Monday 28 July 2014

இலக்கியப் பிரமுகர் அறிமுகம்:1:பாச்சுடர் வளவதுரையன்

                                                         

                             இலக்கியப் பிரமுகர் அறிமுகம்:1
[இப்பகுதி தொடர்ந்து வெளிவரும்  தகுதியுடைய பெருமக்கள் தம் முழுத்தகுதி மற்றும் புகைப்படத்துடன் இணையவெளிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். [vaiyavan.mspm@gmail.com]உடனே இது  பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்படும்]  
 பாச்சுடர் வளவதுரையன்


இயற்பெயர் :அ.ப.சுப்பிரமணியன்
கல்வித் தகுதி:முதுகலை தமிழ்
பிறந்த இடம்:வளவனூர் (விழுப்புரம் அருகில்)
பிறந்த நாள் :15.07.1949
பெற்றோர் :அ.பரமேசுவரன்,  ப. இலலிதா
குடும்பத்தினர்:
வை.அலர்மேல்மங்கை (மனைவி)
சு.எழிலன் - எ.சித்ரா (மகன், மருமகள்)
சு.அல்லி - க.சிவக்குமார் (மகள், மருமகன்)
சு.முகிலன் - மு.முத்துலட்சுமி (மகன், மருமகள்)

ஆர்வமான துறைகள்:
மரபிலக்கியம், சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, விமர்சனம்
எழுதியுள்ளவை:
1. அர.இராசாராமன் ஆற்றுப்படை (மரபிலக்கியம்-1996)
2. தாயம்மா (சிறுகதைகள்-2000)
3. சிகரங்கள் (சங்க இலக்கியம்-2002)
4. வைணவ விருந்து (சமயம்-2004)
5. நேரு பிறந்தகதை (சிறுகதைகள்-2005)
6. பெரியோர் சிந்தனைகள் (வானொலி உரைகள்)
(கட்டுரைகள்-2006)
7. கூச்சம் (சிறுகதைகள்-2007)
8. மலைச்சாமி (புதினம்-2009)
9. பசிமயக்கம் (மரபுக்கவிதை-2009)
10. விடாத தூறலில் (நவீன கவிதை-2011)
11. சின்னசாமியின் கதை (புதினம்-2012)
தொகுப்பு நூல்:
அதிகாரம் இழந்த அதிகாரங்கள் (கவிதைகள்-1998)
விருது, பரிசு, பாராட்டு:
1. தினமணி கதிர் - ஒரு பக்கச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு
2. கடலூர் தமிழ்ச்சங்கம் - பாரதிதாசன் விருது
3. கம்பம் பாரதி இலக்கியப் பேரவை - சிறுகதை நூலுக்கு - முதல் பரிசு
4. சேலம் கே.ஆர்.ஜி அறக்கட்டளை சிறுகதை நூலுக்கு - முதல் பரிசு
5. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், எட்டயபுரம்
பாரதி விழாவில் சிறுகதை நூலுக்கான - முதல் பரிசு
6. திருப்பூர் தமிழ்ச்சங்கம் புதினத்துக்கான - முதல் பரிசு
7. சேலம் எழுத்துக்களம் - தாரைப்புள்ளி அறக்கட்டளை - புதினம் - முதல் பரிசு
8. வளவனூர் திருக்குறட்கழகம் மற்றும் தமிழ் இலக்கியப் பேரவை பாராட்டு
9. கடலூர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி அறக்கட்டளை பாராட்டு
10. “சங்கு” இதழுக்காக தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கம் அளித்த நல்லிதழ் விருது.
11. கரூர் திருக்குறள் பேரவை - தமிழ் இசைச் சங்கம் மரபுக்கவிதை நூல் - சிறப்புப் பரிசு
12. சென்னை கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை நவீன கவிதை நூலுக்குப் பரிசு.
13. சென்னை என்.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை நாவலுக்கு முதல் பரிசு
14. வள்ளியப்பா இலக்கிய வட்டம் - சிறுவர் பாடல் பரிசு
சிறப்பு நிலைகள்:
1967 முதல் இலக்கிய ஈடுபாடு
ஆசிரியர் இயக்கத்தில் இருமுறை சிறை புகுந்து பல்வேறு பொறுப்புகள் ஏற்றுள்ளமை
வளவனூர் திருக்குறட் கழக நிறுவனர்களில் ஒருவர்
கூத்தப்பாக்கம் இலக்கியச்சோலை தலைவர்
மணவாளமாமுனிகள் சபை செயலாளர்
“சங்கு” சிற்றிதழின் பொறுப்பாசிரியர்
தொடர்பு முகவரி:
20, இராசராசேசுவரி நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்-607 002.
பேசி: 93676 31228
மின் அஞ்சல் :valavaduraiyan@gmail.com
-----------------------------------------------------------------
இவரைப்பற்றி  அவர் 
   [கடலூர் வழக்கறிஞர் மற்றும் இலக்கிய ஆர்வலர் கோ.. மன்றவாணன்] 
இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும் புதுப்பொலிவோ டு சிறப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வது தான் இதில் கவிதை விதிவிலக்கல்ல. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்தே  இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின்போக்கு வெகுவாக மாறிப் போய் விடுகிறது.
புளித்துப்போன சொற்களாலும்,ச லித்துப்போன உவமை களாலும் அலுத்துப்போன உத்திகளாலும் இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.கவிதை மாறும்போது கவிஞனும் மாறவேண்டும். இல்லை எனில் இக்கவிதையின் முதல் கவிதையான பார்வை என்ற கவிதையில்சொல்லப்படும் பழுதாகி நிற்கும் பேருந்து போல் கவிஞனின் நிலை மாறிவிடும்.

