Thursday 28 August 2014

குடை விரிப்போர் : மதன் பிரசாத்

                                                           
 மதன் பிரசாத் 

                                                               

குடை விரிப்போர் 

[மதன் பிரசாத்] 

ஒரு துளிக்கும்

மறு துளிக்கும்

இடைவெளி இல்லாமல்

இடி - மழை !


வெளியே செல்ல 

விரிக்கிறேன் குடையை...

ஒற்றை வினா

உருக்குலைத்து விடுகிறது

மனதை !


நனையாமல் இருக்க 

நைலான் துணி

நமக்கு இருக்கு...

குருவிக் கூட்டுக்கு

குடை பிடிப்பது யார்?

சிந்தை கனக்க 

சாலையைக் கவனித்தேன்.


முந்தானைக்குக் கீழே

மூன்று வயது பாலகன் -

தொப்பலாய் நனைந்த

தாயுடன் !

தாயுள்ளம் கண்டு

சிலிர்த்தவாறே 

பாய்கிறது பார்வை

பறவைக் கூட்டுக்கு !


வெறித்த நொடி 

வியந்துவிட்டேன்...

தாய்ச் சிறகடியில்

நனையாமல் தலைகாட்டும்

சின்னக்  குருவிகளைப் 

பார்த்து !

No comments:

Post a Comment