Monday 29 April 2013

அயரா உழைப்பு அருஞ்சாதனை:சங்கர இராமசாமி

சங்கர இராமசாமி 


1)முதன் முதலில் தாங்கள் கண்ட பிளாக் எது? அதை அறிமுகப்படுத்தியவர்  யார் ?   

2 ) அந்த பிளாக்கில் தாங்கள் வாசித்த முதல் பதிவு எது ? நினைவிருக்கிறதா ?

முதலிரு கேள்விகளுக்கும், எனது முதல் பதிவிற்கும் தொடர்பு இருப்பதால் சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது.  தயவு செய்து அனுமதியுங்கள்.

மின்னஞ்சலின் பயன்பாடே அறியாதவனுக்கு BLOG எப்படித் தெரியும் ?ஆனந்த விகடனில் ( தற்போது நினைவில் வாழும் ) +-VE அந்தோணி முத்து என்ற மாற்றுத் திறனாளியின் பேட்டி வெளிவந்திருந்தது. பொதிகைத் தொலைக் காட்சியில் “வெளிச்சத்தின் மறுபக்கம் “ என்ற தொடர் மூலம், சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களையும், இது போன்ற வித்தியாசமானவர்களையும்,  பன்முகத் திறனாளி ,மதுரா டிராவல்ஸ் நிறுவனர், வீ. கே.டி. பாலன்  ஞாயிறு தோறும் அறிமுகப் படுத்தி வந்த காலக்கட்டம் அது. அந்தோணி முத்துவைப் பற்றியும் அவரிடம் குறிப்பிட்டேன். பாலன் ஐயா, “நீ மிகவும் லேட், தற்பொழுது, அந்தோணி முத்து எனது ஊழியர் என்று சொல்லி, அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். இவ்வாறாக அந்தோணி முத்துவுடன் நட்பு ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்து பணி விடை பெற்றிருந்த நேரமது. கணினியில் எப்படியாவது தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையின் உச்சக் கட்டத்தில் இருந்தேன். 

அந்தோணி முத்துவிற்க்கு அருணா என்னும் கல்லூரி முதல்வர் கணினியைப் பரிசளித்திருந்தார். சினிமாவில் இசையமப்பாளராக முயற்சித்துக் கொண்டிருந்த முத்து, கணினி வல்லுநரானார். ஏகலைவனாகவே எல்லாவற்றையும் புத்தகங்களின் மூலம் கற்றுக் கொண்டார். பொதிகைத் தொலைக் காட்சியில் இவரது பேட்டியையும் பாலன் ஒளி பரப்பினார்.

எங்கள் நட்பு தொலைபேசி உரையாடலிலேயே தொடர்ந்தது. அப்பொழுதுதான் வலைப்பூவைப் பற்றியும்,  விஸுவின் இலவசத் தமிழ்  அழகி மென்பொருள் பற்றியும், என்போன்றோர் போனோட்டிக் முறைமூலம், தாராளமாகத் தட்டச்சு செய்யலாம் என்றும் வழிகாட்டினார். வலைப்பூவிற்கு தலைப்பொன்று கேட்டார். புனை பெயரில் இயங்குவது நல்லதென்றார். சீராசை சேதுபாலா புனை பெயரானது. “மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும்” என்பது எனது வலைப்பூவின் தலைப்பாயிற்று.

நோக்கப்படியே, நல்ல செயல்களைச் செய்வோர் குறித்த தகவல்களத் தொகுப்பது எமது கடமையாயிற்று. பெரம்பலூர் மாவட்டத்தில் தேனூர் என்னும் கிராமத்தில், “பயிர்” என்னும் டிரஸ்டைத் துவக்கிய செந்தில் குமார் என்பவரது இணையமே நான் பார்த்த முதல் தளமும் ஆனது. எனது முதல் வலைப்பூ பதிவும் அவரது தளத்தைப் பற்றியதே ஆகும். அந்த அறக்கட்டளைக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பும் வழங்கினேன். தொடர்ந்து வழங்க உறுதியளித்த நான், பின்னாளில் என் வாக்கைப் பல்வேறு காரணங்களால் காப்பாற்ற இயலவில்லை முதற் பதிவு பின் வருமாறு.

http://www.payir.org/aboutus.html  செந்தில் குமார் கோபாலன் என்பவர் துவக்கிய பயிர் ????? ???????? ????????????! ??????? ?????????! <http://rssairam.blogspot.in/2009/11/blog-post.html> 
Posted on 4:50 AM by Sankara RamaSamy with 2 comments <http://rssairam.blogspot.in/2009/11/blog-post.html> 
  <https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuPxacerQv-H2XpNec7BAwBKfukSQHdqPFtIgjwQXHOirWNtSnz5j88aBut1wn3cUvcibm4PR0dqrfhwIWtr5nI5emfcWuBk5BgAgaTzf2vJVBOCpZiurK0ZdoUevvIXyeucvf8ZNr9RhD/s1600-h/ATT00108.jpg>


வயது 31.அமெரிக்காவில் மாதவருமானம், 2 லட்சம்!போதும் என்கிறது,மனம்.சொந்த ஊருக்குத் திரும்புகின்றார்.சுகாதார மையம் துவக்குகின்றார்.முறைசாராக் கல்விப் பயிற்றுவிப்பு மையம் ஒன்றும் அவரால் உருவாக்கப்படுகின்றது.இதன் மூலம் 5-ஆசிரியர்கள்,உள்ளூர்ப் பள்ளி மாணாக்கருக்கு ஆங்கிலம் போதிக்கின்றனர்.நிர்வகிப்பதற்காக சேவை நிறுவனத்தையும் அமைத்துக்கொள்கின்றார்.சொந்தப் பணமே மூலதனம்.


தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் கிராம வாழ்க்கை துவங்குகின்றது.வசிப்பதற்கு ஓர் சிறு குடில் மட்டுமே;அதுவும் அவர் பணத்தில்தான்! 3 வேட்டி-சட்டைகள்,ஓர் சாதாரண செருப்பு;இதுவே அவரது தனிஉடைமை.


தனது சொந்தக் கிராமத்திலேயே-அமைக்கின்றார்,ஓர் மென்பொருள் நிறுவனம்.உள்ளூர் இளைஞர் நால்வர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.


தாய்-தந்தையரை மறந்து விடவில்லை.தாயின் விருப்பப்படி விரும்பிய இடத்தில் ஓர் வீடு;வங்கியில் வாழ்க்கைச் செலவிற்கென்று சிறிது வைப்புநிதி.பெற்றவர்களுக்கு மகிழ்வான வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுத்தபின்,பள்ளியில் படிக்கும்பொழுது உருவான எண்ணத்தைச் செயற்படுத்துகின்றார்.


திண்ணிய உள்ளம்; எண்ணியதை எய்தியது; 5-ஆண்டுகளில்!கருவியாகத் துணை செய்தது,"பயிர்" என்ற பெயரில்,இவர் உருவாக்கிய அரசு சாரா சேவை அமைப்பு.இந்த நற்செயல்களுக்குச் சொந்தக்காரர்,திரு.செந்தில்,தமிழகத்தின் சொத்து.


தமிழக மாந்தர் சுற்றுலா செல்லவேண்டிய இடம்,தேனூர் என்ற கிராமம்,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. வணங்கிடவேண்டியது, செந்தில்குமார் கோபாலன் என்கிற
35 வயதுடைய மாமனிதனை!


சுதந்திர இந்தியாவில், சொத்து சேர்த்துக் குவித்த அரசியல்வாதிகள்-துணை நின்று வளம் பெற்றோர்,தம் சொத்தில் ஒரு பகுதியினை மட்டும்தமது ஊரின் வளர்ச்சிக்குச் செலவிடத்துவங்கட்டும்!தமிழகம் வளம் அடையும்; வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் சொல்லாமற் கொள்ளாமற் காணாமற் போகும்.


சமூகத்தின்பால் அக்கறை கொண்டோர் சான்றோர் துணைக்கொண்டு அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ற செயல்திட்டங்கள் தீட்டலாம்; நிலங்களைத் தானம் பெற்ற வினோபாவின் வழியில்,பொருள்-இடம் தானமாகப் பெற்றுத் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.அனைத்து மத நிறுவனங்களிடமிருந்தும் வருவாயில் ஒரு பகுதியினைப் பெற்றிடச் சட்டம் இயற்றச் செய்யலாம்.


நாமும் வறுமையற்ற- வளமான-தமிழகம்-இந்தியா குறித்துக் கனவு காணலாம்.அடுத்த தலைமுறையேனும் கல்லாமையும் இல்லாமையும் இல்லாத சமநீதிச் சமூகமாக அமையும்.


பயிர் ஆசிரமம், 
தேனூர் கிராமம், டி.களத்தூர் (வழி),குன்னம் தாலுகா,
பெரம்பலூர் மாவட்டம்-621114.
+91 4327 234644
+91 94449 12672 

இதனைத் தொடர்ந்து கோவை ஆட்டோ தொழிலாளர்களின் தோழர்கள் டிரஸ்ட். அநாதைப் பிணங்களைத் தேடிச் சென்று சட்டப்படி உரிமைகளைப்பெற்று சகல மரியாதைகளுடன் இறுதிக் கடன்களைச் செய்யும் தகவல் பதிவானது.

எழும்பூர் இரயில்வே நிலையத்தில் நேர்மையாக நடந்து கொண்ட துப்புறவுத் தொழிலாளர்கள் பற்றிய தகவல் தொடர் பதிவானது. 

3. மூன்று இலட்சம் பேர் பார்வையிட்ட தங்கள் பிளாக் குறித்து தங்களுக்கு மகிழ்ச்சி உண்டா ?

இந்த நிமிடம் வரை ( 25-04-2013 10.52 ) 3,47,696 பேர் ( 2098 பதிவுகள் ) பார்வையிட்டுள்ளனர் என்பதில் மகிழ்ச்சியே. அழகி விஸு,               ( நினைவில் வாழும் )  +VE அந்தோணிமுத்து, இணையத்தில் அறிமுகமாகி, நேரில் கூடப் பார்த்தறியா நிலையில், வடிவமைப்பை மாற்றி உதவித் தேவையான அறிவுரைகளை வழங்கிவரும் வின் (WIN ) மணி ஆகியோருக்கே இவ்வகையில் நன்றி சொல்லவேண்டும். கணினித் தமிழைக் கற்பித்துவரும் திருச்சி முனைவர், துரை மணிகண்டன் தாம் செல்லுமிடமெங்கும் எமது வலைப்பதிவுகளையும்,  65 வயதையும் எடுத்துக்கூறி பரப்புரை செய்து ஊக்குவித்து வருவதற்கும் நன்றி கூறவேண்டும். 

4 ) பிளாக் கூட சமூகத் தொண்டுதான்  என்று இணைய வெளி கருதுகிறது, தங்கள் நிலைப்பாடு என்ன ?

