Friday 31 October 2014

இலக்கிய வாழ்க்கை-2


                       இலக்கிய வாழ்க்கை-2
சென்னையில் பிராட்வேவுக்கு அருகில் இருந்தது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட். அங்கே நண்பர் ஒருவரின் ஒத்தாசையமால் ஒரு கடையை அன்றாட வாடகை பிடித்து அதில் தக்காளி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது 1944 – 45. வையவனுக்கு மூன்று வயது. தம் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் எம்.. பட்டம் பெறவேண்டும் என்ற கனவுகள் உள்ள தந்தையாக அவர் இருந்தார்

பரமசிவம் ஒரு நல்ல வாசகர். செய்தி தாள்கள் கதைகள்.. நாவல்கள் வாசித்தல் என்று அவருக்கு வாசிப்பில் ஒரு தனி ஆர்வம் உண்டு. தம் மகனுக்கு (வையவன்) ஆங்கிலம் கற்பிக்க பீடி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்த ஒரு மராட்டியரிடம் தன் டியூஷன் ஏற்பாடு செய்தார். தமிழைக் கற்கும் முன்பே வையவன் ஆங்கிலமே முதலில் அறிமுகமாயிற்று. ஆங்கில மொழியின் மீதும்.. ஆங்கில இலக்கியத்தின் பாலும் வையவனுக்கு தனிப்பிரியம் ஏற்பட அதுவே காரணம்.

வையவனின் தாய் அமிர்த சிகாமணி ஒரு நல்ல கதை சொல்லி. உணர்ச்சி பூர்வமாக மனதில் பதியும்படி கதைகள் சொல்வார். மிகுந்த பக்தியுள்ள அவர் சென்னையில் தாம் வசித்த தங்கசாலை சௌகார்ப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் திருவொற்றியூர் திருவள்ளூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்குத் தாம் செல்வதோடு வையவனையும் அழைத்துச் செல்வார். அமிர்த சிகாமணி ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு முறைப்படி முத்திரை குத்திக்கொண்டவர். அவரிடமிருந்து மகனுக்கு அந்த செல்வாக்கு தானே தன்னையறியாமல் பரவியது.

அந்தக் காலத்தில் தினசரி என்ற செய்தித்தாளில் (.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர்) வார மடல் வரும். அதற்குப் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி. கற்பனைச் சுவை மிகுந்த சிறுகதைகளும் பொற்றாமரை என்ற சீனக்கதையின் தொடரும் அதில் வாராவராம் வெளிரும். பரமசிவம் தன் மகன் வாசிக்க அதை வாங்கி வந்து தருவார்.

நான்கு வயது நிரம்பியதுமே வையவன் கொத்தவால் சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராம்ன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராமன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தார். அது இரு மொழி மாணவருக்கான பள்ளி. அங்கு முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் தெலுங்கு மாணவர்களும் ஒன்றாகவே படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு மட்டும் வேறு பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

அவர்கள் குடியிருந்த வீடு ஒரு தெலுங்கர் வீடு. கூடவே வாடகைக்கு இருந்தவர்களும் தெலுங்கர்கள். வையவனின் சொந்த ஊர் வெள்ளக்குட்டையில் எதிர்வீடு ஒரு தெலுங்கு பேசும் சாத்தானி பிராம்மணர்கள் வசித்த வீடு. இவ்வாறு சிறு வருவத்திலேயே தெலுங்கின் சுற்றுச் சூழல் அவருக்கு ஏற்படவே தெலுங்கு வெகு சரளமாகப் பேசும் திறன் அவருக்கு அமைந்தது.

அவர்களது குடும்ப டாக்டர் முத்தையா பிள்ளை என்பவர் ஒரு மலையாளி. அவரது மனைவி வையவனுக்கு ஆறு வயதிலேயே மலையாளம் கற்றுக்கொடுத்தார். அந்த டாக்டர் மாறிவிடவே மலையாளக் கல்வி நின்று விட்டது. வையவன் ஆறாம் வகுப்பில் ஹிந்திபடித்தார். பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஹிந்தி வகுப்புகள் நின்று போனதால் அவரால் தொடர முடியவில்லை.

இந்தச் சூழ்நிலைகளால் வையவனுக்கு எல்லா மொழிகளின் மீதும் நேசம் ஓர் இயல்பாயிற்று. புரொக்ரஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த போது வையவன் வாழ்வில் ஒரு துயரமான திருப்பம் நேரிட்டது. முன்னுக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் உந்துதலும் உள்ள அவரது தந்தை பரமசிவம் கொத்தவால் சாவடியில் தக்காளி வியாபரம் செய்வதில் சலிப்புற்று புளி சீயக்காய் ஆகிய பொருள்களை கர்நாடகத்தில் டும்கூரில் மொத்தமாக வாங்கி வந்து சென்னை மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அதில் நேரிட்ட எதிர்பாராத சந்தை வீழ்ச்சியால் பரமசிவம் கை முதல் அனைத்தையும் இழந்து குடும்பத்தை வறுமையில் ஆழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் [வளரும் ]

No comments:

Post a Comment