Monday 13 May 2013

அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம்


அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம்
கௌதம நீலாம்பரன் 

 மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாபெரும் வீரன். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று வரலாறு இவனைப் புகழ்ந்துரைக்கிறது.

சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெரும் புகழுக்குச் சொந்தக்காரனான இந்த சுந்தர பாண்டியன், சோழ நாட்டையே நிர்மூலம் செய்து விடுமளவிற்கு ஆவேசம் கொண்டவனாக இருந்தான். சோழ பூமியே இவன் வரவுகண்டு நடுநடுங்கியது. சோழ நகரங்கள் ஒவ்வொன்றும் மண்மேடாக்கப்பட்டன. குறிப்பாகத் தஞ்சையும் உறையூரும் பேரழிவைக் கண்டன. அங்கு இருந்த மாடமாளிகைகள் ஒவ்வொன்றும் இடித்து நொறுக்கப்பட்டன. சோழ அரண்மனைகள் பலவும் இடிபட்டன. அவற்றிலுள்ள தூண்கள் எல்லாம் உடைத்துப் பொடியாக்கப்ட்டன.

ஆனால், கண்மூடித்தனமான ஆவேசத்துடன் சோழ நாட்டில் அதாகதம் செய்து கொண்டிருந்த சுந்தரபாண்டியன், ஓரிடத்தில் நின்று தலை வணங்கினான் என்றால், அது எத்தனை ஆச்சரியம். அந்த இடம் ஒரு மண்டபம். அங்கேதான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் தமிழ்ப்புலவருக்கு, அவர் தன்னைப் புகழ்ந்து ‘பட்டினப்பாலை’ என்னும் நூலை இயற்றியமைக்காகப் பதினாறு நூறாயிரம் (பதினாறு லட்சம்) பொற்காசுகளைப் பரிசாக வழங்கினான் கரிகாற் பெருவளத்தான். இந்தப் பட்டப் பெயரே கூட அம்மன்னனுக்கு அப்புலவர் வழங்கியதுதான்.

இச்செய்தியை அறிந்த சுந்தரபாண்டியன், அந்தப் பதினாறு கால் மண்டபத்தை யாரும் இடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டான். பழிவாங்கத் துடித்து நடத்திய போரில்கூட பாண்டியனின் பைந்தமிழ்ப் பற்றை எண்ணினால், நம் நெஞ்சம் பூரிக்கிறதல்லவா?

இத்தனைக்கும் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். உருத்திரங்கண்ணனார் புகழ்ந்து பாடியதோ ஒரு சோழ மன்னனை. காவிரிக்குக் கல்லணை கட்டி, சோழ பூமியை வளங்கொழிக்கச் செய்த கரிகாலன், தன்னைப் புகழ்ந்த ஒரு புலவரைக் கௌரவித்த மண்டபம்தான் அது. இருப்பினும் அது தமிழைப் போற்றிய இடம் என்பதாலேயே, தலைசிறந்த இடமாக, தலைவணங்க வேண்டிய இடமாக எண்ணியிருக்கிறான் சுந்தரபாண்டியன்.

அவனுடைய இந்த உயரிய பண்பைப் போற்றுவதோடு, அந்த சம்பவத்தை நமக்கு இன்றைக்கும் எடுத்துரைக்கிறது திருவெள்ளறை ஆலயக் கல்வெட்டு
.
வெறியார் தவளத் தொடைச் செய மாறன்
வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரிநாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை; கண்ணன் செய்
பட்டினப்பாலைக்கு அன்று
நெறியால் விடும் தூண் பதினாறுமே
அங்கு நின்றனவே!

சுந்தரபாண்டியன் கடுங்கோபத்தோடு சோழ நாட்டைப் பாழ்செய்து, கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைதான் (இது எதிரியின் இடத்தை மிகவும் அவமதித்து, அழிக்கிற ஒரு செயல்) என்ற போதும், அவன் தமிழையும் ஆன்மிகத்தையும் மிகமிக மதித்தான். ஆலயங்கள் எதனையும் அவன் சிதைக்கவே இல்லை. அவன் கோபமெல்லாம் மன்னர்கள், தளபதிகள், உயர்நிலை அதிகாரிகள் மீதே இருந்தது. அவர்கள் வசித்த உயரிய மாளிகைகளையே அவன் இடித்துத் தரைமட்டமாக்கினான். ஆலயங்களையோ, கல்விக் கூடங்களையோ, ஏழை எளிய மக்கள் வாழும் குடிசைகளையோ அவன் நிர்மூலமாக்க முனையவே இல்லை.