ஆம் ! நிச்சயமாக ! எனக்கு முற்றிலும் உடன்பாடான கருத்தே ஆகும். 
சமூக வலைத்தளங்களும் ஆபத்துகளும் 

இங்கு அறிவுரை போல எளிதாக கிடைப்பது எதுவும் இல்லை..எப்பொழுதும் கவனம்,கவனம் என்று கூறிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஏன் எதற்கு என்று யாரும் விளக்கிக் கூறுவதில்லை…அப்படியே யாராவது கூறினாலும் நமக்கு கேட்க பொறுமையும் இல்லை.இப்படி இருக்கையில் இது விழிப்புணர்வோ ,அறிவுரையோ இல்லை ..தகவல்கள்-அவ்வளவே! . 

இன்றைய நிலையில் ஒரு நாளைக்கு இன்டர்நெட் வருபவர்கள் porn sites எனப்படும் மோசமான பக்கங்களுக்கு செல்பவர்கள் 42 % ..தினமும் இதனால் ஈர்க்கப்படும் மாணவர்கள் கோடிக்கணக்கில். இதன் மூலம் அடிமையாகி பிரிந்து போன கணவர்,மனைவியர் ..சிதைந்து போன குடும்ப உறவுகள் ஆயிரக்கணக்கில். ஆனால் வளர்ந்துவரும் டெக்னாலஜி உலகில் இவை இல்லாமல் இனி வாழ்வது கடினமே..இளைய தலைமுறை இணையத் தொடர்பு இல்லாமல் படிக்க,பள்ளிக்கு போக முடியாது என்ற நிலையில்தான் உள்ளனர். 

கிட்டத்தட்ட நிறைய வேலைகள் கம்ப்யூட்டர் மயமாகி விட்டது.அனைத்தும் இதில்தான் சேமிக்கப்படுகிறது. மொபைல், டி.வி இல்லாமல் கிராமத்தில் கூட வாழ்க்கை நடத்துவது சாத்தியம் இல்லை என்றாகி விட்டது. இன்டர்நெட் இல்லாத உலகம் இனி இல்லை என்று கூறும் காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இங்கு ஆபத்து அதிகம் பெண்களே,குழந்தைகளே இங்கு வராதீர்கள் என்றெல்லாம் கூறுவது தெருவில் நடக்காதீர்கள் ஆக்சிடென்ட் ஆகி விடும் என்று கூறுவதை போல கேலிக்கூத்து வார்த்தைகள் ஆகிவிடும்.அதே சமயம் நடு வீட்டில் குத்தாட்டம் போடும் டி.வியை அனுமதிக்கும் வீட்டில் இன்டர்நெட் என்றால் மோசமான வஸ்துவைப்போலப் பார்க்கும பெற்றோர்களும் உள்ளனர். 

சமீபத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மோசமான தளங்களில் உலவ விட்டதால் சம்பந்தப்பட்ட பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.வேறொருவர் தன் மனைவியின் புகைப்படம் மோசமான தளத்தில் இருந்ததால் விவாகரத்து செய்து விட்டார். இவை உண்மை சம்பவங்கள்..இது போன்ற எத்தனையோ வக்கிரங்கள் சமூக வலை தளங்களில் நடக்கிறது. இந்த வக்கிர உலகமும் கூட எத்தனையோ கோடிகளில் நடக்கும் வியாபாரமாகி விட்டது.. தற்பொழுது சுப்ரிம் கோர்ட் கூட தன் கவலையை தெரிவித்து இருக்கிறது. மோசமான பக்கங்கள்,வக்கிர உணர்வுகளை தூண்டும பக்கங்களை தடை செய்வது பற்றிய ஆலோசனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டு கொண்டு உள்ளது. அத்தனை மோசமாக ஊடுருவி இருக்கிறது இதை போன்ற வலை தளங்கள். 

பணம் கொடுத்து போட்டோக்கள் விற்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. அவர்களுக்கு அது தொழில் .ஆனால் சாதாரண பெண்கள் வாழ்க்கையிள் விளையாடும் பொழுதுதான் பிரச்சனை வருகிறது. பெண்கள் குனிந்தால்,திரும்பினால் ,புடவை நழுவினால் ,மால் போன்ற இடங்களில் மேலே இருந்து என்று எத்தனையோ கோணங்களில் படம் பிடித்து அதை மார்பிங் மூலம் மேலும் கவர்ச்சியாக்கி இணையதளங்களில் வெளியிடுவது அதிகமாகிக்கொண்டே போகிறது. தடுக்கப் பெண்கள் பர்தா போடுவதை தவிர வேறு வழி இல்லை.. 

அது மட்டும் இல்லாமல் நாம் எத்தனை கவனமாக போட்டோக்கள் வைத்து இருந்தாலும் சமூக வலை தள திருடர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் அக்கௌன்ட்களை ஹேக் செய்து நம் பெர்சனல் போட்டோக்களை திருடி மார்பிங் செய்து அதற்கென்று இருக்கும் பக்கங்களில் வெளியிட்டோ, இல்லை அதை விற்றோ பணம் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்துதான் வருகிறது.சாதாரண பெண்களின் படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு அந்த பெண்ணை பற்றி மோசமான கமெண்ட்கள் மூலம் மன வக்கிரங்களை கொட்டும் அவலங்களும் அதிகமாக நடக்கிறது. 

இதற்கிடையில் ஆண்களுக்கு கூட இப்பொழுது ஆபத்தாம்..அவர்களுக்கும் இது போன்ற மோசமான பக்கங்கள் இருப்பதை கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டது. இந்தியா எங்கு போய் கொண்டு இருக்கிறது என்று.அதே சமயம் குழந்தைகள் படங்களை வக்கிரமாக மாற்றும் கொடுமைதான் இதன் உச்சகட்டம்.. 

