Sunday 12 October 2014

என் நேரம் எனக்கான நேரம்.....

என் நேரம் எனக்கான நேரம்.................


தமிழ்ச்செல்வி  நிக்கோலஸ்


துடித்திடும் இதயமும்
மறந்திடும் அதிகாலையும்
தினம் தினம் தேடாமல் அடைவது
உன்  சுகமான நினைவுத்துளிகள்..!

தடை கொண்ட பொழுதுகளில்
மின் விசிறியின் சுழற்சியாய் சுழலும்
நினைத்துளிகள் சட்டென வந்த
மின்சாரமாக....பிரகாசிக்கும் முகம்....!

மதியின் குளிரினில் கூடிய
பனியின் துளியாய்...
தினம் தினம் பூக்கும் அதிகாலையாய்
கண்களுக்குள் ஆனந்தம் அடர்த்தியாய்...!
கண்ட பொழுதினில்.!

மேகம் பொழியும் மழையாய்
நனைந்து ஆடும் மண்ணாய் மனம்
கரைந்து போகுது ...!
நிஜம் தவிக்கும் நிழல்தனை
நேரினில் கண்டதில்..!

என் நேரம் எனக்கான நேரம்
என் நினைவுகள் உனைகண்டதும்
சேமிக்க ஆரம்பித்துவிட்டது…மீண்டும்
உன்னை….!


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோலஸ்**

No comments:

Post a Comment