இப்போதுவேணுபக்கத்துஊருக்குப்போய்கௌசல்யாவைப்பார்க்கலாம்எனநினைக்கிறான். ஆனல்அவன்மனம்நினைப்பதாகவையவன்எழுதும் வரிகள்மிகமுக்கியமானவை.
‘அப்படிமுடியாது………….அத்தோடுமட்டும்முடிந்துவிடாது………..அப்பால்………..பிரிந்துவளைந்துஎங்கெங்கோவிலகியபாதைகள்மோதிவேறுகுழப்பம்தோன்றும். ஒரேசந்திப்பில்நிற்கும்பக்குவம்வந்துவிட்டால்அப்புறம்அந்தசந்திப்பேகூடஅவசியம்இல்லையே! நினைவில்கௌசல்யாயௌவனத்தோடுஎனக்கேஉரியவளாய்இருக்கிறாள். நிஜம்எப்படியோ………..வேண்டாம், ஒருதலையீடுபோதும். இரண்டாவதுதலையீட்டிற்குஅதிகாரமில்லை’
பிறகுவேணுநாடோடிபோல்போய்க்கொண்டிருக்கிறான்என்றுமுடிகிறதுஇக்குறுநாவல். நாவலின்இறுதியில்ஆச்சாள்புரம்என்றபோர்டைபஸ்ஸின்டீசல்புகைமூடியதுஎன்றுவருகிறது. அதுபோல்தான்வேணுவின்வாழ்வைஅவன்கொண்டகாதல்மூடுகிறது. ஒருவேளைஅவனுடன்வரத்தயாராகஇருந்தகௌசல்யாவைஅவன்மணம்முடித்திருந்தால்ராயரின்வாழ்வையேவிதிமூடியிருக்கும்.ஆனால்கௌசல்யாவின்மனத்தில்இருக்கும்வேணுவையும்அதேபோல்வேணுவின்நெஞ்சில்குடியிருக்கும்கௌசல்யாவையும்எதனாலும்மூடமுடியாது.
அடுத்தகுறுநாவல் ”எங்கெல்லாம்மணிஅடிக்கின்றதோ…..”. இதுவும்ஒருகாதல்கதைதான். மரியதாஸின்மகன்ஸ்டீபன், தற்போதுபிஷப்பிடம்குருப்பட்டம்வாங்கப்போகிறான்.பதினைந்துஆண்டுகளுக்குப்பின்இப்போதுஅதற்காகத்தான்வந்திருக்கிறான். அவன்அன்றுமாலைகடைவீதியில்தன்அப்பாமரியதாஸ்கருப்புச்சேலையணிந்தஒருமத்தியவயதுக்காரியுடன்நெருக்கமாகச்சிரித்துப்பேசிவருவதைப்பார்க்கிறான்.
‘ஒருவரைமற்றொருவர்மயக்காமலேஇருவரும்ஒருவருக்கொருவர்சரணடைந்தனர்’ என்றுஅவர்கள்உறவைவையவன்நாசூக்காகஎழுதுகிறார். ஆனால்ஸ்டீபன்வந்தபிறகுஅவள்மீதுகொண்டமயக்கம்மகிமைதாஸுக்குக்குறைகிறது. ஓர்மழைஇரவில்எதிர்பாராமல்அவள்வீடுவந்தஅவர்அவளைநெருங்கும்போதுமாதாகோயில்மணிஅடிக்கசட்டென்றுவிலகிப்போகிறார். ஆனாலும்அவரால்மறக்கமுடியவில்லை. அவர்வேதனையில்குமைகிறார்.
”அப்பாவிற்குத்தன்மீதுஒருதர்மபயம்ஏற்பட்டுவிட்டதையும், அதனால்இயல்பாகஓடிக்கொண்டிருந்தஅவரதுவாழ்க்கைமுறுக்கேறிஒருமுறிவுநிலையைஎட்டிவிட்டிருப்பதையும் “ குருவாகமாறிவிட்டஸ்டீபன்உணர்கிறார். அப்பாவிடம்கூடச்சொல்லாமல்வேறுஊருக்குமாற்றல்கேட்டுவாங்கிப்போய்விடுகிறார். இப்போதுமரியதாஸ்நல்லகிறிஸ்துவராகவாழ்ந்துவருகிறார்என்றுகுறுநாவல்முடிகிறது.