அந்த நிகழ்வுகளை கேட்டு அதிர்ந்துவிட்டேன். இப்போதெல்லாம் மூன்று,ஐந்து வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யும் வக்கிரங்கள் நடைபெறும் செய்திகளை தினம் கடக்கிறோம். நாடு எங்கு போய் கொண்டு இருக்கு ? சட்டங்கள் என்ன செய்து கொண்டு இருக்கு என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கு..நம் சாதரணமாக பகிரும் நம் குழந்தைகளின் படங்கள் அவர்கள் வாழ்க்கையில மிகப் பெரிய பாதிப்பும், மன உளைச்சலும் ஏற்படுத்தும் என்றால் எத்தனை பெரிய வேதனை ? 

இதற்கு அரசாங்கம் நினைத்தால் கண்டிப்பாக முற்றுபுள்ளி வைக்க முடியும். சைனாவில் நிறைய வலைத்தளங்களுக்கு தடை உண்டு..அதே போல இங்கேயும் மோசமான வலைத் தளங்களுக்கு தடையும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இன்னும் அதிக கட்டுபாடுகளும் கொண்டு வந்தால் மேலும் உயர் இழப்புகளையும்,பெண்கள், குழந்தைகள் மேல் பாயும் வக்கிரங்களையும் தடுக்க முடியும்

நன்றி :உஷா  திருநெல்வேலி.  

எனக்கு வந்த தகவலை, உடனடியாக, தமிழ் மின் குழுமத்திற்கும், சமூக அக்கறை உள்ள பெண்களுக்கான மாத இதழைத் துணிச்சலுடன் நடத்திவரும் பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி அவர்களுக்கும், ம.பொ.சி. அவர்களின் பேத்தி T. பரமேசுவரி அவர்களுக்கும் இன்னும் பல சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.

 அவசியமான தகவல்களை உலகெங்கும் பரப்புரை செய்ய வசதியாய் உள்ளது. வலைப்பூ, இணையம், இணைய தளம், இணைய இதழ் எதுவாக இருப்பினும் ஒரே சக்தியும் வலுவும் இருப்பதாகவே கருதுகின்றேன். தகவல்கள் உண்மையாய் இருக்க வேண்டும், அவ்வளவுதான். தற்பொழுது அரசாங்கமே  வலைத் தளங்களின் வலிமை கண்டு அஞ்சுகின்றது. எடுத்துக்காட்டாக, இந்திய வலைத்தளங்களை சீனாவில் பார்க்க முடியாது. ஆனால், இந்திய சீன நட்புறவிற்காக தமிழ் ஒலிபரப்பைக் கூட நடத்துகிறது. போட்டிகளையும் நடத்துகின்றது. எல்லையில் படைகளையும் குவிக்கின்றது. பதற்ற நிலையையும் ஏற்படுத்துகின்றது. இதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. இத்தனைக்கும் சீனா ஒரு பொதுவுடைமை நாடு.                                                               

4. இனிவரும் உலகம் காகித வாசிப்பை சிறுகத் சிறுகத் துறந்து கணினி இணையம் என்று மாறிவிடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதைத் தாங்கள் ஏற்கிறீர்களா ?

ஏற்கவில்லை.  கணினி வந்துவிட்டதால் நோட்டுப் புத்தகங்களின் உபயோகங்கள் பள்ளிக்கூடங்களில் இல்லாமற் போய்விட்டதா ? பெரிய திரை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்துவிட்டதால் திரையரங்குகள் முற்றிலுமாக இல்லாமற் போய்விட்டதா ? இலவச கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத்தானே இன்னும் பலர் பயன்படுத்துகின்றனர். ஆகாய விமானங்கள் வந்துவிட்டன என்று எல்லோராலும் அதைப் பயன்படுத்த முடிகின்றதா ? பஸ், டிரெயின் ஏன்..மாட்டுவண்டிப் பயணங்கள் கூடத் தொடரத்தானே செய்கின்றன. காகித வாசிப்பிற்காக வருகின்ற வார மாத இதழ்கள் இணையத்தையும் பயன்படுத்துகின்றனவே தவிர, காகித வாசிப்பிற்காக இதழ்களை வெளியிட முடியாதவர்கள்தான் இணைய இதழ்களை நடத்துகின்றனர். அவர்களும் ஒரு கட்டத்தில் நூல் வெளியீட்டு விழாக்களை நடத்தத்தானே செய்கின்றனர். “கிண்டில் செயலி” கிழக்கு பதிப்பகம் செயல்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. முழுமையாகச் செயல் முறைக்கு வந்துவிட்டால்கூட, அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை விமானத்தில் பயணிப்போருக்குச் சமமானதாகவே இருக்கக்கூடும். அண்மையில் படித்ததோர் செய்தி. 

விருத்தாசலம், மே 31: விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்கூடல் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திருமுதுகுன்றம் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் சாத்துக்கூடல் கா. இளையராஜா எழுதிய "கடவுளும் வறுமையும்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர் செல்வம் கவிதை நூலை வெளியிட ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் இளையராஜா ஏற்புரை வழங்கினார்.

 விழாவில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் த. பழமலய், கவிஞர் பட்டி சு. செங்குட்டுவன், கவிஞர் ஆறு. இளங்கோவன், கவிஞர் சி. சுந்தரபாண்டியன், கவிஞர் அரங்கநாதன், கவிஞர் மு. புதூர்சாமி, கவிஞர் ராம. அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

கெளதம நீலாம்பரன் என்ற எழுத்தாளரைத் தமிழுலகிற்குத்தந்த சிற்றூர் “சாத்துக்கூடல்”. இந்த இலக்கிய நிகழ்ச்சியை நடத்திய அனைவருக்கும் இந்தச் செய்தி தெரிந்திருக்குமா இல்லையா என்பதல்ல இப்பொழுது பிரச்சினை. அந்தச் சிற்றூரில்கூட  காகிதத்தில் அச்சேறிய நூல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. தங்கள் வினாவிற்கு, விடையாக இது ஒன்றே போதும். மேலும் பொள்ளாச்சி நஜன் என்கிற தமிழ்க்கனலை அணுகினால் எத்தனை புதிய வார மாதச் சிற்றிதழ்கள் வருகின்றன ? இடையில் நின்றுபோனாலும் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவார். எனவே, காகித வாசிப்பு என்பது மானுடம் உள்ளம் வரை தொடரும்.

