Wednesday 29 April 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி -2


ஜெயகாந்தனும் நானும் 
தேவபாரதி 
ஜெயகாந்தனை நான் முதன்முதலில் சந்தித்தது 1961 ஆகஸ்டில் ஒரு நாள். தேதி நினைவில்லை. இடம் நினைவிருக்கிறது. கன்னிமாரா நூலகத்திற்குப் போக ஜெயகாந்தன் குடியிருந்த 26, எழும்பூர் ஹைரோடு வீட்டிற்கு அருகே ஒரு பின்வழி உண்டு.. அங்கு நானும் என் நண்பரும் அற்புதமான கவிஞருமான   தமிழ் ஒளியும் வந்து கொண்டிருந்தோம். ஜெயகாந்தன் தம் வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார். தமிழொளியைப்  பார்த்து அவர் தம் ஆட்காட்டி விரலை உயர்த்தி ஆட்டிக்காட்டினார். தமிழொளியும் அவ்வாறே ஆட்டிக்காட்டினார். நான் புதிர் விளங்காமல் இருவரையும் மாறிமாறிப் பார்த்தேன். 
                                                        
[‘வந்த விடுதலை யாருக்கென்றே அதை வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம் நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?’ என கேட்டு 1947லேயே கேள்வி தொடுத்தார்.தமிழ் ஒளி
‘கண்ணின் கருமணியே காசினிக்கு மாமணியேகண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக’ என்று மேதினத்தை முதலில் தமிழில் நெடுங்கவிதையாகப் பாடியவரும் தமிழ்ஒளிதான்.‘காதெலாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று’ 1947ல் எழுதிய வீராயி காவியத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது. இந்த காவியம் தலித் மக்களைப் பற்றி தமிழில் பதிந்த முதல் காவியம்.பஞ்சம் பிழைக்க கிழக்காசிய நாடுகள்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தலித் மக்கள் படும் வாதைகளை பாடும் காவியம் ]