”அவரவர்தர்மங்கள்ஒன்றுக்கொன்றுமுரண்பட்டவை. எதுசரியானதர்மம்என்பதுஅதைக்கடைபிடிப்பவன்விசுவாசத்தோடுதீர்மானிக்கவேண்டியவிஷயம்” என்றுஸ்டீபன்சிந்திப்பதுதான்இந்தக்கதையின்மையமாகும். உண்மையில்ஒவ்வொருவரும்தங்கள்சூழலுக்கேற்பத்தர்மங்களைமேற்கொள்ளலாம்.ஆனால்அதுஅவருக்காவதுவிசுவாசமாய்இருக்கவேண்டும்ஸ்டீபனின்தருமமும்மரியதாஸின்தருமமும்மோதும்சூழல்வரும்போதுஸ்டீபன்தானாகவிலகுவதுதான்அவன்தருமமாகமாறிப்போய்விடுகிறது.
‘மரபைக்காப்பதா, கொடுத்தவாக்கைக்காப்பதாஎனும்நிலைவரும்போதுஇரண்டையும்காக்கத்தன்மன்னுயிர்துறந்தானேதயரதன்அவன்நினைவுக்குவருகிறான்.
நம்நாட்டுச்சுதந்திரப்போராட்டத்தில்ஈடுபட்டிருந்தகணபதிஎனும்தீவிரவாதிக்கும், மதனகோபால்எனும்மிதவாதிக்கும்சுதந்திரம்பெற்றுப்பலஆண்டுகளுக்குப்பிறகுஏற்படும்சந்திப்பில்தொடங்குகிறது “வந்தேமாதரம்” குறுநாவல். இப்போதுகணபதிசாமியாராகஇருக்கிறான்மதனகோபால்பொதுவுடைமைக்கட்சியின்தலைவராகஇருக்கிறான். குறுநாவல்பின்னோக்குஉத்தியில்சொல்லப்படுகிறது.
சாந்திமுகூர்த்தம்கூடத்தன்மனைவியிடம்நடக்காமல்தலைமறைவுவாழ்க்கைவாழ்ந்தகணபதிஇப்போதுமதனகோபாலைப்பார்த்துச்சொல்லும்இந்தப்பேச்சுமிகமுக்கியமானது.
”மதனு, நீயும்ஒருலட்சியவாதி. என்னைப்போலவேமாறிவிட்டலட்சியவாதி, எந்தப்பாதையைநம்முடையஉயிர்மூச்சுன்னுஒருஆவேசத்திலேதேர்ந்தெடுத்துநம்மவாழ்க்கையின்பொன்னானவருஷங்களையெல்லாம்அதிலேசெலவிட்டுரொம்பப்பின்னாடிஅதுதப்புன்னுஒருஞானம்வந்தாமனோநிலைஎப்படிஇருக்குசொல்லு?”
இன்றையஇந்தியாவின்சூழ்நிலையில்இக்கருத்துகள்முக்கியம்பெறுகின்றன. போராட்டம்எதற்காகநடந்த்தோஅதன்குறிக்கோள்நிறைவேறியதுபோல்தோன்றினாலும்உண்மையானசுதந்திரம்என்பது “ எல்லாரும்ஓர்நிறை; எல்லாரும்ஓர்குலம்; எல்லாரும்இந்நாட்டுமன்னர்என்பதில்தானேஇருக்கிறது. அதுகிடைக்காதபோதுதான்தாங்கள்விழலுக்குநீர்பாய்ச்சியதுபோலவும்அன்னியராகஆகிவிட்டதுபோலவும்கணபதிபோன்றோர்உணர்கிறார்கள். மதனகோபால்போன்றோர்சூழலைத்தன்வயப்படுத்திவாழ்கிறார்கள்.  
அடுத்தகுறுநாவல் ‘ஒருரோஜாநனைகிறது’ அஞ்சலகத்தில்வேலைபார்க்கும்சாரங்கனுக்குச்சீட்டாட்டத்தில்தொடங்கியபழக்கம் ‘லாட்ஜ்’ களுக்குப்போகும்வரைவந்துவிட்டது. ஓய்வுபெறும்நிலையிலிருக்கும்பிச்சையாஅவனுக்குஉதவியாளர். அவருடையஒரேமகள்ருக்கம்மாவைஅவர்அதிகபாசம்கொட்டிவளர்த்துவந்தார். ஆனால்அவள்ஒருசேல்ஸ்மேனோடுஓடிப்போய்விடுகிறாள். அதன்காரணமாகபிச்சையாஎப்போதும்அவள்நினைவாகஅவளைவளர்த்த்தையேஎண்ணித்தனியேபுலம்பிக்கொண்டிருந்த்தைப்பார்த்தசாரங்கனுக்குஅவர்மீதுபரிதாபம்வருகிறதுஏதோஒருகாரணத்தால்பிச்சையாபணியிலிருந்துநீக்கப்படசாரங்கன்அவரைத்தன்அறையில்தங்கவைத்துநன்குகவனித்துவருகிறான்.