5. தாங்கள் இணையத்தின் மூலம் வாசகர் எண்ணிக்கை பெருக எந்த உத்தியைக் கையாண்டிருக்கிறீர்கள்? அதில் வெற்றி கண்டதுண்டா?

அதற்கென தனியாக எந்த உத்தியையும் கையாளவில்லை. வலைப்பூவில் பதிவிடுவேன். பின் டிவிட்டருக்குக் கொண்டு செல்ல  உள்ள வசதியைப் பயன்படுத்துவேன். பின்னர் கூகிள் + க்கும் செல்ல முடியும். மனித தெய்வங்களும் சில சேகரிப்புகளும்,என்று துவங்கி, செய்திச் சுரங்கமாகவும், தற்பொழுது தமிழ்ச் செய்திகளாகவும். தொடர்கிறது. முன்பெல்லாம் நாள்தோறும் சுமார் ஆயிரம்பேர் பார்வையிடுவர். தமிழ்ச் செய்திகளாக்கியபின் 200 பேர்தான் வருகின்றனர். அதிகமாக வரும்பொழுது மகிழவும் இல்லை. குறைந்தபோது வருத்தமும் இல்லை. பதிவிடப்படும் தகவலின் தரம் எப்பொழுதுமே குறைந்ததில்லை என்பதே மகிழ்ச்சி. பதிவிடாத நாட்களிலும் கூட பார்ப்போர் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

6. இந்தத் தலைமுறை வாசகர்கள் பொதுவாகவே மேலெழுந்த வாரியாகவே படிக்கிறார்கள். அதை மாற்ற முடியுமா ?

மேலெழுந்தவாரியாக என்று சொல்ல முடியாது. செல்லும் பாதையைத் தீர்மானித்து விடுவதால் தங்களுக்குத் தேவையானவற்றை முழுமையாகப் படிக்கின்றார்கள். பொதுவாக ஒன்றைச் சொல்லலாம்; நமக்குத் தெரிந்தவை எல்லாம், பழசு. தெரியாதவை எல்லாம் புதுசு.இது எல்லோருக்குமே பொருந்தும். ”குறிக்கோளிலாது கெட்டேன்” என்பது சமயக் குரவர் நால்வருள் ஒருவர் கூற்று. நாம் எந்த மூலைக்கு ? மூத்தோர், பொறுப்பில் உள்ளோர், தமது சந்ததிக்கு, இளையவர்களுக்கு தக்க வழிதனைக் காட்ட வேண்டும். இல்லாது போயின் அவர்கள் செல்லும் பாதையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால் மட்டும் போதும். பல சமயங்களில் மெளனம் கூட நல்லதுதான். ஏனெனில், இன்றைய இளைஞர்களுக்கு நல்லதும் / அல்லதும் தெரிகின்றது. மதிப்பெண்கள் அடிப்படையில் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முறையை மாற்றிவிட்டால் எல்லாமே சரியாகப் போய்விடும்.

7. இதுவரை தாங்கள் போட்ட பதிவுகளில் அப்பாடா நாம் உருப்படியான பதிவு ஒன்றைப் பதிந்திருக்கிறோம் என்ற திருப்தி தங்களுக்கு நிச்சயம் வந்திருக்கக்கூடும். அது எது ?
http://rssairam.blogspot.in/2009/12/250.html

இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் 250/-ரூபாயில் முழு உடல் பரிசோதனை!
Posted on 4:19 AM by Sankara RamaSamy with No comments

வருமுன் காக்க நினக்கும் அன்பர்கள். நம் உடல்நிலை எவ்வாறு உள்ளது எனத் தெரிந்துகொள்ள விரும்பும் அன்பர்கள், 250ரூபாய் செலவில், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். பெரிய தனியார் மருத்துவ மனைகளில் உள்ள ஜோடனைகள் கிடையாது, அவ்வளவுதான்.

முழு உடல் பரிசோதனக்குக் காத்திருக்கும் அறை தனியார் மருத்துவ மனைகளப்போன்றே தூய்மையாகவும் உள்ளது.பிற இடங்களிலும் இந்த்க் கவனத்தைச் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

நீங்கள் ஒருமுறை இராயப்பேட்டை அரசு மருத்துவ மனை, முழு உடல் பரிசோதனக்குச் சென்றுவந்தால், அரசு மருத்துவ மனைகளின்மீது உள்ள வெறுப்புக்கள் நீங்கிவிடும். அவ்வளவு அன்பான-கனிவான-இனிமையான பாரபட்சமற்ற வரவேற்பு..
ஓரிரு அசௌகரியங்கள் இருப்பது போல் சிலருக்குத் தோன்றக்கூடும். அதற்குக் காரணம், ஆங்கே இருக்கும் இடவசதிக்குறைவே தவிர, ஊழியர்கள் அல்ல. இருப்பன கொண்டு சிறப்புறக் கனிவுடன் பணியாற்றி வருகின்றனர்.

40-வயதைத் தொட்டவரா ? உத்தரவின்றி உள்ளே செல்லலாம். தினமும் காலை 8.00 மணி முதல் 12.00 மணிக்குள் உரிய பிரிவிற்குச் சென்று பணம் செலுத்தி் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அடுத்த ஒரு வாரத்தி்ற்குள் ஏதெனும் ஒருநாள் தேதி கிடைத்துவிடும்.

