Thursday 27 September 2012

ஒரு தூரிகையும் மூன்று சிகரங்களும்



                               ஆ,செந்தமிழ்ச்செலவன்
நல்லாண் பிள்ளை பெற்றாள் .. என்ன ஒரு பெயர்! அப்படி ஒரு கிராமம் 
செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில்  கடலாடி குளம் என்று ஓர் ஊர் வருகிறது அங்கே  ஒரு கூட்டுச் சாலை .. அங்கிருந்து மேற்கே 
 6 கி.மீ சென்றால் வருகிற ஊர்  தான்நல்லாண் பிள்ளை பெற்றாள் .. வீட்டுக்கு வீடு ஆசிரியரகளாகவே  உள்ள அந்த ஊரில்  தமிழாசிரியரின் மகனாகப் பிறந்தவர் ஆ,செந்தமிழ்ச்செலவன் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல ஓவியர் தமிழ். 
இன்று தமிழகத்தில் இவர் கைவண்ணம் பெற்று வெளிவராத மாத வார மற்றும் “தின ஏடுகள இல்லை என்று கூறத்தக்க அளவில் இவர் வரையும் ஓவியங்கள் எல்லா ஏடுகளையும் அலங்கரிக்கின்றன. அடக்கம்,எதையும் புன்னகையோ டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், நட்புக்கு மரியாதை தரும் பண்பு என்று, அயராமல் உழைத்துப் படிப்படியாக வளரும் இவரைச்சினிமா வாய்ப்பு தானே தேடி வந்தது 
இயக்குநர் திலகம் ஷங்கர் தயாரிக்க இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் நடிக்க அதற்கு வசனம்  எழுதவும் உதவி இயக்குநராகப் பணியாற்றவும் ஒரு வாய்ப்பு இவருக்கு இரட்டைச்சுழி  படத்தை இயக்கிய தாமிராவால் கிடைத்தன இந்த நண்பர்கள் ஏற்கனவே கன்னடப் படம், சின்னத்திரை என்று இணைந்து  பணியாற்றியவர்கள் .இதுவரை சினிமா உலக வரலாற்றில் ஓர் ஓவியருக்கு இப்படி ஒரு படமும் இத்தகைய மோதிரக்கைகளால் குட்டுப்படும்  அறிமுகமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்  தான் . தமிழ் சினிமா மட்டுமல்ல  இந்திய சினிமா ஏன் உலக சினிமாவிலும் கூட ஓர் ஓவியருக்கு இத்தகைய பங்களிப்பு கிட்டவில்லை என்று துணிந்து கூறலாம்.  
அவரது அனுபவங்களைப் பற்றிக்கேட்டபோது 
“ நான் சந்த மாமா பப்ளிகே கஷன்ஸ் நடததிய பொம்மை மற்றும் மங்கை பத்திரிகைகளுக்கு ஓவியராகஇருந்தேன்  . அங்கே தாமிரா பணியாற்றி னான்.அவன் சின்னத்திரை டைரக்டர் ஆவான் என்று  எதிர்பார்க்கவில்லை 
பெரிய திரை டைரக்டர் ஆவான் என்று நானோ  என்னை உதவி இயக்குநராக்கி வசனம்  எழுத வைத்து சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பெயர் வாங்கித்தரப் போகிறான்  என்று அவனோ  ஒரு நாளும் கனவு கண்டதில்லை
பின்னாளில் தாமிராவுக்கு அமைந்த அறிமுகங்கள் சின்னத்திரைக்கும் கன்னடத்தில் பெரிய திரைக்கும் அழைத்துச் சென்றன. வாய்ப்புக்கள் வரும்போதெல்லாம் என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களில் என்னையும் அவன் பங்கே கற்க வைப்பான்.
ஜெயா டிவியில் தொடராக வெளிவந்த 'அண்ணி' சன் டிவியில் தொடர்ந்த மனைவி விஜய  டிவியில் காவ்யா என்ற சின்னத்திரைத் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம், 