மாறாக, சுந்தரபாண்டியன் சோழநாட்டு ஆலயங்கள் பலவற்றிலும், திருப்பணிகளையே மேற்கொண்டான். அதிலும் தஞ்சை, தில்லை, திருவேங்கடம், திருவரங்கம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு அவன் வாரி வழங்கிய கொடையும் செய்த திருப்பணிகளும் அனந்தம்.


வெற்றி வீரனான சுந்தரபாண்டியன், திருவரங்க ஆலயத்திற்கு அள்ளிக்கொடுத்த செல்வங்களை அறியும்போது, அவனுடைய பக்தி கண்டு நம் நெஞ்சம் பூரிக்கிறது; மெய் சிலிர்க்கிறது; வியப்பில விழிகள் விரிகின்றன.
பாண்டியர்கள் சந்திரகுலத்தவர்கள் என்பது வரலாறு. ‘சமஸ்த ஜகதார சோமகுலத்திலக’ எனச் சாசனங்களால் புகழப்படுபவனும், ‘எம்மண்டலமும் கொண்டு கோயில் பொன்வேய்ந்த பெருமாள் சுந்தர பாண்டியத்தேவர்’ என்று சிறப்பு விருதுகளால் கொண்டாடப்படுபவனும் சேரர், சோழர், தெலுங்குச் சோழர் - காகதீயர்-காடவர்-போசளர் ஆகியோரை வெற்றி கொண்டவனுமான சுந்தரபாண்டியன் திருவரங்கம் ஆலயத்திற்கு நான்கு விதிகளில் இருபத்து நான்கு துலாபுருஷ மண்டபங்கள் கட்டுவித்து, அவற்றில் அமைக்கப்பெற்ற பிரமாண்ட துலாக்கோலில் ஏறியமர்ந்து, தன் எடைக்கு எடை பொன்னையும் நவமணிகளையும் வாரி வழங்கினான்.
 
---------------------------------------------------------------------------------------------------------

சமையல் முடிந்தது

சமையல் முடிந்தது 
சமையல் முடிந்துப்
பரிமாறிச் சாப்பிட்ட நினைவோடு
கைகழுவி மறக்க
விடமாட்டார்கள் விமர்சன
விற்பன்னர்கள்.
என்னென்ன ஐட்டத்தில்
என்னென்ன குறைநிறை
சமுதாயப் பார்வை
எப்படித் தப்பித்தப்பி உப்புக்குப்
பதிலாய் உறைப்பைக்
கூட்டியது அல்லது குறைத்ததென
விமரிசையாக விளம்பாவிட்டால்
அவர்களுக்கென்ன மரியாதை?
ஆனால் அவர்கள் சொல்லி
இவர்கள் சொல்லி
அடுத்த சமையல்
மாறுவதே இல்லை.
ருசி மாற்றத்திற்காகச்
சமைப்போர் சமைக்கிறார்கள்
சாப்பிடுவோர் சாப்பிடுகிறார்கள்
விமர்சகர்கள் விளம்புகிறார்கள்.
ஓஹோ, அப்படியாவென்று
கேட்டபடி வந்தவர்கள்
அகல்கிறார்கள் வந்தவழியில்.
விமர்சகர்வேறு குறி  பார்க்கிறார்.
விமர்சிக்காவிட்டால் அவர்
விமரிசகராக இருக்கமுடியாது.
சிலர் சமைக்கிறார்கள்
பலர் சாப்பிடுகிறார்கள்
சிலர் சாப்பிட்டுவிட்டு
விமரிசகர்களாக ஜீவிக்கிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
From:     vaiyavankavithaigal.blogspot.com

இவ்வளவு செல்வங்களைத் ‘துலாபாரம்’ செய்தும் சுந்தரபாண்டியனுக்குப் போதும் என்று தோன்றவில்லை. தான் மட்டும் துலாத் தட்டில் ஏறி நின்று அறக்கொடை வழங்குவதா? தன் வெற்றிகளுக்கெல்லாம் துணை நின்ற பட்டத்து யானையோடல்லவா நாம் துலாத்தட்டில் ஏற வேண்டும் என்று எண்ணினான்.

ஆம்; அரசன் என்றால், அவன் பட்டத்து யானை மீது ஏறி நகருலா வரும் கம்பீரமான காட்சிதானே எவர் நினைவிலும் எழும்?

ஆனால், யானையை ஏற்றி நிறுத்தக்கூடிய துலாக்கோல் எங்கே இருக்கிறது?