குறிப்பிட்ட நாளில் காலை 7.30/8.00 மணிக்குள் வெறும் வயிற்றுடன்-எதுவும் சாப்பிடாமல்-தாண்ணீர், காப்பி,டீ் போன்றவை கூட அருந்தாமல் செல்லவேண்டும். சோதனைக்காகச் சிறிதளவு மலத்தினை எடுத்துச் செல்லவேண்டும். குடிப்பதற்காக 2 லிட்டர் சுத்தமான தண்ணீரும் கொண்டு செல்தல் அவசியம்.

சிறுநீர்,ரத்தம் சோதனைக்குக் கொடுத்தபின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக் கொண்டெ இருக்கலாம். ஆனால்,ஸ்கேன் எடுத்து முடிக்கும் வரை சிறுநீர் கழிக்கக் கூடாது.

COMPLETE GENERAL EXAMINATION :- 1. HAEMOGRAM-HAEMOGLOBIN,TOTAL COUNT,DIFFERENT COUNT,BLOOD PICTURE. 2.BIOCHEMICAL TESTS:- SUGAR(F), UREA,CREATININE,CHOLESTEROL,TOTAL PROTEINS, ALBUMIN, GLOBULIN 3.GENERAL TESTS:- BLOOD GROUPING,RH.TYPING.COMPLETE URINE ANALYSIS,STOOL ANALYSIS 4.OTHERS:- ECG RESULTS,X-RAY CHEST,ULTRA SONOGRAM-WHOLE ABDOMEN, MANTOUX (FOR CHILDREN)

பரிசோதனை செய்த மறுநாள் காலை 10 மணிக்கு மருத்துவ அறிக்கையும், மருத்துவரின் ஆலோசனையும் கிடைக்கும்.தினமும் 15-பேருக்குக்கு முழு உடல் பரிசோதனை நடக்கின்றது.ஏற்பட்டுள்ள் விழிப்புணர்வால் ஒருவாரம்வரை காத்திருக்கும் அளவிற்கு மக்கள் இராயப்பேட்டை அரசு மருத்துவ மனயைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதற்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை.


ஆனால், எனது ஆசையோ அதிகமானது. ஊருக்கு ஊர் அரசு பிரசவ ஹாஸ்பிடல் உள்ள இடங்களில் எல்லாம், சாமன்யனுக்கும், இலவசமாக, முழு உடல் பரிசோதனை செய்திடும் வசதி வேண்டும். அந்த நிலைமை எய்தும் வரை, அழைக்கு்ம் ஊர்களுக்கெல்லாம் சென்று முழு உடல் பரிசோதனை செய்திட ஊர்ந்து திரியும் மருத்துவப் பரிசோதனைக்கூட வசதிகள் கொண்ட வேன்கள் தயார் நிலையில் வ்ட்டங்கள் (taluk levels) தோறும் இருந்திடல் வேண்டும். உயிரின் மதிப்பு அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒன்றுதானே?

ஆங்காங்கே இலவச மருத்துவ முகாம்களை நடத்தும் அன்பு உள்ளங்கள், அதற்குப் பதிலாக, நாள்தோறும் அரசு மருத்துவ மனைகளில் முழு உடல் பரிசோதனை செய்திட சிலருக்குப் பணம் செலுத்தலாம். உங்கள் பகுதியில் உள்ள ஏழை/பாழைகளுக்கு உதவலாம். உங்கள் செலவில் பலர் பயனடைவர்.உங்களுக்குச் சிரமமும் குறையும்.

அண்மையில் நெல்லூரில் நிகழ்ந்த முகாமின்போது ஏற்பட்ட கண்பார்வை பறிபோனது போன்ற சிக்கல்களையும் எதிர் கொள்ள வேண்டாம்.

நோயில்லா உடலிருந்தால் நூறுவரை காதல் வரும்" என்பதுதானே,நமது, கண்ணதாசனும் நமக்குக் கூறிச் சென்றது. உயிர் உள்ளவரை வாழ்க்கையைக் காதலித்திட ஆண்டிற்கொருமுறை
முழு உடல் பரிசோதனயைச் செய்துகொள்வது நல்லதுதானே நண்பர்களே? 

2. http://rssairam.blogspot.in/2011/01/blog-post_17.html 


இரத்த சரித்திரங்களான தியாகிகள் தினங்கள்! இந்தியா, ஈரான், அல்பேனியா, மியான்மர், ஆர்மேனியா, வியட்நாம், பனாமா, பங்ளாதேஷ், லெபனான்-சிரியா.
Posted on 4:18 AM by Sankara RamaSamy with 2 comments


இந்தியா

30-01-2011-சர்வோதய தினம்! துப்பாக்கிக் குண்டுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பலியான நாள். இந்தியாவில் தியாகிகள் தினமாக நடைமுறையில் உள்ளது. மறந்துவிட்ட ம்ஹாத்மாவை தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செய்யும் நாள்.

சுதேசி என்ற ஸ்வதேஷி, சுய ஆளுமை என்ற ஸ்வராஜ், எல்லோருக்கும் நன்மை என்ற சர்வோதயா, ஆத்ம வலிமை என்ற சத்யாகிரகம் இவையே காந்திஜியின் அஹிம்சைக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவங்கள்.

மலர்த் தூவலுடன் நின்று விடாமல், இன்றையச் சூழலில் காந்தியப் பாதையின் அவசியத்தையும், பயன்படுத்திடும் புதிய வழி முறைகளையும் சிந்தித்துச் செயல்பட்டால் இந்தியாவின் சுய ஆளுமை நிலைக்கும்.