நம் கவிஞர். வளவ.துரையன் தன் இலக்கிய வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப கவிதையின் போக்கிலேயே  பயணம் செய்திருக்கிறார்.சிலவேளைகளில் 

கவிதையின் போக்கையே  மாற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டியும் இருக்கிறார்.

வெண்பா விருத்தப்பா வகைகளில் விளையாடிய நம் கவிஞர் இன்றைய நவீன கவிதைகளிலும் ஒரு நட்சத்திர மேடையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

மரபுக் கவிதை , வசன  கவிதை, புதுக்கவிதை,  நவ கவிதை, நவீன கவிதை , சிறுகதை, புதினம், கட்டுரை, சொற் பொழிவு எனப் பன்முக ஆற்றல்களை நிறைவாகப் பெற்றவர் பாச்சுடர் வளவ. துரையன் அவர்கள். இவையன்றி மாதம் தோ றும் இலக்கியக் கூட்டங்கள், இறையியல் நிகழ்ச்சிகள் நடத்தி ஒரு சிறந்த தமிழ்வளர்ச்சிச் செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார். பல நூல்களை எழுதிப் பல பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

வளவ.துரையன் அவர்களின் நுட்பமான கவியுணர்வின் செப்பமான வெளிப்பாடு தான் ‘ஒரு சிறு தூறல்’  என்ற கவிதை நூல். 

ஒவ்வொரு நாளும் புதிய ஒன்றைத்;தேடிக்கொண்டே  இருக்கிறார் வளவ.துரையன். அவரை வாழ்த்த நானும் புதிய சொ ல்லைத் தேடிக் கொண்டே  இருக்கிறேன். 
-----------------------------------------------------------------------------------------------------------------------                          
 வைணவ ஆசார்ய வைபவம் என்ற தலைப்பில் 
                      
வளவ.துரையன்  கட்டுரைகள் ஒவ்வொன்றாய் நம் இணையவெளி இதழில் வெளியிடப்படும் 
நிர்வாக ஆசிரியர் 

No comments:

Post a Comment