ஏதோஓர்ஊருக்குச்சென்றசாரங்கன்உடல்தேவைக்காகஒருலாட்ஜிற்குப்போகிறான். நன்குப்பழகிச்சுகம்கொடுத்தபெண்ணிடம்அவள்பெயர்சீதம்மாஎன்றுதெரிந்துகொள்கிறான். தன்ஊரையும்பணியையும்சொன்னவுடன், அவள் ‘உங்கள்பெயர்சாரங்கனா?” என்கிறாள். ‘ஆமாம்’ என்றுஅவன்பதில்சொன்னதற்குப்பின்அவள்மிகவும்பதற்றமடைகிறாள். அழுதுகொண்டேபோய்விடுகிறாள். ஊருக்குவந்தசாரங்கன்ஒருநாள்பிச்சையாவிற்குவந்தஒருகடிதத்தைத்தற்செயலாகப்பிரித்துப்படிக்கிறான். அதுஓடிப்போனஅவர்மகள்எழுதியது.
அதில்அவள் “தான்நலமாகஇருப்பதாகவும், தன்கணவர்அடிக்கடிபணியின்நிமித்தம்சுற்றுப்பயணம்செல்வதால்வரஇயலவில்லை. திடீர்திடீரென்றுஎங்களுடையஊர்மாறுவதால்நீங்களும்வரவேண்டாம்என்றுஎழுதியதோடு, நீங்கள்இனிமேல்யாருடையஅறையிலும்தங்கிஇருக்கவேண்டாம். நான்மாதாமாதம்பணம்அனுப்புகிறேன். உடனடியாகதிரு. சாரங்கன்வீட்டிலிருந்துபுறப்படவும்” என்றுஎழுதிஇருந்தாள். சற்றுநேரம்சிந்தித்தசாரங்கனுக்குசீதம்மாதான்பிச்சையாவின்மகள்ருக்கம்மாஎன்றுபுரிகிறது. பிச்சையாமனம்உடைந்துவிடக்கூடாதுஎன்பதற்காகஅவள்பொய்சொல்லிவருவதையும்தெரிந்துகொள்கிறான். உண்மைதெரிந்தபின்னும்நம்பிக்கையில்வாழும்பிச்சய்யாவைஏமாற்றிக்கொண்டேகூசாமல்அவரோடுஉடனிருக்கப்பிடிக்காமல்வேறுஊருக்குமாற்றலாகிப்போகிறான்.
தற்செயலாகச்சிலரைச்சந்திப்பதுஎப்படிவாழ்வைமாற்றுகிறதுஎன்பற்குசாரங்கனின்வாழ்வுஓர்உதாரணம். அவன்இப்போதுஒழுக்கமானவாழ்வுவாழ்கிறான். தன்தந்தைமோசமானபழக்கம்உள்ளஒருவருடன்தங்கியிருப்பதைருக்கம்மாவிரும்பாததுதான்கதையின்மையம். ஒழுக்கமாகவாழவேண்டியசாரங்கன்அதிலிருந்துதவறுவதும், திசைமாறிவாழ்பவள்அவனைமட்டமாகநினைப்பதும், நல்லமுரண். ஆனால்வையவன்ருக்கம்மாவைமையப்படுத்தி “உன்னைரோஜாப்பூவுகணக்காதண்ணிபடாமேதழும்புபடாமே, வெயில்படாமேவளர்த்தேனேருக்கம்மா “ என்றுபிச்சையாபுலம்புவதைவைத்து. இப்போதுஅப்போதுஅந்தரோஜாப்பூமழையில்வீணாகநனைவதைஎண்ணித்தலைப்புசூட்டியிருக்கிறார்.
அடுத்தது ‘மறதி’ எனும் குறு நாவல். இந்நாவலில் ஓரிடத்தில் “ உலகத்தில் எல்லாத் துயரங்களுக்கும், எல்லாமான முறிவுகளுக்கும் மறதிதான் மாபெரும் மருந்து “ என்று வருகிறது. உண்மைதான். இந்த மறதி என்ற உணர்வு மட்டும் இல்லாவிடில் வாழ்வு பல சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும். உறவுகளுக்கிடையே குழப்பங்கள் ஏற்படும். நடந்ததையே நினைத்து நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிப் பிறரையும் வருத்தத்திற்கு ஆட்படுத்துவோம். மறதிதான் இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யத் தூண்டுகிறது. இனி கதைக்கு வருவோம்.