ஈரான்

KHORRAMSHAJHR ஈரான் நாட்டின் ஓர் துறைமுக நகரம். ஈராக் நாட்டவரால் அபகரிக்கப்பட்ட நகரம். இதனை மீண்டும் தன்வசப்படுத்திய நிகழ்வு. (26-10-1980) ஆண்டுதோறும் அக்டோபர்,26- ஈரானியரது தியாகிகள் தினம்!

அல்பேனியா

QEMAL STAFA- அல்பேனியாவின் செண்பகராமன் பிள்ளை/ நேதாஜி என்று அழைக்கலாம்.அல்பேனிய இளைஞர் தலைவர். அல்பேனியாவில் பொதுவுடைமைக் கட்சியினை நிறுவியவர். அல்பேனிய தேசிய விடுதலை இயக்கப் போராளி. இத்தாலிய பாஸிச இயக்கத்தினரால் கொல்லப்பட்டவர். அல்பேனியத் தலைநகர் TIRANA-வில் ஓர் வீட்டில் கொலை நிகழ்வு.05-05-1942. அல்பேனிய நாட்டின் தியாகிகள் தினம் மே, 5.

மியான்மர்(பர்மா)

பர்மிய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எழுவர் உட்படப் பலர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான நாள், 19-07-1947. மியான்மர் நாட்டின் தியாகிகள் தினம் ஜூலை,17.

BANGALATHESH-பங்ளாதேஷ்

DHAKA மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டது, ஓர் ஊர்வலம், 21-02-1952-ல்! பெங்காலி தேசிய மொழியாக்கிடுவ்தே அவர்களது குறிக்கோள். வழக்கம்போல் காவலரின் துப்பாக்கிச் சூடு. ABDVS SALAM, RAFIQ UBBIN AHAMED, SOFIUR RAHMAN, ABDUL BARKAT, ABDUL JABBAR -உள்ளிட்ட பலர் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி. தாய் மொழிப் போராட்டம் துவக்கப்பட்ட நாள். பங்க்ளாதேஷின் தியாகிகள் தினம், பிப்ரவரி,2. மொழிப்போர் நாளாகவும் நினைக்கப் படுகின்றது.

UNESCO- ஐக்கிய நாடுகள் அமைப்பு, அனைத்துலக தாய்மொழி நாளாக பிப்ரவரி 21-ஐ, அமுல்படுத்தியது. 17-11-1999-ல் யுனெஸ்கோ இதற்கான தீர்மனத்தை ,பங்களாதேஷ் உட்பட 28 நாடுகள் ஆதரவுடன் எதிப்பு எதுவுமின்றி நிறைவேற்றியது.

அர்மேனியா (ARMENIA)

OTTOMAN EMPIRE TURKEY 1915-1923 காலக் கட்டத்தில் அர்மேனியர் மீது இனப்படு கொலைத் தாக்குதலை நிகழ்த்தியது. இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைமையில் ,அன்றைய் ஆர்மேனியர்கள் உலகம் முழுவதும் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர். பலியானோர் எண்னிக்கை இரண்டு மில்லியனுக்கும் மேல் என்பது தகவல்.ஒட்டோமன் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து அர்மேனிய அறிவுஜீவிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள், 24-04-1915. வரலாறு ரெட் சண்டே என்று கட்டியம் கூறுகின்றது ஆர்மேனியர்களது தியாகிகள் தினம், ஏப்ரல்,24.

இலங்கைத் தமிழர்களைப்போல் உலகம் முழுவதும் அர்மேனியர் பரவி உள்ளனர். அர்மேனிய இனப்படுகொலை நிகழ்வுகள் அவர்களின் நெஞ்சில் அழிக்க முடியாத வடுக்களாகத் தலைமுறைக்கும் தொடர்கின்றன.

இன்றளவும் 21-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அருங்க்காட்சியகங்கள், நினைவுத்தூண்கள், கட்டிடங்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.(1938-2010 வரை.) கடைசியாக 2010-ல் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் கீழே உள்ளது.



In 2010 was erected in Mislata (Valencia) in Spain the first monument commemorating the Armenian genocide. The sculpture, three meters high, is in the gardens of the Garden of Sendra, in the old town.


வியட்நாம்

ஹோஸிமின் நாடு என்று போற்றப் படுவது. அமெரிக்காவின் நீண்ட கால ராணுவ நேரடித் தாக்குதலால் சீரழிக்கப்பட்ட நாடு. அமெரிக்காவின் போரினைத் தனது கொரில்லா யுத்த தந்திரத்தால் எதிர் கொண்ட நாடு.

புலியை முறத்தால் விரட்டியடித்த வீரத் தமிழ் மங்கை அந்தக் காலத்தில் நிச்சயம் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தை வலுவாக்கிய மகளிரைக் கொண்ட நாடு.

அமெரிக்காவைப் புறந்தள்ளிய நாடு. வீர வியட்நாமின் போர்த்தியாகிகள் தினம், ஜுலை,27. ஜூலயைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் தெரியவில்லை.

ஒர் திரைப்படத்திற்கு வியட்னாம் வீடு என்று பெயர்வைத்ததன் மூலம், வீரத்தின் விளைநிலமாம் வியட்னாமியரின் வாழ்வாதாரத் தற்காப்புப் போர் கொச்சைப்படுத்தப் பட்டது. வியட்நாம் யுத்த பூமியாக்கப்பட்டதே அன்றி, வியட்நாமியர் கலவரம் எதுவும் செய்யவில்லை.

தமிழகத்தில் சிலர் வியட்நாம் வீடு திரைப்படத்தின் பெயரை மாற்ற முயன்றும் வெற்றிபெற முடியவில்லை.