அது தான் அவர்கள் பரஸ்பரம் வணக்கம் செய்து கொள்ளும் வழக்கமான சமிக்ஞை என்று பின்னால் விளங்கியது 
சற்று நேரம் பேசியதும் "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகில் இருந்த பங்கஜ விலாஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் சிரிக்கச் சிரிக்க அன்னியோன்னியமாக பேசிக்கொண்டிருந்ததை நான் மௌனமாகக் கவனித்தேன்.குள்ளமான பேண்டும் சட்டையும் போட்டு இன் பண்ணியிருந்த  தோற்றமும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிமிர்வும் என்னைக் கவர்ந்தன.
தமிழொளி "இவரும் எழுத்தாளர்.காலடிப்பேட்டையில் இருக்கிறார் " என்று அறிமுகம் செய்தார்.
அப்போது கூட என் சுபாவமான கூச்ச உணர்வால் அவர் யார் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை.
"வீட்டுக்கு வாங்க ஒரு நாளைக்கு" என்று கூறிவிட்டுப் பில் கொடுத்தார். நாங்கள் கூட இறங்கி நடந்தோம். 26, எழும்பூர் ஹைரோடு வீட்டைக் காட்டிவிட்டு விடை பெற்றார். 
"இவர் யாருங்க?" என்று அவர் விடைபெற்றபின் நான் கேட்டேன்.
"அட.. உனக்குத் தெரியும்னு நெனச்சேம்பா!" என்று வியந்து விட்டு "இவர் தாம்பா ஜெயகாந்தன்" என்றார்.
அப்போது நான் சந்தித்த மனிதர் மீது ஏற்கெனவே இருந்த மதிப்பு கூடியது. 
அது சரஸ்வதி பத்திரிகையில் அவர் எழுதிய கதைகளைப் படித்ததாலும் அவர் அந்தப் பத்திரிகையில் சென்னைக்கு வந்தேன் தொடர்ப் பகுதியில் அவர் தம் அனுபவத்தை எழுதியதாலும் உண்டான மதிப்பு. 
அடுத்த வாரமோ அதற்குப்பின்போ நான் அவரைச் சந்தித்தேன். அந்த வீட்டின் முன்பகுதியில் எதிர் எதிராக இரு குறுகிய திண்ணைகள். உட்கார்ந்து பேசினோம் ..பேசிக்கொண்டே இருந்தோம்.சாப்பாட்டு நேரம் வரவே அவரது தாயார் வந்து "காந்தா, சாப்பிட வாப்பா" என்று அழைத்தார்.
"இதோ இவரும் என்னோட சாப்பிட வருவார்" என்று அறித்தார். 
"அதுக்கென்ன.. வரட்டுமே!" என்று அன்போடு கூறிவிட்டு அவர் உள்ளே சென்றார். 
இப்படித் தொடங்கியது எங்கள் நட்பு. 
பின்னாளில் அது படிப் படியாக வளர்ந்து அவரது நெருங்கிய வட்டத்தில் நானும் ஒருவனாகுமளவு  வளர்ந்தது. பல கருத்துவேற்றுமைகள்.  முகத்தில் அடித்தாற்போல் பேசும் அவரது வெளிப்படையான பேச்சு இவற்றினால்  எங்கள் நட்பு பாதிக்கப்படவில்லை. 
1961 டிசம்பரில் ஆனந்த விகடனில் என் சிறுகதை முத்திரைக் கதையாக வெளிவந்து பிறரால் கவனிக்கப்படும் அந்தஸ்து எனக்குக் கிட்டியது.
"நான் தான் உங்க பேரிலே எழுதறேன்னு விகடன் துணை ஆசிரியர் மணியன் நினைக்கிறார். நீங்க  போய் அவரைப் பார்த்துட்டு வாங்க" என்று அருகாமையில் இருந்த  மணியனின் சேட் காலனி வீட்டுக்குப் போய்ப் பார்க்கச்சொன்னார். மணியனுக்கும் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அடிக்கடி எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார்.
அவர் உன்னைப் போல் ஒருவன் படத்தை எடுக்கும்போது "பாரதியார், நீங்க தான் இதற்கு ப்ரொடக்ஷன் மேனேஜர்" என்றார்.எனக்கு மறுக்கத் தோன்றவில்லை. எனக்கும் வேலை இல்லாத காலம் அது. கம்பெனிக்கு ஆசிய ஜோதி பில்ம்ஸ் என்று பெயர் வைத்தார்கள் . படம் வளர்ந்து வெளியிடப்பட்டு வரலாறாகியது .அடுத்து யாருக்காக அழுதான். அந்தப்படத்திலும் என் பங்கேற்பு தொடர்ந்தது.அது வெற்றி பெறவில்லை. எனினும் ஜெயகாந்தனின் செல்வாக்கு உயர்ந்தது. அதன் காரணமாக  ஒரு டாகுமெண்டரி தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது . எங்கள் நட்பில் ஒரு சிறு விரிசல் விழுந்தது .இரண்டு ஆண்டுகள் நான் அவரைச் சென்று காணவில்லை. 
நண்பர் ஜெயகாந்தனின் ஆசிய ஜோதி பிலிம்ஸில் நான் பணியாற்றிய போது யாருக்காக அழுதான் என்ற படத்தில் என்னோடு வேலை செய்த டைரக்டர் K.சுப்பிரமணியத்தின் இளைய குமாரர் ரமணனும்எடிட்டர் K.செல்வராஜூம் எனக்கு நண்பர்களாயினர்அவர்கள் ஒரு படமெடுக்கிற முயற்சியில் இருந்தனர்.
அபிராமபுரத்தில் சுடர்க்கொடி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருந்தார்கள்தங்குவதற்கு இடமும்வேலையுமில்லாமல் இருந்த நான் செல்வராஜை போய் சந்தித்தேன்.
பாரதியார் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்ஓரிரு மாதத்தில் நான் படத்தை ஆரம்பித்து விடுவேன்அதுவரை நீ இங்கேயே தங்கிக்கொள்ளலாம்சாப்பாட்டை நான் கவனித்துக்கொள்ளுகிறேன்.
அவர் சொன்னவாறே இரண்டு மாதங்கள் கழித்து, T.R.மகாலிங்கத்தையும்சௌகார் ஜானகியையும் வைத்து ‘திருநீலகண்டர்’ என்ற படத்தைத் தயாரித்தார்நான் நிர்வாகம்.
அந்தச் சமயங்களில் திருப்பூரிலிருந்து எங்கள் அலுவலத்துக்கு வந்து போயிருந்த சின்னராமலிங்கம் என்பவர் எனக்கு நண்பரானார்.