சுந்தரபாண்டியன் யோசித்தான். அவனுக்கு ஒரு புதுமையான யோசனை தோனறியது.

ஒரே அளவுடைய இரு படகுகள் தயார் செய்யப்பட்டன. அவை தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டன. பிறகு அவ்விரு படகுகளையும் காவிரியில் மிதக்கவிடச் செய்த சுந்தரபாண்டியன், தன் பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி நிறுத்தி, அதன்மீது தானும் அமர்ந்து கொண்டான். இந்தப் படகு எந்த அளவுக்கு நீரில் அமிழ்ந்ததோ, அந்த அளவு அதாவது படகு அமிழ்ந்த நீர்மட்டம் படகில் குறிக்கப்பட்டது. இதே அளவு காலியாக இருந்த இன்னொரு படகில் குறிப்பிடப்பட்டது. பிறகு இந்த இரண்டாவது படகில் தங்கம், நவரத்தினங்கள், ஆபரணங்கள் என்று பொற்குவியல்கள் நிரப்பப்பட்டன. இந்த பொக்கிஷப் படகில் குறிக்கப்பட்ட எடைக் கோடு, நீர் மட்டத்துக்கு சரியாக வர, இந்தப் படகு, பட்டத்து யானை ஏறிய படகின் எடைக்குச் சமம் என்றாகியது! (ஆர்க்கிமிடீஸின் பௌதிக தத்துவத்தை அவர் அதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்ட காலத்திற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழன் ஒருவன் கண்டுபிடித்ததோடு, செயல்படுத்தியும் காட்டிவிட்டான்!) பிறகு அவ்விரு தங்கப் படகுகளும் பட்டத்து யானையின் எடை அளவுக்குக் குவிக்கப்பெற்ற பொன், முத்து, வைரக் குவியலும் அப்படியே திருவரங்கம் ஆலயத்துக்கு அளிக்கப் பெற்றன.

சுந்தரபாண்யடின், அரங்கனுக்கு அளித்த இந்தத் துலாபார அர்ப்பணிப்பு உலக அதிசயங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை. வேறெங்கும் காணமுடியாத, வேறெவரும் செய்திராத  ‘அறக்கொடை’ இதுவென்று எண்ணும்போது, நாம் மகிழ்ச்சிப் பரவசப்படலாமல்லவா?

இவ்வளவு அறக்கொடைகள் வழங்கியும் இம்மன்னனின் ஒரு கோரிக்கையை அரங்கன் ஆலய நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர் என்பது இதனினும் ஆச்சரியமூட்டும் செய்தியாகும்.

வேறொன்றும் இல்லை, அரங்கன் சந்நிதியினுள் அரங்கனை வணங்கியபடி தான் இருக்கும் கோலத்தில் ஓர் உருவச் சிலையை வைக்க விரும்பினான் சுந்தரபாண்டியன். இதை அனுமதிக்க முடியாதென்று மறுத்து விட்டனர் அந்த அதிகாரிகள்.

சுந்தரபாண்டியனின் ஆசையோ, கோரிக்கையோ அப்படியொன்றும் அதீதமானதல்ல. தமிழ்நாட்டில், பல ஆலயங்களில் அவற்றிற்குத் திருப்பணி செய்த மன்னர்களின் திருவுருவச் சிலைகள் இடம் பெற்றிருப்பது நாம் இன்றளவும் கண்டு மகிழத்தக்கதாகவே உள்ளன. சுந்தரபாண்டியன் சிலையும் வேறுபல ஆலயங்களில் இருப்பது உண்மை. பின் ஏன் திருவரங்க ஆலய நிர்வாகிகள் மறுத்தனர்?

‘இவன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தவன்தானே? மாபெரும் அழிவுகளை நிகழ்த்தியவன் தானே?’ என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாமோ, என்னவோ! எதுவாயினும், அவர்கள் துணிவைப் பாராட்டுகிற அதே வேளையில் சுந்தரபாண்டியனின் பரந்த மனப்பான்மையையும் பெருந் தன்மையையும் எண்ணிப் போற்றத்தான் வேண்டியிருக்கிறது.
அதிபயங்கரனாக அவனை எண்ணி எதிரி நாட்டு மன்னர்களெல்லாம் நடுங்கிக் கிடக்கும் நிலையில், அவன் மட்டும் நீதி, நேர்மைப் பண்புகளைப் புறந்தள்ளுகிற கொடியவனாக இருந்திருப்பின், அந்த ஆலய அதிகாரிகளை அழித்தொழிக்க எத்தனை நாழி தேவைப்பட்டிருக்கும்? நொடிப்பொழுதில் அப்படிச் செய்திருக்கவியலாதா என்ன? ஆனால்? சுந்தரபாண்டியன் அவர்களிடம் மூர்க்கம் காட்டவில்லை. அமைதியான அணுகுமுறைகளையே கையாண்டு பேச்சுவார்த்தை நடத்தினான்.