இந்திரா அரசின் அவசரகாலப் பிரகடனத்தை ஆதரித்துச் சேர்ந்தும் செயலாற்றிவிட்டுப் பல ஆண்டுகளுக்குப்பின் எமர்ஜென்சியை ஆதரித்தது தவறு என்று நேஷனல் கவுன்சிலில் தீர்மானம் போட்டது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

அதே போன்று, வியட்நாம் வீடு படத்தின் பெயரை இப்பொழுது கூட மாற்றிக் கொண்டு அதன் தயாரிப்பாளர்கள் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம்.

வியட்னாம் வீடு சிவாஜி நடித்த வெற்றிப் படமும் கூட.

தலைமுறையையே நாசமாக்கித் தமிழ்ப் பண்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் சாராய சுனாமிக்கே அடிமையாகிவிட்ட தமிழன், திரைப்படப் பெயரிலா அக்கறை காட்டுவான்? டெலிவிஷப் பெட்டிகள் முன்னால் அமர்ந்து வேடிக்கை பார்க்கவே அவனுக்கு நேரம் போதவில்லையே ?

பனாமா-PANAMA

மத்திய அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள குடியரசு நாடு. பனாமா கால்வாய் 1904-1914 காலத்தில் அமெரிக்க ராணுவப் பொறியாளர்களால் கட்டப்பட்டது. 1979-வரை panama canel zone அமெரிக்காவின் நிர்வாகத்தில் இருந்தது. அதன் பின்னர் 1999 வரை அமெரிக்க-பனாமா கூட்டு நிர்வாகம். 1964 ஜனவரி 9-லிருந்து பனாமா குடியரசின் நேரடி நிர்வாகம். என்ணற்ற போராட்டங்கள். சிக்கல்கள்.உடன்பாடுகள் இறுதியில் இறையாண்மை உறுதிப்பாடு. இவர்களது தியாகிகள் தினம், ஜனவரி,9.

லெபனான், சிரியா


டெமாஸ்கஸ் பெருநகரத்தில் சிரியாவின் தேசியவாதிகள் பலருக்கு நிறைவேற்றப்பட்டது மரண தண்டனை. ஒட்டோமன் ஆக்கிரமிப்பாளர்களால்! 06-05-1916. இவ்ர்களது தியாகிகள் தினம் , மே, 5.


இந்து மதவெறியன் கோட்சேவின் குண்டுக்குப் மகாத்மா பலியான நாள், ஜனவரி,30. தியாகிகள் தினமாகவும், சர்வோதய தினமாகவும் சிந்திக்கப்படுகின்றது. இதே போன்று பிற நாடுகளில் ...தேடியதன் விளைவே இந்தப் பதிவு.

அர்மேனியர்கள் இனப்படுகொலைக்கு ஆளானது இலங்கைத் தமிழர்களை நினைவூட்டுகின்றது.

முள்ளி வாய்க்கால் உலகத் தமிழர்களிடம் ஏற்படுத்திய கொதிப்புணர்வின் குறியீடு என்று முழங்குகின்றது, தென் ஆசிய செய்தி மடல். அவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த 19 தியாக தீபங்களுக்கு தஞ்சைத் தரணியில் வருகின்ற மே மாதம் 17- திகதி நினைவுச் சின்னம் அமைக்கின்றது, பழ.நெடுமாறனைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பு.(17-05-2011).

அர்மேனியர்களைப் பின்பற்றி நெஞ்சங்களை ஆற்றுப்படுத்திட உலகம் எங்கும் எழுப்பப்போகும் நினைவுச் சின்னங்களின் ஆரம்பம்தான் தஞ்சை என்ற எண்ணமே இதயத்தில் தோன்றுகின்றது.

என் வலைப்தகவலைப்பூ வழிகாட்டி மறைந்த பாசிட்டிவ் அந்தோணி முத்து இருந்திருந்தால், இந்தப் பதிவினை நிச்சயம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டியிருப்பார்.

அதிகாலை இரண்டு மணியிலிருந்து நெட்டில் சேகரித்த தகவல்கள் இவை. இப்பொழுது நேரம் காலை 09.03 நிமிடங்கள். எனது ஆறு மணி நேர உழைப்பின் வெளிப்பாடு இந்தப் பதிவு. சிறப்புத் தகவல்கள்
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
This entry was posted in : சிறப்புத் தகவல்கள்
Newer Post Older Post Home
2 comments:

    மு.சிவலிங்கம்January 19, 2011 at 12:16 PM

    அன்புத் தோழருக்கு,

    ஆறு மணி நேரத்தில் நீங்கள் தொகுத்துத் தந்த விவரங்களைக் கொண்டு அறுநூறு பக்கங்களில் ஒரு வரலாற்று நூலே எழுதி விடலாம். பலரும் அறிந்திராத வரலாற்று நிகழ்ச்சிகள். பல நாடுகளில் உன்னத லட்சியங்களுக்காக இன்னுயிர் ஈந்தவர்களின் வரலாற்றைத் தொகுத்துப் படிக்கும்போது நெஞ்சு நிறைகிறது. இணையமும் வலைப்பதிவுகளும் குப்பை கூளங்களாய் ஆகிவரும் இந்நாளில் அதில் புதைந்து கிடக்கும் மாணிக்கங்களைத் தோண்டியெடுத்து வலைவாசிகளுக்கு காணிக்கையாக்கிவரும் உங்கள் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    தோழமையுடன் மு.சிவலிங்கம்.
    Reply
    சீராசை சேதுபாலாJanuary 19, 2011 at 12:28 PM
(Continued)
Interview: Innaiyaveli

    








No comments:

Post a Comment