கல்லூரி நாள்களில் மாதுவும் கிருஷ்ணவேணியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால் குடும்பச் சூழ்நிலையால் உறவுப் பெண்ணாகிய கௌசல்யாவை மணக்க வேண்டிய சூழ்நிலை மாதுவுக்கு ஏற்படுகிறது. கனத்த மனத்துடன் கிருஷ்ணவேணியிடம் சொல்லிவிட்டுப் பிரிகிறான் மாது. அவளும் வருத்தத்தோடு  இம்முடிவை ஏற்கிறாள். கௌசல்யாவை மணம் புரிந்து இரு குழந்தைகள் பிறந்த பின்பும் மாதுவால் கிருஷ்ணவேணியை மறக்க முடியவில்லை. மனைவியிடம் முழு அன்பு செலுத்த முடியவில்லை.
ஒரு நாள் தன் மனைவிக்கு உடல் நலம் சரியில்ல என மாது அவளை மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறான்.அந்த மருத்துவர் கிருஷ்ணவேணியாக இருப்பதுதான் கதையின் திருப்பம். எல்லாச் சோதனைகளும் செய்தபின்னர் கௌசல்யாவுக்கு டி.பி என்று அவர்கண்டுபிடிக்கிறார். [ ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.]
அத்துடன், “ அவளுக்கு ஏக்கம் என்ற நோய். அதுவே முற்றி டி.பி என்றாகி விட்டது. அவள் உங்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்திருக்கிறாள். நீங்கள்…….அதைத் தரவே இல்லை “ என்று குற்றம் சாட்டுகிறாள்.
”பழைய காதலை--- கிருஷ்ணவேணியை மறக்க முடியவில்லை” எனும் மாதுவிடம் ”மறக்கத்தான் வேண்டும் நான் அதற்காகத்தான் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். என்னை மறந்து விடுங்கள்; ஒரு பாவமும் செய்யாத உங்கள் மனைவி  ஏன் தண்டனை அடைய வேண்டும்?” என்றெல்லாம் கிருஷ்ணவேணி கூறுகிறாள்.
மனம் மாறிய மாது ஆறு வருஷத்தில் காட்டாத அன்பை கௌசல்யாவிடம் செலுத்த அவள் மனம் மகிழ்கிறாள். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைவது போல கௌசல்யா மறைகிறாள். ’கிருஷ்ணா ஏற்றுக்கொள்வாளா’ என்று கொஞ்சம் நப்பாசைப் பட்ட மாது உடனே மனம் மாறுகிறான்.
”எனக்குக் கிடைக்காத மறதி அவளுக்குக் கிடைத்திருக்கும் போது அதில் குறுக்கிட மாட்டேன். அவள் ஆயிரம் நோயாளிகளுக்கு உரியவள்”என்று அவளிடம் சொல்லாமலே போய்விடுகிறான்.
உண்மையிலேயே மறதி என்பது ஒரு வரப்பிரசாதம். இது முன்பே மாதுவிற்குக் கிடைத்திருந்தால் கௌசல்யா என்ற பெண்ணின் வாழ்வு மலர்ந்திருக்கும். அது கிடைத்ததால்தான் கிருஷ்ணவேணி என்பவளின் வாழ்க்கை நன்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
 இந்த “ஆச்சாள்புரம்’ எனும் தொகுப்பிலுள்ள குறுநாவல்கள்  ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. எந்த சம்பவங்களும் வலிந்து அமைக்கப்படாமல் அவற்றின் இயல்பான போக்கிலேயே வந்து செல்கின்றன. தள வருணனைகள் மனத்தில் இடம் பிடிக்கின்றன. ஒரு குறு நாவல் முடியும் பக்கத்திலேயே அடுத்த நாவல் தொடங்குவது கொஞ்சம் தொழில்நுட்பக் குறைபாடாகத் தோன்றுகிறது. [ பக்கங்கள் 42, 63, 109, 132 ] ஆக வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து எழுத்தாளர்களும் படிக்கவேண்டிய அருமையான தொகுப்பு இது.
[ஆச்சாள்புரம்-குறுநாவல்கள்-தொகுப்பு---வையவன்வெளியீடு:தாரிணிபதிப்பகம்,4ஏ,ரம்யா பிளாட்ஸ், காந்தி நகர் 4ஆவது மெயின் ரோடு, சென்னை 600 020-பக்: 148, விலை: ரூ 120]

No comments:

Post a Comment