பேச்சுவாக்கில், "பாரதியார் நானும் கூட ஒரு படம் தயாரிக்க விரும்புகிறேன்ஆனால் பணம் என்னிடம் கிடையாதுவீட்டுப் பத்திரத்தை வேணுமானால் அடகு வைத்து படம் எடுக்கலாம்பிறகு மூட்டுக் கொள்ளலாம்!" என்றார்.
அப்போது நான் ‘சத்திரமும் சபிக்கப்பட்டவர்களும்’ என்று கைவசம் ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன்
இதைப் படம் எடுக்க முயற்சிக்கலாமே என்ற யோசனையில் எனக்கும் செல்வராஜுக்கும் பொதுவான நண்பராக இருந்த தனசேகரிடம் இது குறித்துப் பேசினேன்தனசேகர் சொன்னார்என் மாமா ஒருவர் இருக்கிறார்அவர் சினிமா சம்பந்தப்பட்டவர்அவர் மூலம் பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொள்ளலாம்முதலில் நாம் ஒரு அலுவலகத்தைத் திறப்போம்அப்புறம் சின்னராமலிங்கத்தின் பத்திரத்தை வைத்து மாமா மூலம் பணம் ஏற்பாடு செய்துகொள்வோம்ஆபீஸ் ஆரம்பிப்பதற்கு நான் பத்தாயிரம் தருகிறேன் என்றார்.
நானும் நண்பர் தனசேகரும் கையில் பத்தாயிரத்துடன் அலுவலகம் தேட ஆரம்பித்தோம்.
ஆழ்வார்பேட்டைராமசாமி நாயக்கன் (இப்போது ராமசாமி தெருதெருவில் 46ம் எண்ணுள்ள ஒரு வீட்டின் மாடி காலியாக இருக்கிறது என்று சொன்னார்கள்போய் பார்த்தோம்எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதுஅந்தத் தெரு மௌபரீஸ் ரோட்டை ஒட்டி இருந்த சின்னத் தெருஇந்தத் தெரு தொடங்கும் இடத்தில் ஓர் அழகிய பிள்ளையார் கோயில்கவிழ்ந்த நிழல் பரப்பி நிற்கும் பெரிய அரசமரம் கோயிலுக்கு குடை பிடித்து நிற்கும்மாதவாடவை 130 ரூபா இரண்டுமாக வாடகை முன் பணம்கையில்தான் பணம் இருக்கிறதே!
.நானும் தனசேகரும்படத்தை இயக்கப் போகிற நண்பர் K.விஜயனும்தன சேகரின் மாமாவும் போய் எங்கள் கம்பெனிக்கு நாங்கள் சூட்டியிருந்தஅம்மா புரடக்ஷன் என்ற பெயர் பலகை வைத்துப் பூசை போட்டோம்.
மறு நாள் காலை 10 மணிக்கு நாங்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்தோம்அலுவலகத்துக்கு சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது.
ஆகவே தனசேகரின் காரில் பாண்டி பஜாருக்குப் போனோம்அகஸ்மாத்தாக எனது நண்பர் ஜெயகாந்தனை அங்கே சந்தித்தேன்.
ஆசிய ஜோதி பிலிம்ஸ் சார்பில்உன்னைப் போல ஒருவன்யாருக்காக அழுதான்என்ற படங்களுக்குப் பிறகுஅரசாங்கத்துக்காகநேற்று – இன்று – நாளை என்கிற டாக்குமென்ட்ரியை நாங்கள் தயாரித்த போது ஒரு சிறு மன வருத்தத்தில் அங்கிருந்து நான் ஜெயகாந்தனைப் பிரிந்து நான் வந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் பாண்டி பஜாரில் நான் ஜெயகாந்தனை சந்திக்கிறேன்.
"எங்கே பாரதியார்இங்கே?" என்றார் ஜே.கேஒரு படம் எடுப்பதற்காக ஆபீஸ் எடுத்திருக்கிறோம்சில சாமான்கள் வாங்குவதற்காக இங்கே வந்தேன்.
ஆபீஸ் எந்த இடம்?
ஆழ்வார் பேட்டை ராமசாமி நாயக்கன் தெருவில்
ஒரு நாளைக்கு வாருங்கள் ஜே.கே
வர்றேன் பிறகு எங்கள் வேலையாக நான் அவரிடம் இருந்து விடை பெற்றேன்
பாண்டி பஜாரில் எங்கள் வேலையை முடித்துக் கொண்டு எங்கெங்கோ எங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இரவு நாங்கள் அலுவலகம் போய் சேர்ந்தோம்.
அங்கிருந்த சில தோழர்கள் வந்து சொன்னார்கள். "உங்களைப் பார்க்க ஜெயகாந்தன் வந்து போனார்".
அன்றைக்கேஅவர் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் காலையில் தான் அவருக்குப் போன் செய்தேன்.
"ஜே.கேநான் நேற்று வருவதற்கு இரவாகிவிட்டதுநீங்கள் வருவது தெரிந்திருந்தால் நான் இருந்திருப்பேன்."
"நாளைக்குப் பதினொரு மணிக்கு இருப்பாயா?"
"வாங்க ஜே.கே நான் இருக்கிறேன்".
மறுநாள் காலை அவர் சொன்ன மாதிரியே பதினொரு மணிக்கு வந்துவிட்டார்.
எங்கள் அலுவலகத்துக்குக் கீழே மோகன் என்பவரின் டீக்கடைமேலே இருந்து குரல் கொடுத்தால் போதும்.
நான் டீ சொன்னேன்.
நாங்கள் டீ சாப்பிட்டவுடன்நான் ஏற்கனவே தீர்மானித்தபடி ஜே.கே.யின் கையில் ஒரு சாவிக் கொத்தைக் கொடுத்தேன்மூன்று சாவிகள் அடங்கியது.
ஜே.கேநீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்படவேலையாக நாங்கள் அங்கே இங்கே போயிருந்தாலும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை
ஏறக்குறைய இந்த சாவிக்கொத்தை கால் நூற்றாண்டு காலம் அவர் வைத்திருந்தார்.
எப்போதும் அந்த அலுவலகம் பெரும்பாலும் திறந்தே இருந்ததுநண்பர்களும் அன்பர்களும் எங்களை சூழ்ந்தே இருந்தார்கள்.
இன்னார் இனியர் என்று இல்லாமல் அடையா நெடுங்கதவாக அந்த அலுவலகம் புழங்கியதால் – அது மடம் என்று பெயர் பெற்றது. அங்கே தான் ஜேகே என்று தமிழகமே அழைக்கும் அளவு அந்தஸ்தின் உயரத்தை அவர் பெற்றார். [தொடரும்] 

No comments:

Post a Comment