Saturday 23 August 2014

ஆண்டாள் ஆண்டவனுக்கு:கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி

                      ஆண்டாள் ஆண்டவனுக்கு
கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 
                 
எந்தக் கணம் எனை உணர்ந்தாயோ
நான் அறியேன்
இந்த மனம் உனதுயிரானதை
நான் உணர்ந்தேன்

வெற்றிட பூமியில் இன்று
காதல் விதை தூவினாய்
நெஞ்சத்தின் ஆழமெங்கிலும்
நேசச்செல்வமாய்  நீ நிறைந்தாய்





இன்று நான் சேர்ந்தேன்
மார்போடு சேயாக மாறியே
தலைகோத நீயும் தாயானாய்
நிஜ உரு ஆகியே

காணா இத்துயர் தீர்க்கத்  தலைவா
கண் முன்னே தோன்றுவாய்
தீயாய் எரியும் உடலையும்
தண்மை நிலையாய்  மாற்றுவாய்

என்னிலே எதைக்  கண்டாயோ
காதலை முன் மொழிந்தாய்
மொழிந்தவன் கூற்றை நிஜமாக்க
காதலாய் மாறி வந்தேன்.

நான் என்பது நாமாக
பிரிவென்பது  தொலைந்து போக
நேசச் சாரல் எங்கும் வீச
காதல் வெளியில்  மிதப்போம்
,

No comments:

Post a Comment