எவ்வளவு நாடகள் தெரியுமா? இரண்டாண்டுக் காலம்! அதுவரை சுந்தரன் வழங்கிய பொன்மணிக் குவியலை ஆலய அதிகாரிகள் தொடவே இல்லை. அவை அப்படியே அரங்கன் சந்நதி முன் குவிந்து கிடந்தன.
பாண்டியன் படையெடுப்பு முடிந்து, அவன் மதுரை திரும்பும் வேளை வந்துவிட்டது. அவன் ஆயிரத்தளி அரண்மனையில் (கும்பகோணம் அருகில் உள்ள பழையாறையில்) அமர்ந்து வீராபிஷேகம் செய்து, தன் முழுமையான சோழ தேச வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து, தில்லையிலும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் திருப்பணிகள் கூட நிகழ்த்தி முடித்து விட்டான். அவ்வளவு ஏன், சோழ, பாண்டிய எல்லையில் உள்ள பொன்னமராவதியில், தோற்ற சோழ மன்னன் தன் மகனுடன் சென்று பாண்டியனைப் பணிந்தபின் அவர்களை மன்னித்து, மீண்டும் சோழநாட்டு ஆட்சிப் பொறுப்பை அவர்களுக்கே வழங்கியும் விட்டான்.

இன்னமும் திருவரங்க ஆலய அதிகாரிகள் நிலையிலிருந்து மாறவில்லை என்பதை அறிந்த சுந்தரபாண்டியன், அவர்களின் நேர்மைத் திறத்தை, நெஞ்சுறுதியைப் பாராட்டினான். ‘சரி, என் உருவச் சிலையை அரங்கன் சந்நதியில் வைக்க வேண்டாம். நான் அதை வற்புறுத்த விரும்பவில்லை. நானளித்த பொற்குவியலை வைத்து, அரங்கன் ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவாவது சம்மதிப்பீர்களா?’ என்று கேட்டு, ஓலை அனுப்பினான்.
அரங்கன் ஆலய அதிகாரிகள் இதற்கு முழு இசைவை மகிழ்வுடன் தெரிவித்தனர்.

சுந்தரபாண்டியன், சிறந்த பொன்வினைஞர்களை அனுப்பி, அரங்கன் திருவுருவையும் தேவியர் திருவுருவங்களையும் பொன்னால் செய்தளித்தான். அத்தெய்வத் திருமேனிகளை வைரங்களாலும் நவமணியாரங்களாலும் அலங்கரிக்கச் செய்தான். அரங்கனின் ஆலய விமானம் முழுவதும் பொன் வேயப்பட்டது. முழு ஆலயமும் கோபுரங்களும் மண்டபங்களும் செப்பனிடப்பட்டன. இரண்டாம் திருச்சுற்றின் கிழக்குச் சுவரில் இருபுறமும் தன் சோழதேச வெற்றியின் நினைவாக, இணை கயல் சின்னங்களை (இரட்டை மீன்கள்) பொறிக்கச் செய்தான். ‘ஹேமாச்சாதன ராஜா’ என, பாண்டியன் விருது ஒன்றும் பொறிக்கப்பெற்றது. ‘பொன் வேய்ந்த பெருமாள்’ எனப் புலவரெல்லாம் அவனைப் போற்றிச் சிறப்பித்தனர்.
அருமையான குடமுழுக்கு விழாவை நிகழ்த்தி, அரங்கன் ஆசிபெற்றபின், அமைதியாக மதுரை திரும்பினான் சுந்தரபாண்டியன். இவனுடைய இத்திருப்பணிகளை புகழ்ந்துரைக்கும் கல்வெட்டுப் பாடல் ஒன்று.

‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்
 கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்
 திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை
அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து
 தோன்றவும்’

-என்று குறிப்பிடுகின்றது.

அறம் தழைக்க, ஆன்மிகம் சிறக்கப் பொன் வேய்ந்த மகிபதி சுந்தரபாண்டியன் ஆற்றிய செயல் மகத்தானது என்பதில் ஐயமில்லை.
                                                                                                                                                                                       

No comments:

Post a Comment