அமிதாப் பச்சன் கௌரவவேடத்தில் நடித்து 100 நாட்கள் ஓடிய அமிர்த தாரை என்ற கன்னடப் படத்தில் திரைக்கதை என்று என்னை அறிமுகப்படுத்திய தாமிரா ஒரு நான் டீக்கடைச் சந்திப்பில்  இரண்டு மாபெரும் டைரக்டர்களை நடிக்க வைத்து ஒரு மாபெரும் டைரக்டர் தயாரிக்க இருக்கும் கதையைத் தான் இயக்கும் வாய்ப்புக்கான ஒரு கதையை என்னிடம் சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது இடையிடையே நான் சொன்ன விமர்சனங் களைக் கேட்டு  நீயே இதற்கு திரைக்கதை வசனம் எழுது என்றான் . தயக்கத்தோடு எழுதி முடித்தேன் பரீட்சை எழுதிவிட்டு பயத்தோடு  ரிஸல்ட்டுக்குக் காத்திருப்பது போலக் காத்திருந்த எனக்குக் கிடைத்தது அவரது கைகுலுக்கல்.
அடுத்த கட்டம் எப்படி காட்சி அமைப்பது என்ற விவாதம். என் ஓவியத் தொழில் எனக்குக் கை கொடுத்தது. காட்சிகளை ஸ்டோரி   போர்டு மூலம் ஓவியங்களாக வரைந்து காட்டினேன்.
(பின்னாளில் சத்யஜித் ரே  அழியாப் புகழ் பெற்ற தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின்  ஒவ்வொரு காட்சிகளையும் சித்திரங்களாக வரைந்து கொண்டு செயல்பட்டார் என்பதை எழுத்தாளர் வையவன் அவர்கள் மூலம் அறிந்தேன்)மூன்று டைரக்டர்கள் கைக்குச் சென்ற என் ஓவிய வடிவ 
ஸ்டோரி போர்டு  வசனம் எழுதுவதோடு உதவி டைரக்டராகவும் இருக்கப் பணித்தது. ஏற்றுக் கொண்டே ன்.
ரெட்டைச்சுழி  மக்கள் மத்தியில் வரவேறபுப் பெறவில்லை.  ஆனால் எனக்கு  பள்ளிக்கூடமாக அமைந்தது. குண்டூசி முதற்கொண்டு படப்பிடிப்பிற்குத் 
கே .பி அவர்களின் கவனக்கூர்மை. கதைக்கும் காட்சிக்கும் தேவையான தகவலை உரிய நபரிடமிருந்து பெற்ற பிறகே காட்சிப்படுத்தும் முன் யோசனை ஒரே  இடத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சுறுசுறுப்பு . அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிற  ஒவ்வொரு கணத்திலும் கற்க வைக்கும் மனித ஆளுமை ஆகியவை எனக்கு ஒரு வகுப்பாயின.
அடுத்துத் திண்ணையில் துண்டு விரித்துதூங்கக் கூடத்  தயங்காத பாரதி ராஜா அவர்களின் மாறாத கிராமீயப் பண்பு." நீ இந்த வேலைய்ச்செய் " என்று எவரையும் ஏவி விட்டுச் சும்மா  நிற்காமல் தா@ம களத்தில் இறங்கிக் காட்சிப் படுத்தும் அவரது இயற்கையான மேன்மை மற்றொரு வகுப்பு 
கோடிக்கணக்கில் பணம் கொட்டி எடுக்கும் படம் திறன் உழைப்பு எல்லாம் வே வண்டிய இடம் ரசிகனின் ரŒனை என்பதை ஒரு கணமும் மறவாத ஷங்கர் அவர்கள் கொஞ்சம் கூடப்  பெருமை பாராட்டாமல் உடன் பணியாற்றும் அனைவரிடமும் நேரடித் தொடர்பில்,நேசத்தோடு  கலந்து பேசுவதால் அவரது கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் பணியாற்றுகிறோம் என்ற எண்ணமே ஒரு பலமாகவும் எச்சரிக்கை கலந்த பாதுகாப்பாகவும் இருக்கும் 



No comments:

Post a Comment